ETV Bharat / state

303 கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்காலத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!! - கவுரவ விரிவுரையாளர்கள் பணி

சென்னை: 2,423 கௌரவ விரிவுரையாளர்களில் மீதமிருந்த 303 கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பணிக்காலத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

mangat-ram-sharma
author img

By

Published : Oct 25, 2019, 3:17 PM IST

அரசாணையில், '2019-20ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 2,423 கௌரவ விரிவுரையாளர்களில் 2,120 பேருக்கு பணிக்காலத்தில் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டது.

இதனால் மீதமிருந்த 303 கௌரவ விரிவுரையாளர்கள், பணி நியமன அனுமதி கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனடிப்படையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு மீதமிருக்கும் 303 கௌரவ விரிவுரையாளர்களையும் தற்காலிகமாக பணி நியமனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்த நியமனம் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள, விதிகளின்படி அவசர, அவசிய தேவையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 303 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் வராததால், தாங்கள் பணியில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகளில் மதம், சாதி ரீதியாக மாணவர்களை ஒன்றிணைக்க நினைத்தால் நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை

அரசாணையில், '2019-20ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 2,423 கௌரவ விரிவுரையாளர்களில் 2,120 பேருக்கு பணிக்காலத்தில் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டது.

இதனால் மீதமிருந்த 303 கௌரவ விரிவுரையாளர்கள், பணி நியமன அனுமதி கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனடிப்படையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு மீதமிருக்கும் 303 கௌரவ விரிவுரையாளர்களையும் தற்காலிகமாக பணி நியமனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்த நியமனம் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள, விதிகளின்படி அவசர, அவசிய தேவையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 303 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் வராததால், தாங்கள் பணியில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகளில் மதம், சாதி ரீதியாக மாணவர்களை ஒன்றிணைக்க நினைத்தால் நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை

Intro:303 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீடிப்பு


Body:303 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீடிப்பு
சென்னை,
உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 2018- 19 ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி 1 ல் காலியாகவுள்ள உதவி பேராசிரியர் காலி பணியிடங்களில் 1,683 கவுரவ விரிவுரையாளர்கள் மாதம் 15,000 தொகுப்பூதிய அடிப்படையில் உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யும்வரை அல்லது கல்வி ஆண்டின் இறுதி நாள் வரை இவற்றில் எது முந்தியதோ அதுவரை பணி அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து 2019- 20 ஆம் கல்வி ஆண்டில் மார்ச் 2020 வரை தொகுப்பூதிய அடிப்படையில் 2,423 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டது.
ஆனாலும் பல கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் படாத வகையில் கவுரவ விரிவுரையாளர்கள் 303 பேர் பணி நியமனம் அனுமதி கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் 2019 -20 ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களில் தற்காலிகமாக பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு சுழற்சி 1 ல் 303 கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பு ஊதியத்தில் அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் நியமனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இந்த முழுதுமாக கவுரவ விரிவுரையாளர்கள் மாதம் 15,000 தொகுப்பூதிய அடிப்படையில் 11 மாதங்களுக்கு பணியமர்த்த அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நியமனம் பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயித்துள்ள கல்விதகுதி மற்றும் பிற உரிய விதிகளின்படி அவசர , அவசிய தேவை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.