ETV Bharat / state

5 நாட்கள் சூறாவளி பயணம்.. அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிக்கை.. இளைஞர் அணியினர் உற்சாகம்!

Minister Udhyanidhi Stalin: கடந்த 5 நாட்கள் 16 கழக மாவட்டங்களில் நடைபெற்ற 'இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்' குறித்த அனுபவத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 2:10 PM IST

Minister Udhyanidhi Stalin
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: கடந்த "5 நாட்களில் 16 கழக மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்" என்கிறார்கள். நான் சூறாவளியாகச் சுற்றிச் சுழன்றேன் என்பதைவிட குறுகிய கால இடைவெளியில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை மாவட்ட வாரியாக அணி திரட்டும் வல்லமை பெற்றது இந்தக் கழகம் என்பதுதான் நமக்கான பெருமை.

சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக 'இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்' நடத்தலாம் எனத் திட்டமிட்டோம். முதல் கூட்டத்தைக் கடந்த 19 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்தினோம். அங்கு கூடிய இளைஞர்களின் எழுச்சிதான், அனைத்து மாவட்டங்களிலும் 'செயல்வீரர்கள்' கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற உற்சாகத்தை எங்களுக்குத் தந்தது.

திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக 25 ஆம் தேதி வருவதாக ஒப்புக்கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்தே அடுத்தடுத்த செயல்வீரர் கூட்டங்களை நடத்துவோம் என முடிவு செய்து மாவட்டக் கழகச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஆய்வுக் கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்கினோம்.

  • 5 நாட்கள், 16 கழக மாவட்டங்கள், பல்லாயிரக்கணக்கான @dmk_youthwing தம்பிகள் என இளைஞர் அணியின் 2-ஆவது மாநில மாநாட்டுக்கான செயல்வீரர் கூட்டங்கள் எழுச்சியும் - உற்சாகத்துடனும் நடத்தப்பட்டுள்ளன. அடுத்தடுத்தக் கூட்டங்கள், கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின்… pic.twitter.com/4ejEqHMShE

    — Udhay (@Udhaystalin) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

20 ஆம் தேதிதான் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களைக் கூட்டி மிகப்பெரிய உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தியுள்ளோம். மீண்டும் செயல்வீரர்கள் கூட்டம் என்றால், இளைஞர்கள் திரளாகக் கலந்துகொள்ள வருவார்களா என்ற சந்தேகம் எங்களுக்குள் இருந்தது. ஆனால், அந்தச் சந்தேகங்களை எல்லாம் பொய்யாக்கும் விதமாக அமைந்திருந்தது தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம்.

திலகர் திடல் என்பது பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் உள்படப் பலர் கூட்டம் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். அந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதன்முதலாக நான் கலந்துகொள்வதும், அது இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டமாக அமைந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. திடல் முழுவதும் இளைஞர்களின் தலைகளாகக் காட்சியளிக்கும் வகையில் கட்டுக்கடங்கா கூட்டம்.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு அச்சாரமிடும் வகையில், சேலம் மாநாடு அமைந்திட வேண்டும் என்று உரையாற்றினேன். பின் தஞ்சாவூர் செயல்வீரர் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருவாரூர் கூட்டம். முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி நம் கழகத் தலைவர் திறந்துவைத்த 'கலைஞர் கோட்டம்' அருகே கூட்டம் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் இடமில்லாமல் சுற்றிலும் இளைஞர்கள் கூடி நின்றனர். நாம் பேச பேச அவர்களிடம் அவ்வளவு ஆரவாரம்.

இவர்களில் பல இளைஞர்களை நாங்கள் கழகக் கூட்டங்களில் பார்த்ததில்லை. நீங்க வர்றீங்கனு ஆர்வத்தோட வந்திருக்காங்க என்றனர் நம் நிர்வாகிகள். கழகத் தலைவர் அவர்களின் தலைமையிலான அரசுக்கும், மாணவர்களை - இளைஞர்களை மையமாக வைத்து, அது செயல்படுத்தும் நலத்திட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்பே இந்த கூட்டம் என்பதை உணர முடிந்தது.

26 ஆம் தேதி காலை 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ், முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நாகப்பட்டின மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக விரிவாக நடைபெற்றது இந்த ஆய்வுக் கூட்டம்.

முதலமைச்சர் மக்களின் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு என்றால், அது மிகையல்ல. அதனைத் மாலையில், நாகப்பட்டினம் நகரக் கழக முன்னாள் செயலாளர் சமீபத்தில் மறைந்த அண்ணன் 'போலீஸ்' பன்னீர் அவர்களின் இல்லம் சென்று அவரின் திருஉருவப் படத்துக்கு மரியாதை செய்தோம்.

நாகையில் கழகம் வளர்த்த அவரின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதால், அவரின் இல்லத்துக்கு என்னை அழைத்துச் செல்லவேண்டும் என்று சென்னையில் இருந்து கிளம்பும் முன்பே மாவட்டக் கழகச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அதேபோல் நாகையின் முன்னாள் நகரக் கழக செயலாளர் மறைந்த வீராசாமி அவர்களின் திருஉருவப் படத்துக்கும் மரியாதை செய்தோம்.

அண்ணன் பன்னீர், வீராசாமி போன்ற மூத்த முன்னோடிகளின் உழைப்பில் இருந்து இளைஞர் அணியினர் நாம் பாடம் கற்க வேண்டும். அடுத்து நாகை அவுரித் திடலில் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம். கழகத் தலைவர் அவர்கள் அரசுப் பணிகளுக்காக 3 நாட்களாக நாகையில் இருந்தார். அதற்கான முன்னேற்பாடு, வரவேற்பு எனப் பல பணிகளுக்கு நடுவிலும் செயல்வீரர் கூட்டத்தை மாநாடு போல் நடத்திக்காட்டினார் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் கௌதமன்.

நாகப்பட்டினம் செயல்வீரர் கூட்டத்தை முடித்துக்கொண்டு மயிலாடுதுறை புறப்பட்டோம். அங்கு சீனிவாசபுரத்தில் மயிலாடுதுறை - காரைக்கால் மாவட்டங்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம். "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக அதன்பிறகு அமைதி காப்பது ஏன்?.

நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆளுநர் கருத்து கூறும்போதெல்லாம் அதற்கு ஏதாவது கண்டனம் தெரிவித்துள்ளார்களா?. சமீபத்தில், மாநாடு என்ற பெயரில் ஆடலும் பாடலும் கலைநிகழ்ச்சி நடத்தினார்களே, அதிலாவது நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தினார்களா" என்று அதிமுகவின் நாடக அரசியல் குறித்துக் கேள்வி எழுப்பினேன்.

26 ஆம் தேதி தஞ்சாவூரில் தங்கிவிட்டு, 27ஆம் தேதி காலை ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்த நிகழ்ச்சிகளுக்காக பட்டுக்கோட்டை புறப்பட்டோம். வர்த்தகர் அணி துணைத் தலைவர் அண்ணன் பழஞ்சூர் செல்வம் அவர்களின் மகள் திருமண விழா, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பரமேஸ்வரன் அவர்களின் இல்ல திருமண விழா, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ரமேஷ் அவர்களின் புதுமனைப் புகுவிழா, மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குதல் எனப் பட்டுக்கோட்டையில் காலை முதல் மாலை வரை தொடர் நிகழ்ச்சிகள்.

பட்டுக்கோட்டை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து புதுக்கோட்டை புறப்பட்டோம். புதுக்கோட்டை மாவட்டக்கழக முன்னாள் செயலாளர் மறைந்த சிதம்பரம் அவர்களின் மனைவியார் ராஜேஸ்வரி அம்மையார் சமீபத்தில் மறைவுற்றார். அவரின் இல்லம் சென்று ராஜேஸ்வரி அம்மையாரின் திருஉருவப் படத்துக்கு மரியாதை செய்தோம்.

அங்கிருந்து நேராகப் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கான செயல்வீரர் கூட்டம். "இனக் கலவரத்தால் பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்லாத பிரதமர் மோடி, அதுகுறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க அவரை நாடாளுமன்றம் வரவைப்பதே பெரும்பாடாக உள்ளதையும், நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு அஞ்சும் ஒரு பிரதமரை இப்போதுதான் நாடு பார்க்கிறது என்பதையும் எடுத்துக்கூறி, அதற்கு ஒரே தீர்வு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம். அதற்கு உறுதியேற்கும் நாளாக நம் மாநாடு அமையட்டும்" என்று புதுக்கோட்டையில் உரையாற்றினேன்.

அதைத் தொடர்ந்து திருச்சிக்கு விரைந்தோம். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்துக்கான செயல்வீரர் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரங்கத்தின் உள்ளேயும், வெளியேயும் இளைஞர்கள் நிரம்பி வழிந்தனர். 'மாநாட்டு மன்னன்' என்று போற்றப்படும் அண்ணன் நேரு அவர்கள்தான் சேலம் இளைஞர் அணி மாநாட்டுக்கும் பொறுப்பாளர். "மாநாட்டுக்கான நிதியை நான் இப்போது அறிவிக்கப்போவதில்லை. மாநாட்டு பந்தலிலேயே அதை அறிவிப்பேன்" என்றார் நேரு அண்ணன்.

"நேரு அண்ணனின் ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்து மாநாடுகளுமே வெற்றிதான். அந்த வகையில், சேலம் மாநாடும் மிகப்பெரிய வெற்றிபெறும்" என்ற என் நம்பிகையை இளைஞர்களிடம் எடுத்துக்கூறி, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள இந்த மாநாட்டை வெற்றிபெற வைப்பது செயல்வீரர்களான நம் இளைஞர்கள் ஒவ்வொருவர் கையிலும் தான் உள்ளது" என்று உரையாற்றினேன்.

செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமாரை சந்தித்து நலம் விசாரித்தோம். 'எந்த உதவி தேவை என்றாலும், அழைக்கவும்' என்று நம்பிக்கை தெரிவித்தோம். அன்று இரவு, திருச்சியில் தங்கிவிட்டு மறுநாள் 28 ஆம் தேதி, அன்பில் பொய்யாமொழி மாமா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.

