ETV Bharat / state

சொத்து தகராறு: தாயை மகனே கத்தியால் குத்திய அவலம்!

author img

By

Published : Sep 5, 2020, 6:47 PM IST

சென்னை: சொத்து பிரச்னையில் தாயை கத்தியால் குத்திய சம்பவத்தில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாயும் மகனும்
தாயும் மகனும்

சென்னை அடுத்த வண்டலூர் வேம்புலியம்மான் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆலையம்மாள் (72). இதய நோயாளியான இவரின் கணவர் 18 ஆண்டுகளுக்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு பூபதி, பாபு, ஹாரிகிருஷ்ணன், தண்டபாணி என 4 மகன்களும், அமுதா என்கிற ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர்களின் குடும்ப சொத்து காரணமாக ஆலையம்மாளுடன் முதல் மகன் பூபதிக்கு கருத்து முரண்பாடு இருந்துள்ளது.

மூத்த மகனான பூபதி கூலி வேலை செய்து வருகிறார். ஆலயம்மா பெயரில் இருக்கும் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி பூபதி அடிக்கடி பிரச்னை செய்துவந்தார். இந்நிலையில், நேற்று (செப்.,5) ஆலையம்மாளின் வீட்டுக்கு வந்த பூபதி தனது தாயை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவரது முகம், கழுத்து, மார்பு, முதுகு, கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. பின்னர், ஆலையம்மாளின் தலை முடியை பிடித்து தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலின் போது ஆலையம்மாளின் அலறலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வண்டலூர் ஓட்டேரி காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பூபதியை கைது செய்தனர். தற்போது ஆலையம்மாள் பலத்த கத்திக் குத்து காயங்களுடம் தனியார் மருத்துவமனையில் சிக்கிசைப் பெற்று வருகிறார்.

வெளியான சிசிடிவி காட்சிகள்

ஆலையம்மாளை அவரது மகன் கத்தியல் குத்தும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மதுபோதையில் தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன் கைது!

சென்னை அடுத்த வண்டலூர் வேம்புலியம்மான் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆலையம்மாள் (72). இதய நோயாளியான இவரின் கணவர் 18 ஆண்டுகளுக்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு பூபதி, பாபு, ஹாரிகிருஷ்ணன், தண்டபாணி என 4 மகன்களும், அமுதா என்கிற ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர்களின் குடும்ப சொத்து காரணமாக ஆலையம்மாளுடன் முதல் மகன் பூபதிக்கு கருத்து முரண்பாடு இருந்துள்ளது.

மூத்த மகனான பூபதி கூலி வேலை செய்து வருகிறார். ஆலயம்மா பெயரில் இருக்கும் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி பூபதி அடிக்கடி பிரச்னை செய்துவந்தார். இந்நிலையில், நேற்று (செப்.,5) ஆலையம்மாளின் வீட்டுக்கு வந்த பூபதி தனது தாயை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவரது முகம், கழுத்து, மார்பு, முதுகு, கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. பின்னர், ஆலையம்மாளின் தலை முடியை பிடித்து தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலின் போது ஆலையம்மாளின் அலறலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வண்டலூர் ஓட்டேரி காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பூபதியை கைது செய்தனர். தற்போது ஆலையம்மாள் பலத்த கத்திக் குத்து காயங்களுடம் தனியார் மருத்துவமனையில் சிக்கிசைப் பெற்று வருகிறார்.

வெளியான சிசிடிவி காட்சிகள்

ஆலையம்மாளை அவரது மகன் கத்தியல் குத்தும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மதுபோதையில் தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.