ETV Bharat / state

காவிரி டெல்டா பாசனத்திற்கு காலதாமதமின்றி மேட்டூர் அணை திறக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

author img

By

Published : May 18, 2020, 11:49 AM IST

சென்னை : குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலதாமதமின்றி அறிவிப்பை வெளியிட வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Mettur Dam should be opened without delay for irrigation of Cauvery Delta - MK Stalin
காவிரி டெல்டா பாசனத்திற்கு காலதாமதமின்றி மேட்டூர் அணை திறக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் ஊரடங்கு கால நிவாரணங்கள் ஏதும் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலுக்கு முறைப்படி சென்றடையாததால் வேளாண் தொழிலை மட்டும் நம்பி இருக்கும் விவசாயிகள் நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை முறையாக செய்திடவும் அதற்கு தேவையான நீர் பாசனத்திற்கு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கமாக இருந்துவந்தாலும், கடந்த 8 ஆண்டுகளாக நீர் பாசனத்துக்கு உரிய நேரத்தில் அணை திறக்கவில்லை. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி அன்றும், 2017ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அன்றும், 2018ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அன்றும், கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதியும் மேட்டூர் அணை மிகவும் தாமதமாக திறக்கப்பட்டது. உரிய காலத்தில் குருவை விவசாயத்திற்கான நீர்ப்பாசனத்திற்கு அணை திறக்கப்படாததால் விவசாயிகள் நொடிந்து போயிருக்கிறார்கள். மேலும், விவசாயிகள் கடன்சுமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

மேட்டூர் அணையில் 100 அடி நீர் இருக்கிறது, வழக்கமாக 90 அடிகள் நீர் இருப்பு இருந்தாலே ஜூன் மாதம் அணை திறக்கப்படும். இப்போது கையிருப்பு நீர் இருந்தும் இதுவரை அரசு அணை திறப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. ஆகவே வருகின்ற ஜூன் மாதம் 10ஆம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

Mettur Dam should be opened without delay for irrigation of Cauvery Delta - MK Stalin
காவிரி டெல்டா பாசனத்திற்கு காலதாமதமின்றி மேட்டூர் அணை திறக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உழவு மானியம், டிராக்டர் டீசல் மானியம் அளிப்பது உறுதி செய்திட வேண்டும். தேவையான விவசாய கடன் வசதிகள் வட்டியில்லாமல் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விதைகள் இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் பூச்சிக்கொல்லி போன்ற எந்தவித தடையுமின்றி கிடைக்கவும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக அரசே வழங்கிடவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்இதையும் படிங்க : 'குறைவான கரோனா பரிசோதனை விபரீதத்தை ஏற்படுத்தும்'

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் ஊரடங்கு கால நிவாரணங்கள் ஏதும் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலுக்கு முறைப்படி சென்றடையாததால் வேளாண் தொழிலை மட்டும் நம்பி இருக்கும் விவசாயிகள் நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை முறையாக செய்திடவும் அதற்கு தேவையான நீர் பாசனத்திற்கு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கமாக இருந்துவந்தாலும், கடந்த 8 ஆண்டுகளாக நீர் பாசனத்துக்கு உரிய நேரத்தில் அணை திறக்கவில்லை. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி அன்றும், 2017ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அன்றும், 2018ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அன்றும், கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதியும் மேட்டூர் அணை மிகவும் தாமதமாக திறக்கப்பட்டது. உரிய காலத்தில் குருவை விவசாயத்திற்கான நீர்ப்பாசனத்திற்கு அணை திறக்கப்படாததால் விவசாயிகள் நொடிந்து போயிருக்கிறார்கள். மேலும், விவசாயிகள் கடன்சுமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

மேட்டூர் அணையில் 100 அடி நீர் இருக்கிறது, வழக்கமாக 90 அடிகள் நீர் இருப்பு இருந்தாலே ஜூன் மாதம் அணை திறக்கப்படும். இப்போது கையிருப்பு நீர் இருந்தும் இதுவரை அரசு அணை திறப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. ஆகவே வருகின்ற ஜூன் மாதம் 10ஆம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

Mettur Dam should be opened without delay for irrigation of Cauvery Delta - MK Stalin
காவிரி டெல்டா பாசனத்திற்கு காலதாமதமின்றி மேட்டூர் அணை திறக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உழவு மானியம், டிராக்டர் டீசல் மானியம் அளிப்பது உறுதி செய்திட வேண்டும். தேவையான விவசாய கடன் வசதிகள் வட்டியில்லாமல் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விதைகள் இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் பூச்சிக்கொல்லி போன்ற எந்தவித தடையுமின்றி கிடைக்கவும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக அரசே வழங்கிடவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்இதையும் படிங்க : 'குறைவான கரோனா பரிசோதனை விபரீதத்தை ஏற்படுத்தும்'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.