கழகத் தலைவர் அவர்கள் இளைஞர் அணி செயலாளராக இருந்தபோது துணைச் செயலாளராக இருந்து கழகத்தை வளர்த்தெடுத்த அவரின் பணிகளை நினைவு கூர்ந்தோம். அதே வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சேலம் இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான கவுன்ட் டவுண் டைமரை தொடங்கி வைத்தோம். பிறகு, அங்கிருந்து அரியலூர் புறப்பட்டோம். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றோம்.

அதைத் தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அதன்பிறகு மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் அரியலூர் - செந்துறை இடையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கும் செய்யும் பணிகளை ஆய்வுசெய்து தரமான சாலை அமைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினோம்.

அங்கிருந்து பெரம்பலூர் செல்லும் வழியெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று வரவேற்றனர். ஆ.ராசா அண்ணன் அவர்களின் அலுவலகத்துக்குச் செல்வதாகத் திட்டம். ஆனால், அலுவலகத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு மக்கள் வெள்ளம். அந்த வெயில் நேரத்திலும் என்னைப் பார்த்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று நின்றார்கள். அவர்கள் எவரும் அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல என்பது தெரிந்தது.

மதிய உணவு உண்பதற்கு முன்பாக 9 ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி என்னை வந்து சந்தித்தார். அவர் அரியலூர் மாவட்டம், திருமானூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மூர்த்தியின் அண்ணன் முரளியின் மகள். கழக மேடைகளில் பேசி வருபவர். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சமீபத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் 'தமிழ் திரையுலகில் கலைஞரின் எழுதுகோல்' என்ற தலைப்பில் உரையாற்றி 2வது பரிசாக 7,000 ரூபாய் வென்றிருக்கிறார். அந்தத் தொகையை இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான நிதியாக அளிக்க வந்திருந்தார்.

எளிய குடும்பத்துப் பிள்ளைகள் கழகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், கலைஞரின் நினைவைப் போற்றும் விதமாகத் தொடர்ந்து இயங்குவதையும் நினைக்கும்போது நாம் இந்த இயக்கத்துக்காகவும் மக்களுக்காகவும் மென்மேலும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தங்கை தர்ஷினியுடன் மதிய உணவு அருந்தினோம்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்வதற்காக அண்ணன் ஆ.ராசா அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தோம். காத்திருந்த கூட்டம் கலையாமல் அப்படியே நின்று என்னை வழியனுப்பி வைத்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு, அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களுக்கான இளைஞர் அணி செயல் வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

இளைஞர் அணி பணிகளை ஒருங்கிணைக்க தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் மண்ணின் மைந்தன் அண்ணன் ஆ.ராசாவின் கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் எடுத்துக்கூறி உரையாற்றினேன். "35 வயதில் ஒன்றிய அமைச்சர், மாவட்டக் கழகச் செயலாளர் என்பது அண்ணனின் உழைப்பும் மீதும் கொள்கைப் பற்றின் மீதும் கலைஞர் வைத்திருந்த நம்பிக்கைக்குச் சான்று.

கழகத்தின் மீது அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே தொடரப்பட்ட 2ஜி வழக்கில் ஆ.ராசா ஒரு வாய்தாகூட வாங்காமல் அவரே வாதாடி வென்றார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 125 வாய்தா வாங்கியும் தோற்றார்" என்றேன். அதை இளைஞர்கள் கரவொலி எழுப்பி ஆமோதித்தனர். இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, இரவு 9 மணிக்கு மேல் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம்.

முதலில் பெரம்பலூரில் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளை ஆய்வு செய்தோம். மனுவில் உள்ளபடி உணவு வழங்கப்படுகிறதா, சமையலறை சுகாதாரமாகப் பராமரிக்கப்படுகிறதா, கழிவறைகளை முறையாகப் பராமரிக்கிறார்களா என்று ஆய்வு செய்தோம். அங்கிருந்த குறைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைச் சரிசெய்து எங்களுக்கு அறிக்கையாக அளிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டோம்.

பள்ளி மாணவர்கள் கேட்டுக்கொண்டபடி அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் உடனடியாக வழங்கி மகிழ்ந்தோம். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வின்போது, நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் வைத்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். "முதலமைச்சர் கல்விக்கும் சுகாதாரத்துக்கும்தான் அதிக முக்கியத்தவம் கொடுத்து திட்டங்களைத் தீட்டி வருகிறார். அவற்றை முறையாகப் பயன்படுத்தி மக்களுக்குப் பயனுள்ள வகையில் மருத்துவச்சேவை கிடைக்க உதவ வேண்டும்" என்று சுகாதாரத்துறையினரை அறிவுறுத்தினோம்.

அன்றிரவு பெரம்பலூரிலேயே தங்கிவிட்டு, மறுநாள் காலை கடலூர் நோக்கி பயணமானோம். வழியில், பெரம்பலூர் எறையூர் சிப்காட்டில் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்ட காலணித் தொழிற்சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தோம். இந்தத் தொழிற்சாலை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்பது நிச்சயம்.

