சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் தொழில் தொடர்புடைய நபர்கள் வீடுகளில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலும், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக செய்த மோசடி வழக்கில் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது கைது செய்யப்பட்டு உடல்நல குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகம்படி சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அசோக்குமார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்து வருவதாக அமலாகத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.