ETV Bharat / state

ஊரடங்கு மீறல்: 109 நாட்களில் 17 கோடியை தாண்டிய வசூல்!

author img

By

Published : Jul 12, 2020, 3:48 AM IST

ஊரடங்கு அமலுக்கு வந்து 109 நாட்கள் ஆன நிலையில் இதுவரை தடை உத்தரவை மீறி வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து 17 கோடியே 75 லட்சத்து 86 ஆயிரத்து 76 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு மீறல்
ஊரடங்கு மீறல்

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தரவை மீறிய இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 109 நாள்களான நிலையில், காவல் துறை இதுவரை தடையை மீறியதாக எட்டு லட்சத்து 36 ஆயிரத்து 584 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.

மேலும், ஆறு லட்சத்து 29 ஆயிரத்து 353 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக 17 கோடியே 75 லட்சத்து 86 ஆயிரத்து 76 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19 கால நெருக்கடியால் மதிப்பூதியம் ரத்து!

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தரவை மீறிய இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 109 நாள்களான நிலையில், காவல் துறை இதுவரை தடையை மீறியதாக எட்டு லட்சத்து 36 ஆயிரத்து 584 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.

மேலும், ஆறு லட்சத்து 29 ஆயிரத்து 353 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக 17 கோடியே 75 லட்சத்து 86 ஆயிரத்து 76 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19 கால நெருக்கடியால் மதிப்பூதியம் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.