திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அமிர்தாபுரத்தில் சாலையை ஆக்கிரமித்து முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு சிலை வைக்கப்பட இருப்பதை தடுக்கக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
போலி பத்திரங்கள் மூலம், பொதுச் சாலையை தனியார் இடம் என மாற்றி அங்கு சிலைகள் வைக்கப்பட இருப்பதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்கா ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிலை வைக்கப்படவுள்ள இடம் பொதுச் சாலையா? எனக் கண்டறிய அரசு தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது.
இதனையடுத்து, பொதுச் சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற நீதிபதிகள், மேலும், இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: