ETV Bharat / state

என்னது 'போரணி'யா - ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!

சென்னை: திமுக பேரணிக்கு 108 சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தும் வெறும் ஐந்தாயிரம் பேர் கலந்துகொண்டது அக்கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 24, 2019, 4:56 PM IST

Jayakumar
Jayakumar

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 32ஆவது நினைவுதினத்தையொட்டி சென்னை ராயபுரத்தில் வைக்கப்பட்ட அவரது புகைப்படத்திற்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் ஜெயக்குமார், "எம்ஜிஆர் மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் அவர் சமுதாயத்திற்கு செய்த தொண்டு திரைப்படத்தில் கூறிய கருத்துகள் மூலம் இன்று மட்டுமல்ல; இன்னும் பல நூறு ஆண்டுகள் மக்கள் மனதில் அழியாத சுவடுகளாக இடம் பெறுவார்.

கூட்டணிக் கட்சிகள், 108 அமைப்புகள் என அனைத்துக் கூட்டத்தையும் கூட்டிக்கொண்டு வெறும் ஐந்தாயிரம் பேர் மட்டும்தான் திமுக நடத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டனர். இது திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய தோல்வி. ஸ்டாலின் பிறந்த குழந்தையை மட்டும்தான் போராட்டத்திற்கு அழைக்கவில்லை அதற்குப் பேசத் தெரிந்தால் அதையும் போராட்டத்தில் கலந்துகொள்ள சொல்லியிருப்பார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

இந்த ஆர்ப்பாட்டத்தால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நிறைய கான்சப்ட் கிடைத்துள்ளது. ஸ்டாலின் பேரணி சொல்வதற்குப் பதிலாகப் போரணி என்று சொல்லிவிட்டார். அது முழுவதும் ஃபெயிலியர் அணிதான்.

தமிழ்நாடு மக்கள் அமைதியாக இருக்கும் நிலையில் அவர்களைப் பிரித்து எப்படியாவது விஷ விதைகளை விதைத்து வன்முறையை அரங்கேற்றி அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகவே இந்தப் பேரணியை நடத்தினர்" என்றார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் ‘அதிமுக’ பக்தர்!

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 32ஆவது நினைவுதினத்தையொட்டி சென்னை ராயபுரத்தில் வைக்கப்பட்ட அவரது புகைப்படத்திற்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் ஜெயக்குமார், "எம்ஜிஆர் மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் அவர் சமுதாயத்திற்கு செய்த தொண்டு திரைப்படத்தில் கூறிய கருத்துகள் மூலம் இன்று மட்டுமல்ல; இன்னும் பல நூறு ஆண்டுகள் மக்கள் மனதில் அழியாத சுவடுகளாக இடம் பெறுவார்.

கூட்டணிக் கட்சிகள், 108 அமைப்புகள் என அனைத்துக் கூட்டத்தையும் கூட்டிக்கொண்டு வெறும் ஐந்தாயிரம் பேர் மட்டும்தான் திமுக நடத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டனர். இது திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய தோல்வி. ஸ்டாலின் பிறந்த குழந்தையை மட்டும்தான் போராட்டத்திற்கு அழைக்கவில்லை அதற்குப் பேசத் தெரிந்தால் அதையும் போராட்டத்தில் கலந்துகொள்ள சொல்லியிருப்பார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

இந்த ஆர்ப்பாட்டத்தால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நிறைய கான்சப்ட் கிடைத்துள்ளது. ஸ்டாலின் பேரணி சொல்வதற்குப் பதிலாகப் போரணி என்று சொல்லிவிட்டார். அது முழுவதும் ஃபெயிலியர் அணிதான்.

தமிழ்நாடு மக்கள் அமைதியாக இருக்கும் நிலையில் அவர்களைப் பிரித்து எப்படியாவது விஷ விதைகளை விதைத்து வன்முறையை அரங்கேற்றி அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகவே இந்தப் பேரணியை நடத்தினர்" என்றார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் ‘அதிமுக’ பக்தர்!

Intro:திமுக பேரணிக்கு 108 சங்கங்கள் அழைப்பு விடுத்தும் வெறும் ஐந்தாயிரம் பேர் கலந்துகொண்டதும் மிகப்பெரிய தோல்வி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்


Body:முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 32-வது நினைவு தினத்தையொட்டி சென்னை ராயபுரத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் அவர் சமுதாயத்திற்கு செய்த தொண்டு திரைப்படத்தில் கூறிய கருத்துக்கள் மூலம் இன்று மட்டுமல்ல இன்னும் பல நூறு ஆண்டுகள் மக்கள் மனதில் அழியாத சுவடுகளாக இடம் பெறுவார்

திமுக பேரணி நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு பல கூட்டணிக் கட்சிகள் 108 அமைப்புகள் என எல்லாக் கூட்டத்தையும் கூட்டிக்கொண்டு வெறும் ஐந்தாயிரம் பேர் மட்டும்தான் கலந்து கொண்டுள்ளனர் இது மிகப் பெரிய அசிங்கம் கண்டிப்பாக இது ஒரு மிகப்பெரிய தோல்விதான் திமுக கூட்டணிக்கு

ஸ்டாலின் பிறந்த குழந்தையை மட்டும்தான் போராட்டத்திற்கு அழைக்கவில்லை அதற்கு பேசத் தெரிந்தால் அதையும் போராட்டத்தில் கலந்து கொள்ள சொல்லி இருப்பார்

இந்த ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழக அரசுக்கு களங்கம் விளைவித்து விடலாம் இந்த போராட்டம் மூலம் மக்கள் மனதில் விஷ விதையை ஊன்றி விடலாம் என்று நினைத்தார் ஆனால் அதிமுக அரசு அதை செயல்படுத்த விடவில்லை

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் கான்செப்ட் இதற்காக நிறைய பேர் வந்துள்ளனர் அவர்களுக்கு நிறைய கான்சப்ட் கிடைத்துள்ளது
ஸ்டாலின் பேரணி சொல்வதற்கு பதிலாக போரணி என்று சொல்லிவிட்டார் அது முழுவதும் ஃபெயிலியர் அணிதான்

தமிழ்நாடு மக்கள் அமைதியாக இருக்கும் நிலையில் அவர்களைப் பிரித்து எப்படியாவது விஷ விதைகளை தூண்டி வன்முறையை அரங்கேற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த பேரணி நடத்து கிறார்

பெரியார் ஒரு சமூக சிந்தனையாளர் அடித்தட்டு மக்களுக்காக உழைத்து மறைந்த சிறந்தவர் அவரே கொச்சைப் படுத்துவது தவறு என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்


Conclusion:திமுக பேரணிக்கு 108 சங்கங்கள் அழைப்பு விடுத்தும் வெறும் ஐந்தாயிரம் பேர் கலந்துகொண்டதும் மிகப்பெரிய தோல்வி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.