ETV Bharat / state

நடிகர் விமல் நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு வெளியீடு

author img

By

Published : May 20, 2022, 8:47 AM IST

நடிகர் விமல் நடிக்கும் அடுத்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதிய கதைகோணத்தில் விமல்... வெளியான புதிய அறிவிப்பு
புதிய கதைகோணத்தில் விமல்... வெளியான புதிய அறிவிப்பு

சென்னை: ஓடியன் டாக்கீஸ் சார்பாக கே.அண்ணாத்துரை தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் துடிக்கும் கரங்கள். மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, நந்தா பெரியசாமி, வெற்றிவேல் இயக்குநர் வசந்தமணி ஆகிய இயக்குநர்களிடம் பணிபுரிந்தவர். கனவு என்கிற குறும்படத்தை இயக்கியதற்காக கனடா சர்வதேச திரைப்பட விருது பெற்றவர்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் வேலுதாஸ் கூறும்போது, "யூடியூப் சேனல் நடத்தும் நிருபராக விமல் நடித்துள்ளார். அவரது நண்பராக சதீஷ் நடித்துள்ளார். ஒரு நிருபர் தன் வேலையை செய்கிறார். அதனால் அவருக்கு மிகப்பெரிய இடத்தில் இருந்து ஏற்படும் எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகளை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இதுவரை நகரத்து இளைஞனாக அதிகம் நடித்திராத ஒருவர் நடித்தால், இந்த கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால், ஹீரோவாக விமலை தேர்வு செய்தோம். விமல் படப்பிடிப்பில் எங்களுக்கு அருமையாக ஒத்துழைப்பு தந்தார். நடிகர் சுரேஷ் மேனனும் ஒரு ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்பதால், எனக்கு இருக்கும் சுமையை புரிந்துகொண்டு, அதை எளிதாக்கும் விதமாக நடித்து கொடுத்தார்" என்றார்.

மும்பையைச் சேர்ந்த 'இந்தியன் சகீரா' என அழைக்கப்படும் சினேகா குப்தா இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். படத்தின் ஹைலைட்டான அம்சங்களில் ஒன்றாக அந்தப் பாடல் இருக்கும். பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் நிழலாகவே, அவருடன் 23 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவரும், அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

நகரத்து கதை என்பதால் சென்னையிலேயே 45 நாட்கள் மொத்த படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்மி 'யாமிருக்க பயமே' படத்தில் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல இந்தியில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் மூன்று படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்திற்கு பணியாற்றிய லாரன்ஸ் கிஷோர் இந்தப் படத்தின் படத்தொகுப்பை கவனிக்கிறார். சக்ரா படத்திற்கு பணியாற்றிய கண்ணன் இந்தப் படத்தின் கலை வடிவமைப்பை கையாண்டுள்ளார். படத்தில் இடம்பெறும் நான்கு சண்டை காட்சிகளையும் சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க:'நடிகர் விமலிடமிருந்து பணத்தை வாங்கி தாங்க' - கண்ணீர் விட்ட தயாரிப்பாளரின் மகள்; குவியும் புகார்கள்

சென்னை: ஓடியன் டாக்கீஸ் சார்பாக கே.அண்ணாத்துரை தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் துடிக்கும் கரங்கள். மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, நந்தா பெரியசாமி, வெற்றிவேல் இயக்குநர் வசந்தமணி ஆகிய இயக்குநர்களிடம் பணிபுரிந்தவர். கனவு என்கிற குறும்படத்தை இயக்கியதற்காக கனடா சர்வதேச திரைப்பட விருது பெற்றவர்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் வேலுதாஸ் கூறும்போது, "யூடியூப் சேனல் நடத்தும் நிருபராக விமல் நடித்துள்ளார். அவரது நண்பராக சதீஷ் நடித்துள்ளார். ஒரு நிருபர் தன் வேலையை செய்கிறார். அதனால் அவருக்கு மிகப்பெரிய இடத்தில் இருந்து ஏற்படும் எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகளை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இதுவரை நகரத்து இளைஞனாக அதிகம் நடித்திராத ஒருவர் நடித்தால், இந்த கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால், ஹீரோவாக விமலை தேர்வு செய்தோம். விமல் படப்பிடிப்பில் எங்களுக்கு அருமையாக ஒத்துழைப்பு தந்தார். நடிகர் சுரேஷ் மேனனும் ஒரு ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்பதால், எனக்கு இருக்கும் சுமையை புரிந்துகொண்டு, அதை எளிதாக்கும் விதமாக நடித்து கொடுத்தார்" என்றார்.

மும்பையைச் சேர்ந்த 'இந்தியன் சகீரா' என அழைக்கப்படும் சினேகா குப்தா இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். படத்தின் ஹைலைட்டான அம்சங்களில் ஒன்றாக அந்தப் பாடல் இருக்கும். பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் நிழலாகவே, அவருடன் 23 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவரும், அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

நகரத்து கதை என்பதால் சென்னையிலேயே 45 நாட்கள் மொத்த படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்மி 'யாமிருக்க பயமே' படத்தில் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல இந்தியில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் மூன்று படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்திற்கு பணியாற்றிய லாரன்ஸ் கிஷோர் இந்தப் படத்தின் படத்தொகுப்பை கவனிக்கிறார். சக்ரா படத்திற்கு பணியாற்றிய கண்ணன் இந்தப் படத்தின் கலை வடிவமைப்பை கையாண்டுள்ளார். படத்தில் இடம்பெறும் நான்கு சண்டை காட்சிகளையும் சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க:'நடிகர் விமலிடமிருந்து பணத்தை வாங்கி தாங்க' - கண்ணீர் விட்ட தயாரிப்பாளரின் மகள்; குவியும் புகார்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.