ETV Bharat / state

முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் சொத்து வரி உயர்வு அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் - கே.எஸ். அழகிரி

author img

By

Published : Apr 2, 2022, 2:06 PM IST

முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் சொத்து வரி உயர்வு அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். எனவே, அறிவிக்கப்பட்டுள்ள இந்த வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வராமல், ஆண்டுக்கு 10 சதவிகித வரி உயர்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ks-alagiri-says-i-think-property-tax-hike-would-have-been-announced-without-coming-into-view-of-cm-stalin முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் சொத்து வரி உயர்வு அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் - கே.எஸ். அழகிரியின் விளக்கம்
ks-alagiri-says-i-think-property-tax-hike-would-have-been-announced-without-coming-into-view-of-cm-stalinமுதலமைச்சரின் பார்வைக்கு வராமல் சொத்து வரி உயர்வு அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் - கே.எஸ். அழகிரியின் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு நேற்று (ஏப்.1) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.

மேலும், ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ரூத் ஆகிய திட்டங்களிலும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 விழுக்காடும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 விழுக்காடும் உயர்த்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23ஆம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

எனவே, நகராட்சிகள், பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து வரி உயர்வு
சொத்து வரி உயர்வு

இதனிடையே, இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, சென்னை மாநகரத்தில் 600-சதுரஅடி முதல் 1200 சதுரஅடி வரை 75 சதவிகித சொத்து வரி உயர்த்தப்பட இருக்கிறது. ஏற்கனவே, 600 சதுரஅடிக்கு ரூபாய் 810 சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1215 உயர்த்தப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

1201 சதுரஅடி முதல் 1800 சதுர அடி வரை 100 சதவிகித வரி உயர்வும், 1801 சதுரஅடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 150 சதவிகித சொத்து வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வணிக வளாகங்களுக்கு 150 சதவிகித வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100 சதவிகித வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சொத்து வரி உயர்வு அனைத்து தரப்பினரையும் பலமுனைகளில் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது.

முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் சொத்து வரி உயர்வு அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் - கே.எஸ். அழகிரியின் விளக்கம்
முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் சொத்து வரி உயர்வு அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் - கே.எஸ். அழகிரியின் விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அறிவிக்கப்பட்டுள்ள இந்த சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வராமல், ஆண்டுக்கு 10 சதவிகித வரி உயர்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு: எவ்வளவு அதிகம்...? என்னென்ன மாற்றம்...?

சென்னை: தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு நேற்று (ஏப்.1) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.

மேலும், ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ரூத் ஆகிய திட்டங்களிலும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 விழுக்காடும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 விழுக்காடும் உயர்த்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23ஆம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

எனவே, நகராட்சிகள், பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து வரி உயர்வு
சொத்து வரி உயர்வு

இதனிடையே, இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, சென்னை மாநகரத்தில் 600-சதுரஅடி முதல் 1200 சதுரஅடி வரை 75 சதவிகித சொத்து வரி உயர்த்தப்பட இருக்கிறது. ஏற்கனவே, 600 சதுரஅடிக்கு ரூபாய் 810 சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1215 உயர்த்தப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

1201 சதுரஅடி முதல் 1800 சதுர அடி வரை 100 சதவிகித வரி உயர்வும், 1801 சதுரஅடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 150 சதவிகித சொத்து வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வணிக வளாகங்களுக்கு 150 சதவிகித வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100 சதவிகித வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சொத்து வரி உயர்வு அனைத்து தரப்பினரையும் பலமுனைகளில் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது.

முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் சொத்து வரி உயர்வு அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் - கே.எஸ். அழகிரியின் விளக்கம்
முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் சொத்து வரி உயர்வு அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் - கே.எஸ். அழகிரியின் விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அறிவிக்கப்பட்டுள்ள இந்த சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வராமல், ஆண்டுக்கு 10 சதவிகித வரி உயர்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு: எவ்வளவு அதிகம்...? என்னென்ன மாற்றம்...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.