ETV Bharat / state

ஊரடங்கு மீறல்: ரூ.16 கோடியை தாண்டியது அபராதம்

author img

By

Published : Jul 2, 2020, 4:06 PM IST

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் தற்போது வரை ஏழு லட்சத்து 84 ஆயிரத்து 685 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

Chennai police
lock down cases

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை காவல் துறையினர் கண்காணித்து, அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குவந்த 100 நாள்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக, ஏழு லட்சத்து 84 ஆயிரத்து 685 பேரை காவல் துறை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.

ஐந்து லட்சத்து 96 ஆயிரத்து 136 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 16 கோடியே 61 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜூலை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அரசு அறிவிப்பு

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை காவல் துறையினர் கண்காணித்து, அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குவந்த 100 நாள்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக, ஏழு லட்சத்து 84 ஆயிரத்து 685 பேரை காவல் துறை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.

ஐந்து லட்சத்து 96 ஆயிரத்து 136 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 16 கோடியே 61 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜூலை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.