ETV Bharat / state

வங்கக் கடலில் உருவானது 'புல் புல்' புயல் - வானிலை ஆய்வு மையம்!

author img

By

Published : Nov 7, 2019, 3:58 PM IST

சென்னை: மத்திய கிழக்கு வங்கக் கடலில் 'புல் புல்' உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவானது 'புல் புல்' புயல்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், 'மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிக் கொண்டிருந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. இதற்கு 'புல் புல்' புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரக்கூடும்.

இதையொட்டி, தமிழ்நாட்டு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் நவம்பர் 8ஆம் தேதி(நாளை) முதல் 10ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில் உருவானது 'புல் புல்' புயல்

சென்னையைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் திருப்பதியில் 5 செ.மீ., மழையும், சிவகங்கையில் 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

மகா புயல் எதிரொலி: குஜராத்தில் ஒதுங்கிய 600 தமிழக மீனவர்கள் - உதவுமா அரசு?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், 'மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிக் கொண்டிருந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. இதற்கு 'புல் புல்' புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரக்கூடும்.

இதையொட்டி, தமிழ்நாட்டு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் நவம்பர் 8ஆம் தேதி(நாளை) முதல் 10ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில் உருவானது 'புல் புல்' புயல்

சென்னையைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் திருப்பதியில் 5 செ.மீ., மழையும், சிவகங்கையில் 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

மகா புயல் எதிரொலி: குஜராத்தில் ஒதுங்கிய 600 தமிழக மீனவர்கள் - உதவுமா அரசு?

Intro:Body:சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், நேற்று மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. புல் புல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரக்கூடும்.

தமிழக மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழத்தில் உள் மாவட்டங்களில் நவம்பர் 8 முதல் 10 ஆம் தேதி வரை ஒர் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை பொறுத்தவரை வறண்ட வானிலை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் திருப்பதி 5 செ.மீ மழையும், சிவகங்கை 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.