ETV Bharat / state

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை பெற்ற குமரி அனந்தன்! - Nanguneri by election congress candidate

சென்னை: நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விரும்பி காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் குமரி அனந்தன் விருப்பமனுவை பெற்றுள்ளார்.

KUMARI anandan get Optional petition to participate Nanguneri by election
author img

By

Published : Sep 23, 2019, 9:23 PM IST

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாங்குநேரித் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட முடிவாகியுள்ளது. இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்வு இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த உறுப்பினரான குமரி அனந்தன் கலந்துகொண்டு விருப்பமனுவை பெற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாங்குநேரி தொகுதி நெல்லையில் முக்கியமான தொகுதி. நான் தனியாக அமைப்பு வைத்து நடத்திவந்த வேளையில் அவ்வமைப்பின் சார்பாக வின்சென்ட் என்பவரை நாங்குநேரி தொகுதியில் நிறுத்தி மாபெரும் வெற்றி பெற்றோம்.

விருப்பமனுவை பெற்ற குமரி ஆனந்தன்

அதேபோல் கடந்த தேர்தலில் எனது தம்பி இந்த தொகுதியில் வெற்றி பெற்று அந்த மக்களுக்கு தொண்டு செய்தார். இவ்வாறு எனது மனதுக்கு நெருக்கமான இந்த தொகுதியில் நான் போட்டியிட விரும்பி விருப்பமனுவை பெற்றுள்ளேன்.

நான் ஏற்கனவே நான்கு முறை சட்டப்பேரவஒ உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்று எண்ணுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், கூட்டணி கட்சி தலைவர்களும் மனமுவந்து அதை ஏற்றுக்கொள்வார்களேயானால் தொகுதியில் கடுமையாக உழைத்து தேர்தலில் வெற்றி பெறுவேன் " என்றார்

இதையும் படிங்க: நாங்குநேரி இடைத்தேர்தல்: நெல்லையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாங்குநேரித் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட முடிவாகியுள்ளது. இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்வு இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த உறுப்பினரான குமரி அனந்தன் கலந்துகொண்டு விருப்பமனுவை பெற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாங்குநேரி தொகுதி நெல்லையில் முக்கியமான தொகுதி. நான் தனியாக அமைப்பு வைத்து நடத்திவந்த வேளையில் அவ்வமைப்பின் சார்பாக வின்சென்ட் என்பவரை நாங்குநேரி தொகுதியில் நிறுத்தி மாபெரும் வெற்றி பெற்றோம்.

விருப்பமனுவை பெற்ற குமரி ஆனந்தன்

அதேபோல் கடந்த தேர்தலில் எனது தம்பி இந்த தொகுதியில் வெற்றி பெற்று அந்த மக்களுக்கு தொண்டு செய்தார். இவ்வாறு எனது மனதுக்கு நெருக்கமான இந்த தொகுதியில் நான் போட்டியிட விரும்பி விருப்பமனுவை பெற்றுள்ளேன்.

நான் ஏற்கனவே நான்கு முறை சட்டப்பேரவஒ உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்று எண்ணுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், கூட்டணி கட்சி தலைவர்களும் மனமுவந்து அதை ஏற்றுக்கொள்வார்களேயானால் தொகுதியில் கடுமையாக உழைத்து தேர்தலில் வெற்றி பெறுவேன் " என்றார்

இதையும் படிங்க: நாங்குநேரி இடைத்தேர்தல்: நெல்லையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!

Intro:Body:நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில்
போட்டியிட விரும்பும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர்களுக்கான விருப்பமனு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று விநியோகம் செய்யப்பட்டது. கட்சி அனுமதித்தால் நாங்குநேரியில் போட்டியிட நான் தயார் என்று கூறிய மூத்த உறுப்பினர் குமரி அனந்தன் விருப்பமனுவை பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பப்பட்டு விருப்ப மனுவை பெற்றுள்ளேன்.

நாங்குநேரி தொகுதி திருநெல்வேலியில் முக்கியமான ஒரு தொகுதி. நான் ஒரு காலத்தில் தனியே அமைப்பு வைத்து நடத்தியபோது ஜான் வின்சென்ட் என்பவரை நாங்குநேரி தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற்றுள்ளோம். அதேபோல் கடந்த தேர்தலில் என் தம்பி இந்த தொகுதியில் வெற்றி பெற்று அங்கிருக்கும் மக்களுக்கு தொண்டு செய்தது நாடறிந்த உண்மை. அவ்வாறு எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நாங்குநேரி தொகுதியில் பல பணிகள் இன்னும் செய்யப்பட வேண்டும் என்பதைவிட அங்கு போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மதுவிலக்கு, விவசாயிகளின் கடன் பிரச்னை, நெசவாளர்கள் பிரச்னை, மொழி பிரச்னை உள்ளிட்டவற்றை உரத்த குரலில் பதிவு செய்ய வேண்டும் என்பதே முக்கியமாக கொண்டுள்ளேன்.

நான் ஏற்கெனவே நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவ பிழிவை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு விருப்பமனு பெற்றுள்ளேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், கூட்டணி கட்சி தலைவர்களும் மனமுவந்து அதை ஏற்றுக்கொள்வார்களேயானால் தொகுதியில் கடுமையாக உழைத்து தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.