ETV Bharat / state

இந்து மகாசபை கூட்டத்திற்கு முன் அனுமதி கோரிய வழக்கு - காவல் துறைக்கு புதிய உத்தரவு

சென்னை: அகில பாரத இந்து மகாசபை சார்பில் நடத்தப்படவுள்ள அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து ஜனவரி 23ஆம் தேதிக்குள் முடிவெடுக்க கோவை மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Jan 18, 2020, 7:45 PM IST

hindu-maha-sabha
hindu-maha-sabha

கோவை மாநகராட்சி சிவானந்தா காலனியில் வரும் 25ஆம் தேதி அகில பாரத இந்து மகாசபை சார்பில் அரசியல் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அந்த அமைப்பின் தேசியத் தலைவர் சக்கரபாணி மகாராஜ், தேசிய துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டம் நடத்த அனுமதி கோரி ரத்னபுரி காவல் நிலையத்தில் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீது எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை எனக்கூறி, அகில பாரத இந்து மகாசபையின் இளைஞர் அணித் தலைவர் சுபாஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஒலிபெருக்கி அனுமதி பெற்று கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில் அனுமதி கோரிய விண்ணப்பம் மீது காவல் துறையினர் இன்னும் முடிவெடுக்காததால், மனுவை ஏற்றுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து வரும் 23ஆம் தேதிக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க...

மெரினாவில் உதவி ஆணையரிடம் வாக்குவாதம் செய்த அதிமுக பிரமுகர்

கோவை மாநகராட்சி சிவானந்தா காலனியில் வரும் 25ஆம் தேதி அகில பாரத இந்து மகாசபை சார்பில் அரசியல் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அந்த அமைப்பின் தேசியத் தலைவர் சக்கரபாணி மகாராஜ், தேசிய துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டம் நடத்த அனுமதி கோரி ரத்னபுரி காவல் நிலையத்தில் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீது எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை எனக்கூறி, அகில பாரத இந்து மகாசபையின் இளைஞர் அணித் தலைவர் சுபாஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஒலிபெருக்கி அனுமதி பெற்று கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில் அனுமதி கோரிய விண்ணப்பம் மீது காவல் துறையினர் இன்னும் முடிவெடுக்காததால், மனுவை ஏற்றுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து வரும் 23ஆம் தேதிக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க...

மெரினாவில் உதவி ஆணையரிடம் வாக்குவாதம் செய்த அதிமுக பிரமுகர்

Intro:Body:அகில பாரத இந்து மகாசபை சார்பில் நடத்தப்படவுள்ள அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து ஜனவரி 23க்குள் முடிவெடுக்க கோவை மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சிவானந்தா காலனியில் ஜனவரி 25ம் தேதி அகில பாரத இந்து மகாசபை சார்பில் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தேசிய தலைவர் சக்கரபாணி மகாராஜ், தேசிய துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டம் நடத்த அனுமதி கோரி ரத்னபுரி காவல் நிலையத்தில் டிசம்பர் மாதம் 14ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில பாரத இந்து மகாசபையின் இளைஞர் அணி தலைவர் சுபாஷ் அளித்த மனு மீது எந்த முடிவையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

ஒலிபெருக்கி அனுமதி பெற்று, கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில் அனுமதி கோரிய விண்ணப்பத்தை காவல்துறையினர் இன்னும் முடிவெடுக்காததால், மனுவை ஏற்று கூட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டுமென சுபாஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கூட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவை, சட்டத்திற்கு பரிசீலித்து ஜனவரி 23ம் தேதிக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.