ETV Bharat / state

லோன் செயலி மூலம் பணம் பறிப்பு - தொடரும் சைபர் குற்றங்கள்!

author img

By

Published : Feb 13, 2022, 2:44 PM IST

பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்படும் லோன் செயலிகளுக்கு எதிராகப் பெறப்பட்டுவரும் தொடர் புகார்களின் அடிப்படையில், இந்த லோன் செயலிகளுக்குப் பின்னால் சீன கும்பலின் செயல்பாடு உள்ளதா என்ற கோணத்தில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

OB Cash Loan செயலி
OB Cash Loan செயலி

சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிரண் குமார். இவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிவரும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவசரமாகப் பணம் தேவைப்பட்டதால் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்த OB Cash Loan என்ற லோன் செயலி மூலம் ஏழாயிரம் ரூபாய் கடன் கோரி விண்ணப்பித்தார்.

அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு ஏழாயிரம் ரூபாய் கடன் அளிக்கச் செயலி மூலம் ஒப்புதல் கிடைத்து செயலாக்கக் கட்டணம் போக நான்காயிரத்து 60 ரூபாய் மட்டுமே அவருக்கு அளிக்கப்பட்டது.

மேலும், அடுத்த ஆறு நாள்களுக்குள் கடன் பெற்ற ஏழாயிரம் ரூபாயைத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் செயலி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தொலைபேசி வாயிலாகத் தொடர்ச்சியாக கிரண் குமாரைத் தொடர்புகொண்ட லோன் செயலி நிறுவனத்தார், கடனாகப் பெற்ற ஏழாயிரம் ரூபாய் பணத்தை உடனடியாகத் திருப்பிச் செலுத்துமாறு வற்புறுத்தியும், மிரட்டியும் வந்ததாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கிரண் குமாரின் குடும்பத்தார், நண்பர்களுக்கு கிரண் குமார் ஒரு கடனாளி, மோசடி நபர் என்பதுபோல் பல குறுஞ்செய்திகள் லோன் செயலி நிறுவனத்தார் மூலம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடன் செயலி மூலம் குடும்பத்தாருக்கு குறுஞ்செய்தி!

அதனைத் தொடர்ந்து கிரண் குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் இச்சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தப் புகார் மட்டுமல்லாமல் சமீப நாள்களாக லோன் செயல்களுக்கு எதிராகத் தொடர்ந்து பல புகார்கள் சைபர் கிரைம் பிரிவில் அளிக்கப்பட்டுவரும் நிலையில், ஆர்.பி.ஐ.இல் பதிவுசெய்யாமல் முறையற்ற வகையில் இயங்கிவரும் லோன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

பதிவுசெய்யப்படாத OB Cash Loan செயலி

OB Cash Loan செயலி
OB Cash Loan செயலி

கிரண் குமாரின் புகார் தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குறிப்பிட்ட OB Cash Loan என்ற செயலி Laisa Tech Pvt Ltd நிறுவனத்தின்கீழ் இயங்கிவருவது தெரியவந்துள்ளது. மேலும் மத்திய தொழில் நிறுவனங்களின் அமைச்சகத்தின்கீழ் இந்த நிறுவனம் பதிவுசெய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த லோன் செயலி நிறுவனத்தின் பின்னால் சீன கும்பல் செயல்பாடு உள்ளதா? என்ற கோணத்தில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஏற்கனவே இதுபோன்ற லோன் செயலி மோசடி தொடர்பாகப் பெறப்பட்ட புகாரில் சிபிசிஐடி காவல் துறை விசாரணை நடத்தி இரு சீன நபர்கள் உள்பட நான்கு பேரைக் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூட்கேஸில் பெண் சடலம் - ஒருவர் கைது

சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிரண் குமார். இவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிவரும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவசரமாகப் பணம் தேவைப்பட்டதால் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்த OB Cash Loan என்ற லோன் செயலி மூலம் ஏழாயிரம் ரூபாய் கடன் கோரி விண்ணப்பித்தார்.

அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு ஏழாயிரம் ரூபாய் கடன் அளிக்கச் செயலி மூலம் ஒப்புதல் கிடைத்து செயலாக்கக் கட்டணம் போக நான்காயிரத்து 60 ரூபாய் மட்டுமே அவருக்கு அளிக்கப்பட்டது.

மேலும், அடுத்த ஆறு நாள்களுக்குள் கடன் பெற்ற ஏழாயிரம் ரூபாயைத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் செயலி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தொலைபேசி வாயிலாகத் தொடர்ச்சியாக கிரண் குமாரைத் தொடர்புகொண்ட லோன் செயலி நிறுவனத்தார், கடனாகப் பெற்ற ஏழாயிரம் ரூபாய் பணத்தை உடனடியாகத் திருப்பிச் செலுத்துமாறு வற்புறுத்தியும், மிரட்டியும் வந்ததாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கிரண் குமாரின் குடும்பத்தார், நண்பர்களுக்கு கிரண் குமார் ஒரு கடனாளி, மோசடி நபர் என்பதுபோல் பல குறுஞ்செய்திகள் லோன் செயலி நிறுவனத்தார் மூலம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடன் செயலி மூலம் குடும்பத்தாருக்கு குறுஞ்செய்தி!

அதனைத் தொடர்ந்து கிரண் குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் இச்சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தப் புகார் மட்டுமல்லாமல் சமீப நாள்களாக லோன் செயல்களுக்கு எதிராகத் தொடர்ந்து பல புகார்கள் சைபர் கிரைம் பிரிவில் அளிக்கப்பட்டுவரும் நிலையில், ஆர்.பி.ஐ.இல் பதிவுசெய்யாமல் முறையற்ற வகையில் இயங்கிவரும் லோன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

பதிவுசெய்யப்படாத OB Cash Loan செயலி

OB Cash Loan செயலி
OB Cash Loan செயலி

கிரண் குமாரின் புகார் தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குறிப்பிட்ட OB Cash Loan என்ற செயலி Laisa Tech Pvt Ltd நிறுவனத்தின்கீழ் இயங்கிவருவது தெரியவந்துள்ளது. மேலும் மத்திய தொழில் நிறுவனங்களின் அமைச்சகத்தின்கீழ் இந்த நிறுவனம் பதிவுசெய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த லோன் செயலி நிறுவனத்தின் பின்னால் சீன கும்பல் செயல்பாடு உள்ளதா? என்ற கோணத்தில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஏற்கனவே இதுபோன்ற லோன் செயலி மோசடி தொடர்பாகப் பெறப்பட்ட புகாரில் சிபிசிஐடி காவல் துறை விசாரணை நடத்தி இரு சீன நபர்கள் உள்பட நான்கு பேரைக் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூட்கேஸில் பெண் சடலம் - ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.