ETV Bharat / state

மாணவியர்களுக்கான மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்? முழுவிவரம்!

author img

By

Published : Jun 27, 2022, 3:50 PM IST

இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியர்களும் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மாணவியர்களுக்கான மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்? தேவையான தகுதிகள் என்னென்ன?
மாணவியர்களுக்கான மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்? தேவையான தகுதிகள் என்னென்ன?

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு/ பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு/ தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்விபயின்று முடிக்கும் வரை, மாதம் 1000 ரூபாயை அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம்.

திட்டத்தின் நோக்கம்:

  • பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
  • குழந்தை திருமணத்தை தடுத்தல்.
  • குடும்பச்சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்.
  • பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல்.
  • பெண் குழந்தைகளின் விருப்பத்தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பைத் தொடர ஊக்குவித்தல்.
  • உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத்துறைகளிலும் பங்கேற்கச்செய்தல்.
  • உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்.
  • பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப்பாதுகாப்பை உறுதி செய்தல்.
  • அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல்.

தேவையான தகுதிகள்:

  1. மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர் கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.
  2. தனியார் பள்ளியில் Right to Education (RTE)கீழ் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற பின், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவியர்கள் இத்திட்டத்தின்கீழ் பயனடையலாம்.
  3. அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறைப் பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
  4. மாணவிகள் 8, 10 அல்லது 12 ஆகிய வகுப்புகளில் படித்து முடித்த பின்னர் முதன்முறையாக உயர் கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
  5. சான்றிதழ் (Certificate course), பட்டயம் (Diploma / ITI, D.TEd., courses), இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) (B.A., B.Sc., B.Com., BBA., BCA. and all Arts & Science, Fine Arts Courses), தொழில் சார்ந்த படிப்பு (B.E., B.Tech, M.B.B.S., B.D.S., B.Sc.,(Agri). B.V.Sc., B.Fsc., B.L., etc.) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc., போன்றவையும் இதில் அடங்கும்.
  6. தொலைதூரக்கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
  7. 2022 - 2023ஆம் கல்வியாண்டில் மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  8. மேலும் இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப்பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக்கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின்கீழ் பயனடையலாம்.
  9. 2021 - 2022ஆம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை (under graduation) நிறைவு செய்து விடுவார்கள்.
  10. இத்திட்டத்தின்கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முதுநிலைப் படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.

இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள் அல்லது கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும், இத்திட்டத்திற்காக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை எப்போது?

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு/ பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு/ தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்விபயின்று முடிக்கும் வரை, மாதம் 1000 ரூபாயை அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம்.

திட்டத்தின் நோக்கம்:

  • பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
  • குழந்தை திருமணத்தை தடுத்தல்.
  • குடும்பச்சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்.
  • பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல்.
  • பெண் குழந்தைகளின் விருப்பத்தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பைத் தொடர ஊக்குவித்தல்.
  • உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத்துறைகளிலும் பங்கேற்கச்செய்தல்.
  • உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்.
  • பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப்பாதுகாப்பை உறுதி செய்தல்.
  • அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல்.

தேவையான தகுதிகள்:

  1. மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர் கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.
  2. தனியார் பள்ளியில் Right to Education (RTE)கீழ் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற பின், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவியர்கள் இத்திட்டத்தின்கீழ் பயனடையலாம்.
  3. அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறைப் பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
  4. மாணவிகள் 8, 10 அல்லது 12 ஆகிய வகுப்புகளில் படித்து முடித்த பின்னர் முதன்முறையாக உயர் கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
  5. சான்றிதழ் (Certificate course), பட்டயம் (Diploma / ITI, D.TEd., courses), இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) (B.A., B.Sc., B.Com., BBA., BCA. and all Arts & Science, Fine Arts Courses), தொழில் சார்ந்த படிப்பு (B.E., B.Tech, M.B.B.S., B.D.S., B.Sc.,(Agri). B.V.Sc., B.Fsc., B.L., etc.) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc., போன்றவையும் இதில் அடங்கும்.
  6. தொலைதூரக்கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
  7. 2022 - 2023ஆம் கல்வியாண்டில் மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  8. மேலும் இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப்பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக்கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின்கீழ் பயனடையலாம்.
  9. 2021 - 2022ஆம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை (under graduation) நிறைவு செய்து விடுவார்கள்.
  10. இத்திட்டத்தின்கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முதுநிலைப் படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.

இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள் அல்லது கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும், இத்திட்டத்திற்காக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.