ETV Bharat / state

சரகர் உறுதிமொழியை எதிர்ப்பது ஏன்?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

author img

By

Published : May 4, 2022, 7:47 PM IST

தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ள ’சரகர்’ உறுதிமாெழியை சமஸ்கிருதத்தில் ஏற்க வேண்டும் என்பதாலும், மருத்துவர்கள் யாருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதிலும் தவறான கருத்துகள் உள்ளதாலும் அந்த உறுதிமொழியை எதிர்க்கிறோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சரகர் உறுதிமொழியை எதிர்ப்பது ஏன்?: அமைச்சர் மா.சுப்ரமணியம் விளக்கம்
சரகர் உறுதிமொழியை எதிர்ப்பது ஏன்?: அமைச்சர் மா.சுப்ரமணியம் விளக்கம்

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில், அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவரையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்கள் குழுவிற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

சரகர் உறுதிமொழியை எதிர்ப்பது ஏன்?: அமைச்சர் மா.சுப்ரமணியம் விளக்கம்

வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை: அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” உலகம் முழுவதும் பேரிடர் காலம் என்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சுணக்கம் இருந்தது. பேரிடர் காலத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்தும் உறுப்பு தானம் பெறுவதில் பெறும் சிக்கல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை விரைவுப்படுத்திட வேண்டும் எனவும், மூளைச்சாவு அடைந்தவரிடம் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும் வழிமுறைகளைக் கூறினோம்.

அதன்பின் தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு 93 நிமிடங்களில் இதயம் வரவழைக்கப்பட்டு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

அதேபோல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 19 வயது இளைஞரின் இதயம் பெற்றோர்கள் ஒப்புதலுடன் பெற்று, ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் செய்த இளையராஜா என்ற 30 வயதானவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

சிகிச்சை முடிந்தவரை நேரில் சந்தித்தோம். உடல் நலமுடன் உள்ளார். ஓமந்தூராரில் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெறுகின்ற 9ஆவது இதய மாற்று அறுவை சிகிச்சையாக உள்ளது. தமிழ்நாட்டில் 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 110 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுத்த வேண்டியவை செயலாக்கம் பெற்றிருக்கிறது.

சரகர் உறுதிமொழியை ஏற்க முடியாது: முதியோருக்கான பொழுதுபோக்கு, காது கேட்காத குழந்தைகளுக்கு, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு செயல் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டங்கள் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருக்கிறது என்பதையும் ஆலோசிக்க உள்ளோம். மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு விவகாரத்தில் மதுரை கல்லூரி முதல்வர் காத்திருப்புப்பட்டியலில் வைக்கப்பட்டார்.

ஹிப்போகிரெட்டிக் உறுதிமாெழிக்கு பதிலாக மகரிஷி பெயரிலான சரகர் உறுதிமாெழியை எடுத்துக்கொண்டது குறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் நேரில் விசாரணை நடத்தினார். அந்தக் கல்லூரி முதல்வர் தெரியாமல் நடந்த விவகாரம் என அவர் கூறியதையடுத்து முதலமைச்சர் அவரை மீண்டும் கல்லூரி முதல்வர் பணியில் அமர்த்தியுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை கூறும் தகவல்களை ஏற்று கல்லூரியினை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளது. ராமேஸ்வரம் உள்ளிட்ட 3 கல்லூரிகளில் இதைப்போன்ற விவகாரம் நடைபெற்றுள்ளது. அவர்களும் விளக்கம் அளித்துள்ளனர். அவர்களுக்கும் எச்சரிக்கையாக கூறப்பட உள்ளது.

மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி விவாகரத்தில் மக்களவையில் ஒன்றிய துணை அமைச்சர் சரகர் உறுதிமொழி எடுக்க வேண்டும் என உத்தரவு வழங்கவில்லை எனக் கூறியுள்ளார். தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளதாகக் கூறியுள்ளனர். எனவே மருத்துவத்துறையின் உயர் அலுவலர்கள் அனுமதி இல்லாமல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.

பிற்போக்கு கருத்துகளைக் கொண்ட சரகர் உறுதிமொழி: ஏற்கெனவே உள்ள உறுதிமாெழி ஆங்கில மருத்துவர் ’ஹிப்போகிரெட்டிக்’ கொண்டு வந்தது. அதில் ஏழைகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும். மருத்துவர்கள் தன்னால் முடிந்ததைத் தெரிவிக்க வேண்டும். தன்னால் முடியாவிட்டால் வேறு மருத்துவரின் உதவியை நாட வேண்டும் உள்ளிட்டவைகளைக் கொண்ட அற்புதமான உறுதிமாெழியாகும்.

சரகர் உறுதி மாெழியில் , படிக்க வரும்போது, வேள்வித்தீயின் முன்னாள் நின்று சபதம் சமஸ்கிருதத்தில் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும். யாராவது ஒரு பெண் கணவருடனோ அல்லது வேறு துணையோ இல்லாமல் வந்தால் மருத்துவம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பிரதமர், முதலமைச்சர் போன்றவர்களை மதிக்காதவர்களுக்கும், தீயப்பழக்கம் உடையவருக்கும் மருத்துவம் பார்க்கக் கூடாது எனக்கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் என்றால் தன்னை கத்தியால் குத்தவரும் குற்றாவாளியாக இருந்தாலும், தனக்கு ஏற்பட்ட வெட்டுக்காயத்தை விட அதனைப் பெரியதாகக் கருதி சிகிச்சை அளிக்க வேண்டும். சரகர் உறுதிமொழியில் கூறப்பட்டது போன்றவற்றை கற்றுத் தரக்கூடாது.

