ETV Bharat / state

மின்சார ரயிலில் பெண்கள் முன்பு ஆபாசமாக நடந்த நபர் கைது!

சென்னையில் மின்சார ரயிலில் பெண்கள் முன்பு ஆபாசமாக நடந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

author img

By

Published : Feb 15, 2022, 12:49 PM IST

Man arrested for abusing women
Man arrested for abusing women

சென்னை : தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் ரேணுகா. இவர் கடந்த 9ஆம் தேதி இரவு 9 மணி அளவில் பணிக்குச் சென்றுவிட்டு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் சென்றுள்ளார். அவருடன் மேலும் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர்.

அப்போது மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் பெண்கள் செல்லும் பெட்டியில் ஏறி திடீரென பெண்களுக்கு முன்பு ஆபாசமான செயலில் ஈடுபட்டுள்ளார். இதனைக்கண்ட ரேணுகா தனது செல்போனில் வீடியோ எடுத்து அவரை திட்டியுள்ளார். இதனால் அந்த நபர் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையத்து ரேணுகா வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ரேணுகா தாம்பரம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் மீனம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (23) என்பவரை ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க : மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள், மருமகள் இடையே மோதல்

சென்னை : தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் ரேணுகா. இவர் கடந்த 9ஆம் தேதி இரவு 9 மணி அளவில் பணிக்குச் சென்றுவிட்டு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் சென்றுள்ளார். அவருடன் மேலும் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர்.

அப்போது மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் பெண்கள் செல்லும் பெட்டியில் ஏறி திடீரென பெண்களுக்கு முன்பு ஆபாசமான செயலில் ஈடுபட்டுள்ளார். இதனைக்கண்ட ரேணுகா தனது செல்போனில் வீடியோ எடுத்து அவரை திட்டியுள்ளார். இதனால் அந்த நபர் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையத்து ரேணுகா வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ரேணுகா தாம்பரம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் மீனம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (23) என்பவரை ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க : மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள், மருமகள் இடையே மோதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.