ETV Bharat / state

சிலை வைக்கத் தடைகோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Nov 20, 2019, 2:43 PM IST

சென்னை: பொதுச் சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கத் தடைகோரிய வழக்கில், தமிழநாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mgr statue case

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அமிர்தாபுரத்தில் சாலையை ஆக்கிரமித்து முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு சிலை வைக்கப்பட இருப்பதை தடுக்கக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

போலி பத்திரங்கள் மூலம், பொதுச் சாலையை தனியார் இடம் என மாற்றி அங்கு சிலைகள் வைக்கப்பட இருப்பதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்கா ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிலை வைக்கப்படவுள்ள இடம் பொதுச் சாலையா? எனக் கண்டறிய அரசு தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது.

இதனையடுத்து, பொதுச் சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற நீதிபதிகள், மேலும், இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அமிர்தாபுரத்தில் சாலையை ஆக்கிரமித்து முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு சிலை வைக்கப்பட இருப்பதை தடுக்கக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

போலி பத்திரங்கள் மூலம், பொதுச் சாலையை தனியார் இடம் என மாற்றி அங்கு சிலைகள் வைக்கப்பட இருப்பதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்கா ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிலை வைக்கப்படவுள்ள இடம் பொதுச் சாலையா? எனக் கண்டறிய அரசு தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது.

இதனையடுத்து, பொதுச் சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற நீதிபதிகள், மேலும், இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:

சென்னையில் பாலியல் தொழில் நடத்திய இருவர் கைது

Intro:Body:பொது சாலையை ஆக்கிரமித்து முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலை வைக்க தடை கோரிய வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அமிர்தாபுரத்தில் சாலையை ஆக்கிரமித்து முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கப்பட இருப்பதை தடுக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

போலி பத்திரங்கள் மூலம் பொது சாலையை தனியார் இடம் என மாற்றி அங்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலைகள் வைக்கப்பட இருப்பதாகவும், பொது சாலையை தனியார் இடம் என அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்காரமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிலை வைக்கப்பட உள்ள இடம் பொது சாலையா? என கண்டறிய அரசு தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது.

இதனையடுத்து, பொது சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.