மேலும் இந்தியாவில் 127 கோடி மக்கள் இருக்கும் போது, 7 கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் 24 ஆயிரம் பேர் மட்டுமே பேசும் மொழியை திணிக்க நினைப்பது தவறு. அதனால் தான் எதிர்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Vignesh Lockup death : தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் விசாரணை!

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில், அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவரையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்கள் குழுவிற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

சரகர் உறுதிமொழியை எதிர்ப்பது ஏன்?: அமைச்சர் மா.சுப்ரமணியம் விளக்கம்

வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை: அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” உலகம் முழுவதும் பேரிடர் காலம் என்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சுணக்கம் இருந்தது. பேரிடர் காலத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்தும் உறுப்பு தானம் பெறுவதில் பெறும் சிக்கல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை விரைவுப்படுத்திட வேண்டும் எனவும், மூளைச்சாவு அடைந்தவரிடம் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும் வழிமுறைகளைக் கூறினோம்.

அதன்பின் தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு 93 நிமிடங்களில் இதயம் வரவழைக்கப்பட்டு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

அதேபோல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 19 வயது இளைஞரின் இதயம் பெற்றோர்கள் ஒப்புதலுடன் பெற்று, ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் செய்த இளையராஜா என்ற 30 வயதானவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

சிகிச்சை முடிந்தவரை நேரில் சந்தித்தோம். உடல் நலமுடன் உள்ளார். ஓமந்தூராரில் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெறுகின்ற 9ஆவது இதய மாற்று அறுவை சிகிச்சையாக உள்ளது. தமிழ்நாட்டில் 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 110 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுத்த வேண்டியவை செயலாக்கம் பெற்றிருக்கிறது.

சரகர் உறுதிமொழியை ஏற்க முடியாது: முதியோருக்கான பொழுதுபோக்கு, காது கேட்காத குழந்தைகளுக்கு, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு செயல் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டங்கள் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருக்கிறது என்பதையும் ஆலோசிக்க உள்ளோம். மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு விவகாரத்தில் மதுரை கல்லூரி முதல்வர் காத்திருப்புப்பட்டியலில் வைக்கப்பட்டார்.

ஹிப்போகிரெட்டிக் உறுதிமாெழிக்கு பதிலாக மகரிஷி பெயரிலான சரகர் உறுதிமாெழியை எடுத்துக்கொண்டது குறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் நேரில் விசாரணை நடத்தினார். அந்தக் கல்லூரி முதல்வர் தெரியாமல் நடந்த விவகாரம் என அவர் கூறியதையடுத்து முதலமைச்சர் அவரை மீண்டும் கல்லூரி முதல்வர் பணியில் அமர்த்தியுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை கூறும் தகவல்களை ஏற்று கல்லூரியினை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளது. ராமேஸ்வரம் உள்ளிட்ட 3 கல்லூரிகளில் இதைப்போன்ற விவகாரம் நடைபெற்றுள்ளது. அவர்களும் விளக்கம் அளித்துள்ளனர். அவர்களுக்கும் எச்சரிக்கையாக கூறப்பட உள்ளது.

மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி விவாகரத்தில் மக்களவையில் ஒன்றிய துணை அமைச்சர் சரகர் உறுதிமொழி எடுக்க வேண்டும் என உத்தரவு வழங்கவில்லை எனக் கூறியுள்ளார். தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளதாகக் கூறியுள்ளனர். எனவே மருத்துவத்துறையின் உயர் அலுவலர்கள் அனுமதி இல்லாமல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.

பிற்போக்கு கருத்துகளைக் கொண்ட சரகர் உறுதிமொழி: ஏற்கெனவே உள்ள உறுதிமாெழி ஆங்கில மருத்துவர் ’ஹிப்போகிரெட்டிக்’ கொண்டு வந்தது. அதில் ஏழைகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும். மருத்துவர்கள் தன்னால் முடிந்ததைத் தெரிவிக்க வேண்டும். தன்னால் முடியாவிட்டால் வேறு மருத்துவரின் உதவியை நாட வேண்டும் உள்ளிட்டவைகளைக் கொண்ட அற்புதமான உறுதிமாெழியாகும்.

சரகர் உறுதி மாெழியில் , படிக்க வரும்போது, வேள்வித்தீயின் முன்னாள் நின்று சபதம் சமஸ்கிருதத்தில் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும். யாராவது ஒரு பெண் கணவருடனோ அல்லது வேறு துணையோ இல்லாமல் வந்தால் மருத்துவம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பிரதமர், முதலமைச்சர் போன்றவர்களை மதிக்காதவர்களுக்கும், தீயப்பழக்கம் உடையவருக்கும் மருத்துவம் பார்க்கக் கூடாது எனக்கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் என்றால் தன்னை கத்தியால் குத்தவரும் குற்றாவாளியாக இருந்தாலும், தனக்கு ஏற்பட்ட வெட்டுக்காயத்தை விட அதனைப் பெரியதாகக் கருதி சிகிச்சை அளிக்க வேண்டும். சரகர் உறுதிமொழியில் கூறப்பட்டது போன்றவற்றை கற்றுத் தரக்கூடாது.

மேலும் இந்தியாவில் 127 கோடி மக்கள் இருக்கும் போது, 7 கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் 24 ஆயிரம் பேர் மட்டுமே பேசும் மொழியை திணிக்க நினைப்பது தவறு. அதனால் தான் எதிர்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Vignesh Lockup death : தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.