ETV Bharat / state

இந்து மகா சபா தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அவரது மனைவி மறுப்பு! - hindu maha sabha

சென்னை: பணம் பறிக்கும் நோக்கத்திற்காகவே தனது கணவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக இந்து மகா சபா ஸ்ரீகண்டன் மனைவி காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

hindu-maha-sabha-president-wife-complaint-against-her-husbands-sexual-deceive-case
மனைவி புகார்
author img

By

Published : Jan 10, 2020, 11:03 AM IST

அகில இந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் மீது அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் நிரஞ்சனி, பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், 2016ஆம் ஆண்டு இந்து மகா சபாவில் மகளிர் அணியில் இணைந்து பணிபுரிந்து வந்ததாகவும், பின்னர் தன்னை பொதுச் செயலாளராக தலைவர் ஸ்ரீகண்டன் நியமித்ததாக குறிப்பிட்ட நிரஞ்சனி, தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுக்க தொடங்கி, மிரட்டல் விடுத்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

நான்ஸி வைத்திருந்த புகைப்படம் ஆதரம்

இதனையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் ஸ்ரீகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீகண்டனின் மனைவி நான்ஸி, காவல் ஆணையர் அலுவலகத்தில் நிரஞ்சனி மீது புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நான்ஸி, நிரஞ்சனி ஆண்களை மயக்கி பணம் பறிக்க கூடியவர் என்றும் பலருடன் அவர் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்பித்தார். மேலும் ஸ்ரீ மிகுந்த இரக்க மனம் கொண்டவர் என்பதால் கோடி ரூபாய் வரை நிரஞ்சனிக்கு செலவு செய்துள்ளதாக தெரிவித்ததோடு, சமீபத்தில் நிரஞ்சனியின் சகோதரர் திருமணத்திற்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறினார். அந்த பணத்தை திரும்ப கேட்டதால்தான் தனது கணவர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதாக நான்ஸி குற்றஞ்சாட்டினார்.

ஸ்ரீகண்டன் மனைவி நான்ஸி பேட்டி


இதையும் படியுங்க: ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.30ஆயிரம் கொள்ளை - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

அகில இந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் மீது அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் நிரஞ்சனி, பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், 2016ஆம் ஆண்டு இந்து மகா சபாவில் மகளிர் அணியில் இணைந்து பணிபுரிந்து வந்ததாகவும், பின்னர் தன்னை பொதுச் செயலாளராக தலைவர் ஸ்ரீகண்டன் நியமித்ததாக குறிப்பிட்ட நிரஞ்சனி, தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுக்க தொடங்கி, மிரட்டல் விடுத்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

நான்ஸி வைத்திருந்த புகைப்படம் ஆதரம்

இதனையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் ஸ்ரீகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீகண்டனின் மனைவி நான்ஸி, காவல் ஆணையர் அலுவலகத்தில் நிரஞ்சனி மீது புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நான்ஸி, நிரஞ்சனி ஆண்களை மயக்கி பணம் பறிக்க கூடியவர் என்றும் பலருடன் அவர் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்பித்தார். மேலும் ஸ்ரீ மிகுந்த இரக்க மனம் கொண்டவர் என்பதால் கோடி ரூபாய் வரை நிரஞ்சனிக்கு செலவு செய்துள்ளதாக தெரிவித்ததோடு, சமீபத்தில் நிரஞ்சனியின் சகோதரர் திருமணத்திற்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறினார். அந்த பணத்தை திரும்ப கேட்டதால்தான் தனது கணவர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதாக நான்ஸி குற்றஞ்சாட்டினார்.

ஸ்ரீகண்டன் மனைவி நான்ஸி பேட்டி


இதையும் படியுங்க: ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.30ஆயிரம் கொள்ளை - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

Intro:Body:பணம் பறிக்கும் நோக்கத்திற்காகவே தனது கணவர் மீது பாலியல் புகார் அளித்திருப்பதாக இந்து மகாசபா ஸ்ரீகண்டன் மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரப்பரப்பு புகார்.

அகில இந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்கிற ஸ்ரீகண்டன். இவர் மீது அந்த அமைப்பின் பொது செயலாளர் நிரஞ்சனி பாலியல் தொல்லை கொடுத்ததாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு இந்து சபாவில் மகளிர் அணியில் இணைந்து பணிபுரிந்து வந்ததாகவும், பின்னர் பொதுச்செயலாளராக தலைவர் ஸ்ரீகண்டன் நியமித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ள நிரஞ்சனி, தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கத் தொடங்கி, மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஸ்ரீ மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீ யின் மனைவி நான்ஸி, காவல் ஆணையர் அலுவலகத்தில் நிரஞ்சனி மீது புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிரஞ்சனி ஆண்களை மயக்கி பணம் பறிக்க கூடியவர் என்று கூறி பலருடன் அவர் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்பித்தார். மேலும் ஸ்ரீ மிகுந்த இரக்க மனம் கொண்டவர் என்பதால் கோடி ரூபாய் வரை நிரஞ்சனிக்கு செலவு செய்துள்ளதாக தெரிவித்ததோடு, சமீபத்தில் நிரஞ்சனியின் சகோதரர் திருமணத்திற்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறினார். அந்த பணத்தை திரும்ப கேட்டதால்தான் தனது கணவர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவரது நடவடிக்கைகள் மோசமாக இருந்ததை அடுத்து சபையில் இருந்து அவரை நீக்கிவியதாக கூறிய அவர், அதன் பிறகும் தனது கணவரோடு தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டினார்.

((பேட்டி: நான்சி, ஸ்ரீகண்டனின் மனைவி))

நான்சியின் சகோதரரும் வழக்கறிஞருமான சார்லஸ் செய்தியாளர்களிடம் நிரஞ்சனி மீது பெங்களூருவில் கொலை வழக்கு உள்ளது என்றார். தனது கணவர் வெங்கட் ராவை, சுபாஷ் என்பவரோடு சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுகொன்ற வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக மாதவபுரா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலியான பிணை ஆணை வைத்து ஏமாற்றியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

((பேட்டி: சார்லஸ், வழக்கறிஞர்))Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.