கடலூர் மாவட்ட எல்லையில் தொழுதூரில் அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் கழகத்தினர் வரவேற்பு அளித்தனர். கழுதூரில் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கான இளைஞர் அணி செயல்வீரர் கூட்டம். உண்மையிலேயே அதை மாநாடு என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். அந்தளவுக்கு இளைஞர்கள் திரண்டிருந்தனர். கூட்டம் நடைபெறுவது கடலூர் மேற்கு மாவட்ட எல்லையான கழுதூர்.

அங்கு நடைபெறும் கூட்டத்திற்கு கடலூரின் கிழக்கு மாவட்ட எல்லையில் இருந்தெல்லாம் இளைஞர்கள் திரளாகக் கலந்துகொண்டிருந்தது என்னை உற்சாகம் கொள்ள வைத்தது. வெவ்வேறு மனநிலை, வெவ்வேறு பின்னணியில் இருந்து அங்குக் கூடியுள்ள அந்த இளைஞர்கள் அனைவரும் கழகம், கழகத் தலைவர் என்ற ஒற்றை நம்பிக்கையில் கூடியுள்ளதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

நம்மீது இவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலும், இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும் நம் கழகப் பணியை, மக்கள் பணியை அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தளராமல் உழைக்க வேண்டும் என்ற உறுதி எனக்குள் ஏற்பட்டது. 'இளைஞர் அணியில் இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சராக உள்ள எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் கணேசன் இருவரும்தான் இம்மாவட்டத்தின் முதன்மையான செயல்வீரர்கள். அவர்களின் வழியில் உழைக்க உறுதியேற்போம்" என்று உரையாற்றி அனைவரையும் மாநாட்டுக்கு வர வேண்டுகோள் விடுத்தேன்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி வேப்பூரில் அமைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கழகக் கொடியேற்றினேன். அதைத் தொடர்ந்து விருத்தாசலம், வடலூரில் கழகத்தினர் அளித்த வரவேற்பில் மிதந்தபடியே கடலூர் வந்தடைந்தோம். முன்னதாகக் கடலூர் பச்சையாங்குப்பம் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.76 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை ஆய்வு செய்தோம்.

மாலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். பள்ளி, கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து தொடர் நடவடிக்கைகள் எடுத்து அது குறித்த தகவல்களை எனக்கு அனுப்பும் படியும் மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக்கொண்டேன். பின் அமைச்சர்கள் எம்.ஆர்.கே, கணேசன் இருவரும் வழியனுப்பி வைக்க நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தோம்.

இந்த செயல்வீரர் கூட்டங்களை ஒருங்கிணைத்து, மாநாட்டுக்கு நிதியளித்த அமைச்சர்கள் நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன், மாவட்டக் கழக செயலாளர்கள் அண்ணன்கள் சுந்தர், எஸ்.கல்யாணசுந்தரம், துரை.சந்திரசேகரன், அண்ணாதுரை, பூண்டி கலைவாணன், காடுவெட்டி தியாகராஜன், கௌதமன், நிவேதா முருகன், காரைக்கால் நாஜிம், செல்லபாண்டியன்.

குன்னம் ராஜேந்திரன், வைரமணி ஆகியோருக்கும், அரசு ஆய்வுக் கூட்டங்களை ஒருங்கிணைத்த சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் மருத்துவர் தாரேஷ் அகமது ஐஏஎஸ் அவர்களுக்கும் நன்றி. இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் இளையராஜா, அப்துல் மாலிக், ஆனந்தகுமார் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பட்டாசு வெடிப்பதையும், பொன்னாடை, பூங்கொத்து கொடுப்பதையும் தவிர்க்குமாறு பலமுறை அறிவுறுத்தியிருக்கிறேன். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். அதற்கு பதிலாக புத்தகங்கள், கழக வேட்டி - துண்டுகள் போன்றவற்றை தாருங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் மாநில மாநாட்டுக்கு, இளைஞர் அணிக்கு வளர்ச்சி நிதியாகவும் தரலாம்.

இந்த பயணத்தில் பார்த்த மகிழ்ச்சிக் கடலில் திளைத்த, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டு முதலமைச்சர் அவர்களுக்கும் திராவிட மாடல் அரசுக்கும் நன்றி சொன்ன ஏழை எளிய மக்கள், கோரிக்கை மனுக்களைக் கையில் சுமந்தபடி காத்திருந்த பெண்கள் எனக் கலவையான முகங்கள் என் முன் வந்து போகின்றன. லட்சக்கணக்கான கழக இளைஞர்களை ஒருங்கிணைக்கக்கூடிய நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

மக்களின் தேவை குறித்து இன்னும் கற்க வேண்டும், அவர்களுக்குப் பயன்படும்படி இன்னும் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் ஏற்படுகிறது. இன்று ஒரு நாள் பயணமாக திருவள்ளூர் மாவட்டம் செல்கிறேன். அங்கும் காலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம். மாலையில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

"மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்" என்ற அண்ணாவின் வாக்கின்படி, முத்தமிழறிஞர் வழியில், கழகத் தலைவர் வழிகாட்டலில் அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் ஆச்சரியம் இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கடந்த "5 நாட்களில் 16 கழக மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்" என்கிறார்கள். நான் சூறாவளியாகச் சுற்றிச் சுழன்றேன் என்பதைவிட குறுகிய கால இடைவெளியில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை மாவட்ட வாரியாக அணி திரட்டும் வல்லமை பெற்றது இந்தக் கழகம் என்பதுதான் நமக்கான பெருமை.

சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக 'இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்' நடத்தலாம் எனத் திட்டமிட்டோம். முதல் கூட்டத்தைக் கடந்த 19 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்தினோம். அங்கு கூடிய இளைஞர்களின் எழுச்சிதான், அனைத்து மாவட்டங்களிலும் 'செயல்வீரர்கள்' கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற உற்சாகத்தை எங்களுக்குத் தந்தது.

திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக 25 ஆம் தேதி வருவதாக ஒப்புக்கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்தே அடுத்தடுத்த செயல்வீரர் கூட்டங்களை நடத்துவோம் என முடிவு செய்து மாவட்டக் கழகச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஆய்வுக் கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்கினோம்.

  • 5 நாட்கள், 16 கழக மாவட்டங்கள், பல்லாயிரக்கணக்கான @dmk_youthwing தம்பிகள் என இளைஞர் அணியின் 2-ஆவது மாநில மாநாட்டுக்கான செயல்வீரர் கூட்டங்கள் எழுச்சியும் - உற்சாகத்துடனும் நடத்தப்பட்டுள்ளன. அடுத்தடுத்தக் கூட்டங்கள், கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின்… pic.twitter.com/4ejEqHMShE

    — Udhay (@Udhaystalin) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

20 ஆம் தேதிதான் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களைக் கூட்டி மிகப்பெரிய உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தியுள்ளோம். மீண்டும் செயல்வீரர்கள் கூட்டம் என்றால், இளைஞர்கள் திரளாகக் கலந்துகொள்ள வருவார்களா என்ற சந்தேகம் எங்களுக்குள் இருந்தது. ஆனால், அந்தச் சந்தேகங்களை எல்லாம் பொய்யாக்கும் விதமாக அமைந்திருந்தது தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம்.

திலகர் திடல் என்பது பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் உள்படப் பலர் கூட்டம் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். அந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதன்முதலாக நான் கலந்துகொள்வதும், அது இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டமாக அமைந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. திடல் முழுவதும் இளைஞர்களின் தலைகளாகக் காட்சியளிக்கும் வகையில் கட்டுக்கடங்கா கூட்டம்.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு அச்சாரமிடும் வகையில், சேலம் மாநாடு அமைந்திட வேண்டும் என்று உரையாற்றினேன். பின் தஞ்சாவூர் செயல்வீரர் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருவாரூர் கூட்டம். முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி நம் கழகத் தலைவர் திறந்துவைத்த 'கலைஞர் கோட்டம்' அருகே கூட்டம் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் இடமில்லாமல் சுற்றிலும் இளைஞர்கள் கூடி நின்றனர். நாம் பேச பேச அவர்களிடம் அவ்வளவு ஆரவாரம்.

இவர்களில் பல இளைஞர்களை நாங்கள் கழகக் கூட்டங்களில் பார்த்ததில்லை. நீங்க வர்றீங்கனு ஆர்வத்தோட வந்திருக்காங்க என்றனர் நம் நிர்வாகிகள். கழகத் தலைவர் அவர்களின் தலைமையிலான அரசுக்கும், மாணவர்களை - இளைஞர்களை மையமாக வைத்து, அது செயல்படுத்தும் நலத்திட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்பே இந்த கூட்டம் என்பதை உணர முடிந்தது.

26 ஆம் தேதி காலை 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ், முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நாகப்பட்டின மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக விரிவாக நடைபெற்றது இந்த ஆய்வுக் கூட்டம்.

முதலமைச்சர் மக்களின் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு என்றால், அது மிகையல்ல. அதனைத் மாலையில், நாகப்பட்டினம் நகரக் கழக முன்னாள் செயலாளர் சமீபத்தில் மறைந்த அண்ணன் 'போலீஸ்' பன்னீர் அவர்களின் இல்லம் சென்று அவரின் திருஉருவப் படத்துக்கு மரியாதை செய்தோம்.

நாகையில் கழகம் வளர்த்த அவரின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதால், அவரின் இல்லத்துக்கு என்னை அழைத்துச் செல்லவேண்டும் என்று சென்னையில் இருந்து கிளம்பும் முன்பே மாவட்டக் கழகச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அதேபோல் நாகையின் முன்னாள் நகரக் கழக செயலாளர் மறைந்த வீராசாமி அவர்களின் திருஉருவப் படத்துக்கும் மரியாதை செய்தோம்.

அண்ணன் பன்னீர், வீராசாமி போன்ற மூத்த முன்னோடிகளின் உழைப்பில் இருந்து இளைஞர் அணியினர் நாம் பாடம் கற்க வேண்டும். அடுத்து நாகை அவுரித் திடலில் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம். கழகத் தலைவர் அவர்கள் அரசுப் பணிகளுக்காக 3 நாட்களாக நாகையில் இருந்தார். அதற்கான முன்னேற்பாடு, வரவேற்பு எனப் பல பணிகளுக்கு நடுவிலும் செயல்வீரர் கூட்டத்தை மாநாடு போல் நடத்திக்காட்டினார் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் கௌதமன்.

நாகப்பட்டினம் செயல்வீரர் கூட்டத்தை முடித்துக்கொண்டு மயிலாடுதுறை புறப்பட்டோம். அங்கு சீனிவாசபுரத்தில் மயிலாடுதுறை - காரைக்கால் மாவட்டங்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம். "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக அதன்பிறகு அமைதி காப்பது ஏன்?.

நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆளுநர் கருத்து கூறும்போதெல்லாம் அதற்கு ஏதாவது கண்டனம் தெரிவித்துள்ளார்களா?. சமீபத்தில், மாநாடு என்ற பெயரில் ஆடலும் பாடலும் கலைநிகழ்ச்சி நடத்தினார்களே, அதிலாவது நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தினார்களா" என்று அதிமுகவின் நாடக அரசியல் குறித்துக் கேள்வி எழுப்பினேன்.

26 ஆம் தேதி தஞ்சாவூரில் தங்கிவிட்டு, 27ஆம் தேதி காலை ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்த நிகழ்ச்சிகளுக்காக பட்டுக்கோட்டை புறப்பட்டோம். வர்த்தகர் அணி துணைத் தலைவர் அண்ணன் பழஞ்சூர் செல்வம் அவர்களின் மகள் திருமண விழா, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பரமேஸ்வரன் அவர்களின் இல்ல திருமண விழா, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ரமேஷ் அவர்களின் புதுமனைப் புகுவிழா, மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குதல் எனப் பட்டுக்கோட்டையில் காலை முதல் மாலை வரை தொடர் நிகழ்ச்சிகள்.

பட்டுக்கோட்டை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து புதுக்கோட்டை புறப்பட்டோம். புதுக்கோட்டை மாவட்டக்கழக முன்னாள் செயலாளர் மறைந்த சிதம்பரம் அவர்களின் மனைவியார் ராஜேஸ்வரி அம்மையார் சமீபத்தில் மறைவுற்றார். அவரின் இல்லம் சென்று ராஜேஸ்வரி அம்மையாரின் திருஉருவப் படத்துக்கு மரியாதை செய்தோம்.

அங்கிருந்து நேராகப் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கான செயல்வீரர் கூட்டம். "இனக் கலவரத்தால் பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்லாத பிரதமர் மோடி, அதுகுறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க அவரை நாடாளுமன்றம் வரவைப்பதே பெரும்பாடாக உள்ளதையும், நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு அஞ்சும் ஒரு பிரதமரை இப்போதுதான் நாடு பார்க்கிறது என்பதையும் எடுத்துக்கூறி, அதற்கு ஒரே தீர்வு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம். அதற்கு உறுதியேற்கும் நாளாக நம் மாநாடு அமையட்டும்" என்று புதுக்கோட்டையில் உரையாற்றினேன்.

அதைத் தொடர்ந்து திருச்சிக்கு விரைந்தோம். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்துக்கான செயல்வீரர் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரங்கத்தின் உள்ளேயும், வெளியேயும் இளைஞர்கள் நிரம்பி வழிந்தனர். 'மாநாட்டு மன்னன்' என்று போற்றப்படும் அண்ணன் நேரு அவர்கள்தான் சேலம் இளைஞர் அணி மாநாட்டுக்கும் பொறுப்பாளர். "மாநாட்டுக்கான நிதியை நான் இப்போது அறிவிக்கப்போவதில்லை. மாநாட்டு பந்தலிலேயே அதை அறிவிப்பேன்" என்றார் நேரு அண்ணன்.

"நேரு அண்ணனின் ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்து மாநாடுகளுமே வெற்றிதான். அந்த வகையில், சேலம் மாநாடும் மிகப்பெரிய வெற்றிபெறும்" என்ற என் நம்பிகையை இளைஞர்களிடம் எடுத்துக்கூறி, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள இந்த மாநாட்டை வெற்றிபெற வைப்பது செயல்வீரர்களான நம் இளைஞர்கள் ஒவ்வொருவர் கையிலும் தான் உள்ளது" என்று உரையாற்றினேன்.

செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமாரை சந்தித்து நலம் விசாரித்தோம். 'எந்த உதவி தேவை என்றாலும், அழைக்கவும்' என்று நம்பிக்கை தெரிவித்தோம். அன்று இரவு, திருச்சியில் தங்கிவிட்டு மறுநாள் 28 ஆம் தேதி, அன்பில் பொய்யாமொழி மாமா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.

