ETV Bharat / state

Asian Champions Trophy: மலேசியாவை தோற்கடித்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா!

author img

By

Published : Aug 7, 2023, 6:49 AM IST

ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா - மலேசியா இடையேயான ஆட்டத்தில், மலேசியாவை தோற்கடித்து புள்ளி பட்டியலில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறியது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7-வது ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 06) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. இதில் நான்கு பகுதிகள் கொண்ட ஆட்டத்தில் முதல் பகுதியில் இந்திய அணி தனது முதல் கோலை அடித்தது.

இரண்டாவது கால் பகுதியில் இரண்டு அணிகளும் கோலகள் அடிக்காத நிலையில், மூன்றாவது கால் பகுதியில் இரண்டு கோள்களும், நான்காவது கால் பகுதியில் இரண்டு கோள்களும் அடித்து இந்திய அணி மலேசியாவை பந்தாடியது. இதில் இந்திய அணி வீரர்கள் கார்த்தி செல்வம், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், ஜுக்ராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் இந்திய அணி 0-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஜப்பான்வுடனான போட்டியில் பெனால்டி கார்னர் (Penalty corner) வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணி இந்த முறை சரியாக பயன்படுத்திக் கொண்டது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகளில் ஏழு புள்ளிகளுடன் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி நிலைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆசியன் ஹாக்கி போட்டியில் முதலாவதாக ஆட்டத்தில் இந்திய அணி சீன அணியை 7-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இரண்டாம் ஆட்டத்தில் ஜப்பானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா ஏழு புள்ளிகளை பெற்றுள்ளது. இதில், தோல்வி அடைந்ததன் மூலம் மலேசியா ஆறு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

மேலும், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் செய்யப்பட்டது. இதில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ராணா அப்துல், கான், முஹம்மது ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். அதேபோன்று ஜப்பான் அணி வீரர்கள் தனகா செரன், கேட்டோ ரியோசி, ஓஹாஷி மசாகி ஆகியூர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதுவரை மூன்று போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் இரண்டில் சமனும், ஒன்றில் தோல்வியும் அடைந்ததால் இரண்டு புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அதேபோன்று இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடிய ஜப்பான் அணி இரண்டில் சமனும், ஒன்றில் தோல்வியும் அடைந்ததால் இரண்டு புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

அதேபோன்று நேற்று முதலாவதாக நடைபெற்ற கொரியா, சீனா இடையேயான போட்டியும் 1-1 என்ற புள்ளியில் சமன் செய்யப்பட்டது. இதில், சீனாவைச் சேர்ந்த சென் சோங்காங் ஒரு கோலும், கொரியாவைச் சேர்ந்த வீரர் ஜாங் ஜாங்யுன் ஒரு கோலும் அடித்ததால் ஆட்டம் சமன் செய்யப்பட்டது.

இந்த ஆட்டம் சமன் செய்யப்பட்டதால், இரண்டு சமன், ஒரு போட்டியில் வெற்றி என கொரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் இரண்டு போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டியில் சமன் என சீனா ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு தக்க சமயத்தில் கைகொடுத்த தமிழர் - நெகிழ்ந்து போன பாக் வீரர்கள்!

சென்னை: எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7-வது ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 06) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. இதில் நான்கு பகுதிகள் கொண்ட ஆட்டத்தில் முதல் பகுதியில் இந்திய அணி தனது முதல் கோலை அடித்தது.

இரண்டாவது கால் பகுதியில் இரண்டு அணிகளும் கோலகள் அடிக்காத நிலையில், மூன்றாவது கால் பகுதியில் இரண்டு கோள்களும், நான்காவது கால் பகுதியில் இரண்டு கோள்களும் அடித்து இந்திய அணி மலேசியாவை பந்தாடியது. இதில் இந்திய அணி வீரர்கள் கார்த்தி செல்வம், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், ஜுக்ராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் இந்திய அணி 0-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஜப்பான்வுடனான போட்டியில் பெனால்டி கார்னர் (Penalty corner) வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணி இந்த முறை சரியாக பயன்படுத்திக் கொண்டது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகளில் ஏழு புள்ளிகளுடன் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி நிலைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆசியன் ஹாக்கி போட்டியில் முதலாவதாக ஆட்டத்தில் இந்திய அணி சீன அணியை 7-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இரண்டாம் ஆட்டத்தில் ஜப்பானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா ஏழு புள்ளிகளை பெற்றுள்ளது. இதில், தோல்வி அடைந்ததன் மூலம் மலேசியா ஆறு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

மேலும், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் செய்யப்பட்டது. இதில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ராணா அப்துல், கான், முஹம்மது ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். அதேபோன்று ஜப்பான் அணி வீரர்கள் தனகா செரன், கேட்டோ ரியோசி, ஓஹாஷி மசாகி ஆகியூர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதுவரை மூன்று போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் இரண்டில் சமனும், ஒன்றில் தோல்வியும் அடைந்ததால் இரண்டு புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அதேபோன்று இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடிய ஜப்பான் அணி இரண்டில் சமனும், ஒன்றில் தோல்வியும் அடைந்ததால் இரண்டு புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

அதேபோன்று நேற்று முதலாவதாக நடைபெற்ற கொரியா, சீனா இடையேயான போட்டியும் 1-1 என்ற புள்ளியில் சமன் செய்யப்பட்டது. இதில், சீனாவைச் சேர்ந்த சென் சோங்காங் ஒரு கோலும், கொரியாவைச் சேர்ந்த வீரர் ஜாங் ஜாங்யுன் ஒரு கோலும் அடித்ததால் ஆட்டம் சமன் செய்யப்பட்டது.

இந்த ஆட்டம் சமன் செய்யப்பட்டதால், இரண்டு சமன், ஒரு போட்டியில் வெற்றி என கொரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் இரண்டு போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டியில் சமன் என சீனா ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு தக்க சமயத்தில் கைகொடுத்த தமிழர் - நெகிழ்ந்து போன பாக் வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.