சென்னை தலைமை காலனி ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் உமா மகேஷ்வரி. தலைமை செயலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது முதல் கணவரை பிரிந்த நிலையில், இரண்டாவதாக லோகநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது மகளுக்கு ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு உமா மகேஷ்வரி சென்றுள்ளார். அப்போது ஆயுதப்படை காவலரான லட்சுமிபதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக உமா மகேஷ்வரிக்கு லட்சுமிபதி உதவியதாக கூறப்படுகிறது.
கடன் கொடுத்த காவலர்
பின்னர் நாளடைவில் இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உமாமகேஷ்வரிக்கு சுமார் ரூ. 4 லட்சம் வரை லட்சுமிபதி கடனாக பெற்றுத் தந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவரின் திருமணத்தை மீறிய உறவு குறித்து உமா மகேஷ்வரியின் கணவர் லோகநாதனுக்கு தெரியவந்துள்ளது.
ஆகையால் திருமணத்தை மீறிய உறவை கைவிடுமாறு உமா மகேஷ்வரியை, லோகநாதன் கண்டித்துள்ளார். இதனை இருவரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது மனைவி உமாமகேஷ்வரியின் மூலமாகவே லட்சுமிபதியை வீட்டிற்கு அழைத்து பேசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன், கல்லை கொண்டு காவலர் லட்சுமிபதியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த காவலர் லட்சுமிபதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தலைமை செயலக காலனி காவல்துறையினர், லோகநாதன், அவரது மனைவி உமா மகேஷ்வரி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Facebook மூலம் நூதன முறையில் மோசடி - ஐடி ஊழியர் கைது