கழகத் தலைவர் அவர்கள் இளைஞர் அணி செயலாளராக இருந்தபோது துணைச் செயலாளராக இருந்து கழகத்தை வளர்த்தெடுத்த அவரின் பணிகளை நினைவு கூர்ந்தோம். அதே வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சேலம் இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான கவுன்ட் டவுண் டைமரை தொடங்கி வைத்தோம். பிறகு, அங்கிருந்து அரியலூர் புறப்பட்டோம். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றோம்.

அதைத் தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அதன்பிறகு மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் அரியலூர் - செந்துறை இடையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கும் செய்யும் பணிகளை ஆய்வுசெய்து தரமான சாலை அமைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினோம்.

அங்கிருந்து பெரம்பலூர் செல்லும் வழியெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று வரவேற்றனர். ஆ.ராசா அண்ணன் அவர்களின் அலுவலகத்துக்குச் செல்வதாகத் திட்டம். ஆனால், அலுவலகத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு மக்கள் வெள்ளம். அந்த வெயில் நேரத்திலும் என்னைப் பார்த்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று நின்றார்கள். அவர்கள் எவரும் அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல என்பது தெரிந்தது.

மதிய உணவு உண்பதற்கு முன்பாக 9 ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி என்னை வந்து சந்தித்தார். அவர் அரியலூர் மாவட்டம், திருமானூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மூர்த்தியின் அண்ணன் முரளியின் மகள். கழக மேடைகளில் பேசி வருபவர். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சமீபத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் 'தமிழ் திரையுலகில் கலைஞரின் எழுதுகோல்' என்ற தலைப்பில் உரையாற்றி 2வது பரிசாக 7,000 ரூபாய் வென்றிருக்கிறார். அந்தத் தொகையை இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான நிதியாக அளிக்க வந்திருந்தார்.

எளிய குடும்பத்துப் பிள்ளைகள் கழகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், கலைஞரின் நினைவைப் போற்றும் விதமாகத் தொடர்ந்து இயங்குவதையும் நினைக்கும்போது நாம் இந்த இயக்கத்துக்காகவும் மக்களுக்காகவும் மென்மேலும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தங்கை தர்ஷினியுடன் மதிய உணவு அருந்தினோம்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்வதற்காக அண்ணன் ஆ.ராசா அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தோம். காத்திருந்த கூட்டம் கலையாமல் அப்படியே நின்று என்னை வழியனுப்பி வைத்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு, அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களுக்கான இளைஞர் அணி செயல் வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

இளைஞர் அணி பணிகளை ஒருங்கிணைக்க தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் மண்ணின் மைந்தன் அண்ணன் ஆ.ராசாவின் கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் எடுத்துக்கூறி உரையாற்றினேன். "35 வயதில் ஒன்றிய அமைச்சர், மாவட்டக் கழகச் செயலாளர் என்பது அண்ணனின் உழைப்பும் மீதும் கொள்கைப் பற்றின் மீதும் கலைஞர் வைத்திருந்த நம்பிக்கைக்குச் சான்று.

கழகத்தின் மீது அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே தொடரப்பட்ட 2ஜி வழக்கில் ஆ.ராசா ஒரு வாய்தாகூட வாங்காமல் அவரே வாதாடி வென்றார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 125 வாய்தா வாங்கியும் தோற்றார்" என்றேன். அதை இளைஞர்கள் கரவொலி எழுப்பி ஆமோதித்தனர். இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, இரவு 9 மணிக்கு மேல் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம்.

முதலில் பெரம்பலூரில் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளை ஆய்வு செய்தோம். மனுவில் உள்ளபடி உணவு வழங்கப்படுகிறதா, சமையலறை சுகாதாரமாகப் பராமரிக்கப்படுகிறதா, கழிவறைகளை முறையாகப் பராமரிக்கிறார்களா என்று ஆய்வு செய்தோம். அங்கிருந்த குறைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைச் சரிசெய்து எங்களுக்கு அறிக்கையாக அளிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டோம்.

பள்ளி மாணவர்கள் கேட்டுக்கொண்டபடி அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் உடனடியாக வழங்கி மகிழ்ந்தோம். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வின்போது, நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் வைத்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். "முதலமைச்சர் கல்விக்கும் சுகாதாரத்துக்கும்தான் அதிக முக்கியத்தவம் கொடுத்து திட்டங்களைத் தீட்டி வருகிறார். அவற்றை முறையாகப் பயன்படுத்தி மக்களுக்குப் பயனுள்ள வகையில் மருத்துவச்சேவை கிடைக்க உதவ வேண்டும்" என்று சுகாதாரத்துறையினரை அறிவுறுத்தினோம்.

அன்றிரவு பெரம்பலூரிலேயே தங்கிவிட்டு, மறுநாள் காலை கடலூர் நோக்கி பயணமானோம். வழியில், பெரம்பலூர் எறையூர் சிப்காட்டில் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்ட காலணித் தொழிற்சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தோம். இந்தத் தொழிற்சாலை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்பது நிச்சயம்.

