ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 4 நாட்களுக்கு கனமழை!

author img

By

Published : Jun 27, 2022, 4:05 PM IST

மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தொடர்ந்து, 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நான்கு நாட்களுக்கு கனமழை!
தமிழ்நாட்டில் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நான்கு நாட்களுக்கு கனமழை!

சென்னை: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில், 'மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 27) தமிழ்நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (ஜூன் 28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகியப் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் வருகிற ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற ஜூலை 1 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்றப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 - 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று (ஜூன் 27) மற்றும் நாளை (ஜூன் 28) குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தொடர்ந்து நாளை மறுதினம் (ஜூன் 29) அன்று குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் லட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல் நாள் பள்ளிக்குச்சென்ற மாணவன் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழப்பு - சோகத்தை ஏற்படுத்தும் முழுப்பின்னணி

சென்னை: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில், 'மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 27) தமிழ்நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (ஜூன் 28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகியப் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் வருகிற ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற ஜூலை 1 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்றப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 - 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று (ஜூன் 27) மற்றும் நாளை (ஜூன் 28) குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தொடர்ந்து நாளை மறுதினம் (ஜூன் 29) அன்று குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் லட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல் நாள் பள்ளிக்குச்சென்ற மாணவன் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழப்பு - சோகத்தை ஏற்படுத்தும் முழுப்பின்னணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.