ETV Bharat / state

மதியம் 12 - 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு

author img

By

Published : May 16, 2023, 9:31 AM IST

சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் ஆகியோர் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்த்து வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மதியம் 12 - 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவிப்பு
மதியம் 12 - 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவிப்பு

சென்னை: இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (மே 15) 12.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலையில் இருந்து 20 முதல் 30 செல்சியஸ் வெப்ப நிலை உயர்ந்து காணப்பட்டதாகவும், அதிகபட்சமாக வேலூரில் 41.50 செல்சியஸ் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, கரூர் மற்றும் பரமத்தி பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட 20 முதல் 30 செல்சியஸ் அதிகரித்தது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகள் இயல்பு வெப்பநிலையில் இருந்து 20 முதல் 30 செல்சியஸ் கூடுதலாக இருக்கும்’’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  • உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.
  • அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லுங்கள்.
  • ஓ.ஆர்.எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.
  • இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள்.
  • நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும்.
  • மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.
  • வெளியில் செல்லும்போது காலணிகளை அணிவதுடன், குடையையும் கொண்டு செல்லவும்.
  • உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்பொழுது, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.
  • வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.
  • சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதைத் தவிர்க்கவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘ஆவினில் அதிக தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்’ - அமைச்சர் மனோ தங்கராஜ்!

சென்னை: இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (மே 15) 12.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலையில் இருந்து 20 முதல் 30 செல்சியஸ் வெப்ப நிலை உயர்ந்து காணப்பட்டதாகவும், அதிகபட்சமாக வேலூரில் 41.50 செல்சியஸ் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, கரூர் மற்றும் பரமத்தி பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட 20 முதல் 30 செல்சியஸ் அதிகரித்தது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகள் இயல்பு வெப்பநிலையில் இருந்து 20 முதல் 30 செல்சியஸ் கூடுதலாக இருக்கும்’’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  • உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.
  • அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லுங்கள்.
  • ஓ.ஆர்.எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.
  • இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள்.
  • நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும்.
  • மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.
  • வெளியில் செல்லும்போது காலணிகளை அணிவதுடன், குடையையும் கொண்டு செல்லவும்.
  • உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்பொழுது, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.
  • வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.
  • சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதைத் தவிர்க்கவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘ஆவினில் அதிக தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்’ - அமைச்சர் மனோ தங்கராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.