கடலூர் மாவட்ட எல்லையில் தொழுதூரில் அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் கழகத்தினர் வரவேற்பு அளித்தனர். கழுதூரில் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கான இளைஞர் அணி செயல்வீரர் கூட்டம். உண்மையிலேயே அதை மாநாடு என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். அந்தளவுக்கு இளைஞர்கள் திரண்டிருந்தனர். கூட்டம் நடைபெறுவது கடலூர் மேற்கு மாவட்ட எல்லையான கழுதூர்.

அங்கு நடைபெறும் கூட்டத்திற்கு கடலூரின் கிழக்கு மாவட்ட எல்லையில் இருந்தெல்லாம் இளைஞர்கள் திரளாகக் கலந்துகொண்டிருந்தது என்னை உற்சாகம் கொள்ள வைத்தது. வெவ்வேறு மனநிலை, வெவ்வேறு பின்னணியில் இருந்து அங்குக் கூடியுள்ள அந்த இளைஞர்கள் அனைவரும் கழகம், கழகத் தலைவர் என்ற ஒற்றை நம்பிக்கையில் கூடியுள்ளதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

நம்மீது இவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலும், இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும் நம் கழகப் பணியை, மக்கள் பணியை அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தளராமல் உழைக்க வேண்டும் என்ற உறுதி எனக்குள் ஏற்பட்டது. 'இளைஞர் அணியில் இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சராக உள்ள எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் கணேசன் இருவரும்தான் இம்மாவட்டத்தின் முதன்மையான செயல்வீரர்கள். அவர்களின் வழியில் உழைக்க உறுதியேற்போம்" என்று உரையாற்றி அனைவரையும் மாநாட்டுக்கு வர வேண்டுகோள் விடுத்தேன்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி வேப்பூரில் அமைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கழகக் கொடியேற்றினேன். அதைத் தொடர்ந்து விருத்தாசலம், வடலூரில் கழகத்தினர் அளித்த வரவேற்பில் மிதந்தபடியே கடலூர் வந்தடைந்தோம். முன்னதாகக் கடலூர் பச்சையாங்குப்பம் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.76 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை ஆய்வு செய்தோம்.

மாலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். பள்ளி, கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து தொடர் நடவடிக்கைகள் எடுத்து அது குறித்த தகவல்களை எனக்கு அனுப்பும் படியும் மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக்கொண்டேன். பின் அமைச்சர்கள் எம்.ஆர்.கே, கணேசன் இருவரும் வழியனுப்பி வைக்க நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தோம்.

இந்த செயல்வீரர் கூட்டங்களை ஒருங்கிணைத்து, மாநாட்டுக்கு நிதியளித்த அமைச்சர்கள் நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன், மாவட்டக் கழக செயலாளர்கள் அண்ணன்கள் சுந்தர், எஸ்.கல்யாணசுந்தரம், துரை.சந்திரசேகரன், அண்ணாதுரை, பூண்டி கலைவாணன், காடுவெட்டி தியாகராஜன், கௌதமன், நிவேதா முருகன், காரைக்கால் நாஜிம், செல்லபாண்டியன்.

குன்னம் ராஜேந்திரன், வைரமணி ஆகியோருக்கும், அரசு ஆய்வுக் கூட்டங்களை ஒருங்கிணைத்த சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் மருத்துவர் தாரேஷ் அகமது ஐஏஎஸ் அவர்களுக்கும் நன்றி. இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் இளையராஜா, அப்துல் மாலிக், ஆனந்தகுமார் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பட்டாசு வெடிப்பதையும், பொன்னாடை, பூங்கொத்து கொடுப்பதையும் தவிர்க்குமாறு பலமுறை அறிவுறுத்தியிருக்கிறேன். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். அதற்கு பதிலாக புத்தகங்கள், கழக வேட்டி - துண்டுகள் போன்றவற்றை தாருங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் மாநில மாநாட்டுக்கு, இளைஞர் அணிக்கு வளர்ச்சி நிதியாகவும் தரலாம்.

இந்த பயணத்தில் பார்த்த மகிழ்ச்சிக் கடலில் திளைத்த, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டு முதலமைச்சர் அவர்களுக்கும் திராவிட மாடல் அரசுக்கும் நன்றி சொன்ன ஏழை எளிய மக்கள், கோரிக்கை மனுக்களைக் கையில் சுமந்தபடி காத்திருந்த பெண்கள் எனக் கலவையான முகங்கள் என் முன் வந்து போகின்றன. லட்சக்கணக்கான கழக இளைஞர்களை ஒருங்கிணைக்கக்கூடிய நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

மக்களின் தேவை குறித்து இன்னும் கற்க வேண்டும், அவர்களுக்குப் பயன்படும்படி இன்னும் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் ஏற்படுகிறது. இன்று ஒரு நாள் பயணமாக திருவள்ளூர் மாவட்டம் செல்கிறேன். அங்கும் காலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம். மாலையில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

"மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்" என்ற அண்ணாவின் வாக்கின்படி, முத்தமிழறிஞர் வழியில், கழகத் தலைவர் வழிகாட்டலில் அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் ஆச்சரியம் இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.