ETV Bharat / state

பின்னணி குரல் கலைஞர் புகார்: பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த நபர் கைது

author img

By

Published : Jun 15, 2022, 8:22 PM IST

சமூக வலைதளம் மூலம் காதல் வலை வீசி பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த நபரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது
கைது

சென்னை: சென்னையைச்சேர்ந்த பின்னணி குரல் கலைஞராகப் பணிபுரியும் இளம்பெண் ஒருவர், தனது காதலன் விக்ரம் வேதகிரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில், கடந்த 2020ஆம் ஆண்டு குறும்படம் ஒன்றுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் தேவைப்படுவதாக கூறியதன் பேரில், திருநின்றவூரைச் சேர்ந்த விக்ரம் வேதகிரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் 2021ஆம் ஆண்டு விக்ரமுடன் காதல் ஏற்பட்டு ரகசிய இடத்தில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் இளம் பெண் தெரிவித்திருந்தார்.

பின்னர் ஊரறிய திருமணம் செய்து கொள்வதாக விக்ரம் ஆசைவார்த்தை கூறி, பல முறை உடலுறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்த அப்பெண், விக்ரம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை தாக்கி ஒரு கட்டத்தில் ஏமாற்றி சென்றுவிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

இன்று காலை கைது: மேலும், விக்ரம் பயன்படுத்திய செல்போனை தனது வீட்டில் விட்டுச்சென்ற நிலையில், அதை ஆராய்ந்தபோது, குறும்படம் எடுப்பதாகக் கூறி சமூக வலைதளம் மூலம் பல பெண்களிடம் விக்ரம் ஆசை வார்த்தை கூறி, அவர்களிடம் காதலிப்பதாக சொல்லி, உடலுறவு வைத்து, அதை வீடியோவாக எடுத்து வைத்திருப்பது தெரியவந்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் விக்ரம் தன் சொந்த உறவுகளைப் பற்றியே ஆபாச கவிதைகள், மீம்ஸ் ஆகியவற்றை உருவாக்கி வைத்துள்ளார். மேலும், தன்னுடன் உறவு வைத்துக்கொண்ட வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி, தன்னிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

இந்தநிலையில் 16ஆம் தேதி விக்ரமுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்தி அப்பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றுமாறும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் பெண் அளித்த புகார் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய திருநின்றவூரைச் சேர்ந்த விக்ரம் வேதகிரி என்பவரை இன்று (ஜூன் 15) காலை அவரது வீட்டில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட விக்ரம் மருத்துவ ரெப்பாக பணியாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து, விக்ரம் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்தனர். விக்ரமின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். விக்ரமிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டும் இளைஞரை கைது செய்யக்கோரி பின்னணி குரல் கலைஞர் புகார்!

சென்னை: சென்னையைச்சேர்ந்த பின்னணி குரல் கலைஞராகப் பணிபுரியும் இளம்பெண் ஒருவர், தனது காதலன் விக்ரம் வேதகிரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில், கடந்த 2020ஆம் ஆண்டு குறும்படம் ஒன்றுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் தேவைப்படுவதாக கூறியதன் பேரில், திருநின்றவூரைச் சேர்ந்த விக்ரம் வேதகிரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் 2021ஆம் ஆண்டு விக்ரமுடன் காதல் ஏற்பட்டு ரகசிய இடத்தில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் இளம் பெண் தெரிவித்திருந்தார்.

பின்னர் ஊரறிய திருமணம் செய்து கொள்வதாக விக்ரம் ஆசைவார்த்தை கூறி, பல முறை உடலுறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்த அப்பெண், விக்ரம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை தாக்கி ஒரு கட்டத்தில் ஏமாற்றி சென்றுவிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

இன்று காலை கைது: மேலும், விக்ரம் பயன்படுத்திய செல்போனை தனது வீட்டில் விட்டுச்சென்ற நிலையில், அதை ஆராய்ந்தபோது, குறும்படம் எடுப்பதாகக் கூறி சமூக வலைதளம் மூலம் பல பெண்களிடம் விக்ரம் ஆசை வார்த்தை கூறி, அவர்களிடம் காதலிப்பதாக சொல்லி, உடலுறவு வைத்து, அதை வீடியோவாக எடுத்து வைத்திருப்பது தெரியவந்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் விக்ரம் தன் சொந்த உறவுகளைப் பற்றியே ஆபாச கவிதைகள், மீம்ஸ் ஆகியவற்றை உருவாக்கி வைத்துள்ளார். மேலும், தன்னுடன் உறவு வைத்துக்கொண்ட வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி, தன்னிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

இந்தநிலையில் 16ஆம் தேதி விக்ரமுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்தி அப்பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றுமாறும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் பெண் அளித்த புகார் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய திருநின்றவூரைச் சேர்ந்த விக்ரம் வேதகிரி என்பவரை இன்று (ஜூன் 15) காலை அவரது வீட்டில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட விக்ரம் மருத்துவ ரெப்பாக பணியாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து, விக்ரம் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்தனர். விக்ரமின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். விக்ரமிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டும் இளைஞரை கைது செய்யக்கோரி பின்னணி குரல் கலைஞர் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.