ETV Bharat / state

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் ஜன. 4ஆம் தேதி திறக்கப்படும்

author img

By

Published : Dec 31, 2019, 9:55 AM IST

சென்னை: அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்படும் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர்  கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

-tamilnadu
-tamilnadu

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், "அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் திறக்கப்படும் ஜனவரி 4ஆம் தேதி அன்றே, அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் திறக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், "அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் திறக்கப்படும் ஜனவரி 4ஆம் தேதி அன்றே, அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் திறக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பள்ளிகள் விடுமுறையில் மாற்றம் - கூடுதலாக ஒரு நாள் விடுமுறை!

Intro:மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் 4 ந் தேதி திறப்பு
Body:மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் 4 ந் தேதி திறப்பு


சென்னை: அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஜனவரி 4 ந் தேதி திறக்கப்படும் என மெட்ரிக்குலேசன் இயக்குனர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டு பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்தலின் வாக்குப்பெட்டிகள் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒரு சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரையிலும் நடைபெறும் என்பதால் மறுநாள் பள்ளிகளை திறப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி திறக்கும் தேதியை ஒரு நாள் தள்ளி வைக்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு மாநில தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அளித்துள்ளனர். ஆனால், விடுமுறை அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறியிருந்தார்.

இந்த நிலையில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 4 ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் ஜனவரி 4 ந் தேதி திறக்கப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.