ETV Bharat / state

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை - சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

author img

By

Published : Nov 7, 2021, 1:44 PM IST

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வெள்ள பாதிப்புகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் விடிய விடியப் பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (நவ.7) கனமழையால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பள்ளமான பகுதியில் தேங்கிய வெள்ளநீரை அகற்றுவதற்குத் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சென்னையில் 12 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்துள்ளது. மாநகராட்சி, குடிநீர், கழிவுநீர் வாரியம் காலையில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. சைதாப்பேட்டை ஒட்டிய அடையாற்றில் தடுப்புச்சுவர் கட்டும் பணி ஒரு அளவுக்கு நிறைவு பெற்றிருக்கிறது. இதன் காரணமாக மழை நீர் வீடுகளுக்குள் புகாது.

சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. மழை நின்றால் மட்டுமே நீரை வெளியேற்றும் பணி விரைவாக மேற்கொள்ள முடியும். 2015 பெருவெள்ளம் போன்ற சூழல் தற்போது இல்லை. ஏரிகளில் நீரின் அளவை கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு வழங்கியுள்ளார்.

தற்காலிக முகாம்கள் அமைப்பதற்கான சூழல் தற்போது எழவில்லை. மழை பாதிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது"எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னைக்கு ரெட் அலர்ட்: களத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் விடிய விடியப் பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (நவ.7) கனமழையால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பள்ளமான பகுதியில் தேங்கிய வெள்ளநீரை அகற்றுவதற்குத் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சென்னையில் 12 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்துள்ளது. மாநகராட்சி, குடிநீர், கழிவுநீர் வாரியம் காலையில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. சைதாப்பேட்டை ஒட்டிய அடையாற்றில் தடுப்புச்சுவர் கட்டும் பணி ஒரு அளவுக்கு நிறைவு பெற்றிருக்கிறது. இதன் காரணமாக மழை நீர் வீடுகளுக்குள் புகாது.

சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. மழை நின்றால் மட்டுமே நீரை வெளியேற்றும் பணி விரைவாக மேற்கொள்ள முடியும். 2015 பெருவெள்ளம் போன்ற சூழல் தற்போது இல்லை. ஏரிகளில் நீரின் அளவை கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு வழங்கியுள்ளார்.

தற்காலிக முகாம்கள் அமைப்பதற்கான சூழல் தற்போது எழவில்லை. மழை பாதிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது"எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னைக்கு ரெட் அலர்ட்: களத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.