ETV Bharat / state

பட்டப்பகலில் வக்கீல் வீட்டில் கத்தியைக்காட்டி 3 சவரன் நகைகள், ரூ.10ஆயிரம் கொள்ளை

author img

By

Published : Jan 8, 2023, 8:05 PM IST

விருகம்பாக்கத்தில் திமுக நிர்வாகியின் வீட்டில் பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டி 3 சவரன் நகைகள், ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
Etv Bharat
சென்னையில் பட்டப்பகலில் கத்தியைக்காட்டி 3 சவரன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், முருகன்(35). திமுக நிர்வாகியான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரோஜா(30).

இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு தனது மகளை அழைக்கச் சென்று திரும்பினார். அப்போது, வீட்டின் கதவின் பூட்டை உடைத்துவிட்டு ஒரு நபர் உள்ளே சென்று நகைகளை திருடிக்கொண்டு இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சரோஜா உள்ளே சென்று பார்த்தபோது, அவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அங்கிருந்து அந்நபர் தப்பினார்.

சென்னையில் பட்டப்பகலில் கத்தியைக் காட்டி 3 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை
சென்னையில் பட்டப்பகலில் கத்தியைக் காட்டி 3 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

இதையடுத்து, வீட்டில் இருந்த 3 சவரன் நகைகள், ரூ.10 ஆயிரம் பணத்தை அந்த நபர் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில் டிப்-டாப்பாக வரும் இளைஞர் ஒருவர் போன் பேசியபடியே, சர்வ சாதாரணமாக நடந்து வந்து, கண்காணிப்பு கேமரா இருக்கும் இடத்தில் முகத்தை மறைத்தபடியே அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவதும், பின்னர் கொள்ளை அடிக்கும்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டதால், கத்தியை வைத்து மிரட்டி விட்டு, கத்தியோடு ஓடக்கூடியக்காட்சிகளும், பின்னாலே அந்த பெண் துரத்தி வரும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இவ்வாறு பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்ததும்; வீட்டின் உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டு, கொள்ளையன் தப்பிச்சென்றதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஹிஜாப் போராட்டங்களில் கைதான இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் - கொந்தளிக்கும் மக்கள்

சென்னையில் பட்டப்பகலில் கத்தியைக்காட்டி 3 சவரன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், முருகன்(35). திமுக நிர்வாகியான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரோஜா(30).

இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு தனது மகளை அழைக்கச் சென்று திரும்பினார். அப்போது, வீட்டின் கதவின் பூட்டை உடைத்துவிட்டு ஒரு நபர் உள்ளே சென்று நகைகளை திருடிக்கொண்டு இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சரோஜா உள்ளே சென்று பார்த்தபோது, அவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அங்கிருந்து அந்நபர் தப்பினார்.

சென்னையில் பட்டப்பகலில் கத்தியைக் காட்டி 3 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை
சென்னையில் பட்டப்பகலில் கத்தியைக் காட்டி 3 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

இதையடுத்து, வீட்டில் இருந்த 3 சவரன் நகைகள், ரூ.10 ஆயிரம் பணத்தை அந்த நபர் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில் டிப்-டாப்பாக வரும் இளைஞர் ஒருவர் போன் பேசியபடியே, சர்வ சாதாரணமாக நடந்து வந்து, கண்காணிப்பு கேமரா இருக்கும் இடத்தில் முகத்தை மறைத்தபடியே அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவதும், பின்னர் கொள்ளை அடிக்கும்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டதால், கத்தியை வைத்து மிரட்டி விட்டு, கத்தியோடு ஓடக்கூடியக்காட்சிகளும், பின்னாலே அந்த பெண் துரத்தி வரும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இவ்வாறு பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்ததும்; வீட்டின் உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டு, கொள்ளையன் தப்பிச்சென்றதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஹிஜாப் போராட்டங்களில் கைதான இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் - கொந்தளிக்கும் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.