சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் மூத்த வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த சீனிவாசன் என்பவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்த வழக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து வழக்கறிஞர்கள் வாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாட்சிகளை கலைக்க கூடும் என்ற அடிப்படையில், சீனிவாசனை சேலத்திலிருந்து திருப்பூருக்கு பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ். வைத்தியாநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சாட்சிகளை கலைக்க கூடும் எனக் கூறுவது வெறும் யூகம், பணியிட மாற்றம் களங்கம் ஏற்படுத்தும் என வாதிடப்பட்டது.