ETV Bharat / state

விவசாயிகள் பாரத் பந்த் ஆதரவாகத் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் தாம்பரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Dec 8, 2020, 5:08 PM IST

Protest
Protest

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று(டிசம்பர்-8) பாரத் பந்த் அழைப்பு விடுத்து நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அதன் ஒரு பகுதியாகத் தாம்பரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் ஜி.பி.சாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், வேளான் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று(டிசம்பர்-8) பாரத் பந்த் அழைப்பு விடுத்து நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அதன் ஒரு பகுதியாகத் தாம்பரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் ஜி.பி.சாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், வேளான் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.