ETV Bharat / state

விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 3 பேருக்கு ஜாமீன் - சென்னை உயர் நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 10:06 PM IST

Madras High Court: விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் எனக்கூறி தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Madras High Court
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நாட்டு துப்பாக்கி, ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளுடன் நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலன் ஆகிய மூன்று பேரை கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், சேலம் மாவட்டம் ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு பின்னர், தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த இறுதி அறிக்கையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் எனவும், ஆயுதப் போராட்டம் மூலம் இந்திய மற்றும் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் புரட்சி செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

சேலத்தில் உள்ள வணிக மணல் குவாரி மற்றும் டாஸ்மாக் கடைகள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்த மூவரும் திட்டமிட்டு இருந்ததாக இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி, மூவரும் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று(டிச. 16) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் சங்கர சுப்பு ஆஜராகி, பயங்கரவாத செயல்கள் செய்வது அவர்களது நோக்கம் இல்லை எனவும், சட்டவிரோத மணல் குவாரிகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மட்டுமே போராட நினைத்தாகவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் சட்டவிரோத செயல்களுக்கு, தடுப்புச் சட்டம் பொருந்தாது என நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர். மூவரும் சட்டவிரோதமாக வெடிகுண்டுகள் மற்றும் வெடி ஆயுதங்கள் செய்தனர் என்பதில் சந்தேகமில்லை எனக் கூறிய நீதிபதிகள், இதற்கு வெடிகுண்டு மற்றும் ஆயுதச் சட்டம் தான் பொருந்தும் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்கிய தி.மு.க எம்பிக்கள்..!

சென்னை: நாட்டு துப்பாக்கி, ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளுடன் நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலன் ஆகிய மூன்று பேரை கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், சேலம் மாவட்டம் ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு பின்னர், தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த இறுதி அறிக்கையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் எனவும், ஆயுதப் போராட்டம் மூலம் இந்திய மற்றும் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் புரட்சி செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

சேலத்தில் உள்ள வணிக மணல் குவாரி மற்றும் டாஸ்மாக் கடைகள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்த மூவரும் திட்டமிட்டு இருந்ததாக இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி, மூவரும் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று(டிச. 16) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் சங்கர சுப்பு ஆஜராகி, பயங்கரவாத செயல்கள் செய்வது அவர்களது நோக்கம் இல்லை எனவும், சட்டவிரோத மணல் குவாரிகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மட்டுமே போராட நினைத்தாகவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் சட்டவிரோத செயல்களுக்கு, தடுப்புச் சட்டம் பொருந்தாது என நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர். மூவரும் சட்டவிரோதமாக வெடிகுண்டுகள் மற்றும் வெடி ஆயுதங்கள் செய்தனர் என்பதில் சந்தேகமில்லை எனக் கூறிய நீதிபதிகள், இதற்கு வெடிகுண்டு மற்றும் ஆயுதச் சட்டம் தான் பொருந்தும் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்கிய தி.மு.க எம்பிக்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.