ETV Bharat / state

அரசின் திட்டங்களை ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்து கூற வேண்டும்: அமைச்சர் பொன்முடி

author img

By

Published : Feb 4, 2023, 4:53 PM IST

ஆசிரியர்களிடம் அன்பான கோரிக்கையை வைப்பதாகவும், அரசு கொண்டுவரும் அனைத்து திட்டத்தையும் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது ஆசிரியர்கள் கையில் தான் உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பல்கலைக்கழக ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்தமாக குரல் கொடுங்கள். இதுவே, எனது அன்பான வேண்டுகோள் என இன்று (பிப்.4) பல்கலைகழக ஆசிரியர் சங்கமான AUT-வின் 75வது ஆண்டு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள உலக பல்கலைகழக உதவி மையத்தில் பல்கலைகழக ஆசிரியர் சங்கமான AUT-வின் 75வது ஆண்டு விழா (75th Anniversary of the University Teachers Association) இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பல்கலைகழக ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, பொதுச்செயலாளர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் சேடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம ஊதியம்: நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, 'உங்களில் ஒருவனாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே, இந்த சங்கத்தின் வைரவிழா, பொன்விழாக்களில் கலந்துகொண்ட அதை உரிமையுடன் தான் இன்றும் பங்கேற்றுள்ளேன். 1947-ல் இந்த சங்கம் தொடங்கப்பட்டது. 1987-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று போராடியபோது சிறை சென்றேன்.

உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முன்னணி: 1989-ல் நான் அமைச்சராக பொறுப்பேற்றேன். கருணாநிதி பொறுப்பேற்றப் பின், மத்திய அரசு ஊழியர்கள் ஊதியம் போல், மாநில அரசு ஊழியர்களுக்கும் மாற்றி அமைத்தார். நிதிநிலை சரியாகும் போது, வரும் காலங்களில் உங்களுக்கு தேவையானதை நிறைவேற்ற அரசு முயற்சி செய்யும். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் உயர்கல்வித்துறை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எண்ணிக்கையில் மட்டுமல்ல தரத்திலும் உயர வேண்டும். ஆசிரியர்களிடம் அன்பான கோரிக்கையை வைக்கிறேன். நாங்கள் என்னதான் திட்டம் கொண்டு வந்தாலும், அதனை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது உங்கள் கையில்தான் உள்ளது.

இதையும் படிங்க: "இடைத்தேர்தலை இரட்டை இலையில் அதிமுக எதிர்கொள்ள வேண்டும்" - அண்ணாமலை

பொற்காலம்: காமராஜர் காலத்தில் ஆரம்ப கல்வி உயர்ந்தது. கருணாநிதி காலத்தில் உயர்கல்வி உயர்ந்தது. இந்த ஆட்சியில் இந்தியாவின் பொற்காலமாக மாற்றப்பட வேண்டும் என்பதே முதலமைச்சரின் குறிக்கோள். மேலும், நீங்கள் அனைவரும் ஒன்றாய் சேர வேண்டும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்தமாக குரல் கொடுங்கள். இதுவே, எனது அன்பான வேண்டுகோள்' எனப் பேசினார்.

தொடர்ந்து, பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் 75வது விழா கருத்தரங்க மலரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெற்றுக்கொண்டார். பல்கலைகழக ஆசிரியர்கள் சங்கத்தின் அலுவலக கட்டடம் புதுப்பிக்கப்பட்டதோட்டு, பேராசிரியர் செந்தாமரை நினைவு இல்லம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டம்; மாற்றம் தேவை: இந்த விழா குறித்து பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சேடு, 'பல்கலைகழக ஆசிரியர் சங்கம் 1947-ல் தொடங்கப்பட்ட உயர்கல்வித்துறையின் முன்னோடி இயக்கம். இன்று பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம், 1976-ல் தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

பொறியியல் கல்லூரியில் ஒற்றை சாளர முறையில் தான், மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதை போல் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளோம். அதனை அமைச்சர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பேனா வேணா.. கடல் அன்னை வடிவில் பாஜக போஸ்டர்!

சென்னை: பல்கலைக்கழக ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்தமாக குரல் கொடுங்கள். இதுவே, எனது அன்பான வேண்டுகோள் என இன்று (பிப்.4) பல்கலைகழக ஆசிரியர் சங்கமான AUT-வின் 75வது ஆண்டு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள உலக பல்கலைகழக உதவி மையத்தில் பல்கலைகழக ஆசிரியர் சங்கமான AUT-வின் 75வது ஆண்டு விழா (75th Anniversary of the University Teachers Association) இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பல்கலைகழக ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, பொதுச்செயலாளர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் சேடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம ஊதியம்: நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, 'உங்களில் ஒருவனாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே, இந்த சங்கத்தின் வைரவிழா, பொன்விழாக்களில் கலந்துகொண்ட அதை உரிமையுடன் தான் இன்றும் பங்கேற்றுள்ளேன். 1947-ல் இந்த சங்கம் தொடங்கப்பட்டது. 1987-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று போராடியபோது சிறை சென்றேன்.

உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முன்னணி: 1989-ல் நான் அமைச்சராக பொறுப்பேற்றேன். கருணாநிதி பொறுப்பேற்றப் பின், மத்திய அரசு ஊழியர்கள் ஊதியம் போல், மாநில அரசு ஊழியர்களுக்கும் மாற்றி அமைத்தார். நிதிநிலை சரியாகும் போது, வரும் காலங்களில் உங்களுக்கு தேவையானதை நிறைவேற்ற அரசு முயற்சி செய்யும். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் உயர்கல்வித்துறை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எண்ணிக்கையில் மட்டுமல்ல தரத்திலும் உயர வேண்டும். ஆசிரியர்களிடம் அன்பான கோரிக்கையை வைக்கிறேன். நாங்கள் என்னதான் திட்டம் கொண்டு வந்தாலும், அதனை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது உங்கள் கையில்தான் உள்ளது.

இதையும் படிங்க: "இடைத்தேர்தலை இரட்டை இலையில் அதிமுக எதிர்கொள்ள வேண்டும்" - அண்ணாமலை

பொற்காலம்: காமராஜர் காலத்தில் ஆரம்ப கல்வி உயர்ந்தது. கருணாநிதி காலத்தில் உயர்கல்வி உயர்ந்தது. இந்த ஆட்சியில் இந்தியாவின் பொற்காலமாக மாற்றப்பட வேண்டும் என்பதே முதலமைச்சரின் குறிக்கோள். மேலும், நீங்கள் அனைவரும் ஒன்றாய் சேர வேண்டும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்தமாக குரல் கொடுங்கள். இதுவே, எனது அன்பான வேண்டுகோள்' எனப் பேசினார்.

தொடர்ந்து, பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் 75வது விழா கருத்தரங்க மலரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெற்றுக்கொண்டார். பல்கலைகழக ஆசிரியர்கள் சங்கத்தின் அலுவலக கட்டடம் புதுப்பிக்கப்பட்டதோட்டு, பேராசிரியர் செந்தாமரை நினைவு இல்லம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டம்; மாற்றம் தேவை: இந்த விழா குறித்து பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சேடு, 'பல்கலைகழக ஆசிரியர் சங்கம் 1947-ல் தொடங்கப்பட்ட உயர்கல்வித்துறையின் முன்னோடி இயக்கம். இன்று பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம், 1976-ல் தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

பொறியியல் கல்லூரியில் ஒற்றை சாளர முறையில் தான், மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதை போல் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளோம். அதனை அமைச்சர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பேனா வேணா.. கடல் அன்னை வடிவில் பாஜக போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.