ETV Bharat / state

'நான் கூப்பிட்டே ஆம்புலன்ஸ் வரல' -  ஆட்சியருக்கு ஃபோன் போட்ட அமைச்சர்! - சென்னை

சென்னை:  திருவேற்காடு அருகே விபத்தில் காயம்பட்டவரை மீட்க அமைச்சர் க.பாண்டியராஜன் அழைத்தும் 108 ஆம்புலன்ஸ் வராததால், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.

அமைச்சர் க.பாண்டியராஜன்
author img

By

Published : Aug 19, 2019, 4:59 AM IST

சென்னை திருவேற்காடு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அருகே இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு அழைத்துள்ளனர். இருப்பினும் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானது. அப்போது அவ்வழியாக வந்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் விபத்தில் சிக்கியவரைக் கண்டு தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

விபத்தில் காயம்பட்டவரை மீட்க அமைச்சர் க.பாண்டியராஜன் அழைத்தும் 108 ஆம்புலன்ஸ் வரவில்லை

பின்னர், காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் 108 ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தார். மூன்று முறை அவர் அழைத்தும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் அழைப்பு ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமாருக்கு ஃபோன் செய்து நடந்ததை கூறியுள்ளார். பின்னர், ஆம்புலன்ஸ் வந்த பிறகு இளைஞர் அதில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சென்னை திருவேற்காடு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அருகே இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு அழைத்துள்ளனர். இருப்பினும் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானது. அப்போது அவ்வழியாக வந்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் விபத்தில் சிக்கியவரைக் கண்டு தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

விபத்தில் காயம்பட்டவரை மீட்க அமைச்சர் க.பாண்டியராஜன் அழைத்தும் 108 ஆம்புலன்ஸ் வரவில்லை

பின்னர், காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் 108 ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தார். மூன்று முறை அவர் அழைத்தும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் அழைப்பு ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமாருக்கு ஃபோன் செய்து நடந்ததை கூறியுள்ளார். பின்னர், ஆம்புலன்ஸ் வந்த பிறகு இளைஞர் அதில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Intro:சாலை விபத்தில் காயம்பட்டவரை மீட்க அமைச்சர் அழைத்தும் 108 ஆம்புலன்ஸ் வராததால் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர்
Body:சென்னை திருவேற்காடு அருகே நூம்புல் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சாலையில் குறுக்கே வந்த நாய் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் வாலிபருக்கு முகம்,தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகே இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்தனர்.ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானது. அப்போது அவ்வழியாக வந்த தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் காயம் ஏற்பட்டவரை கண்டு காரை நிருத்த சொன்னார்.பின்னர் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் 108 ஆம்புலன்ஸ்க்கு 3 முறை போன் செய்தார்.ஆனால் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் போன் எடுக்கவில்லை என கூறப்படுகிறதுConclusion:இதனால் கடுப்பான அமைச்சர் பாண்டியராஜன் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் போன் செய்தார்.ஆம்புலன்ஸ் வர தாமதமாகியும் அவரது காரில் காயம்பட்ட வாலிபரை அழைத்து செல்ல அமைச்சர் முன் வரவில்லை. பின்னர் ஆம்புலன்ஸ் வந்த பிறகு வாலிபரை அதில் அனுப்பி வைத்து கிளம்பி சென்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.