ETV Bharat / state

'தர்பார் படத்தால் நஷ்டமடைந்தவர்களுக்கு அரசு உதவும்' - அமைச்சர் கடம்பூர் ராஜு

author img

By

Published : Feb 3, 2020, 2:17 PM IST

சென்னை: தர்பார் திரைப்படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவும் என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

kadambur raju
kadambur raju

இணையதளத்தில் திரையரங்க டிக்கெட் விற்பனையை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உள் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, வணிகவரித் துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த செயலர்கள், செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநர், நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், "தர்பார் திரைப்படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவும். ஆன்லைன் மூலம் அரசே டிக்கெட் விற்பனை செய்யும் விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. விரைவில் விலை நிர்ணயிக்கப்படும். பண்டிகை காலங்களில் சிறப்புக் காட்சிகளுக்கும் அரசே டிக்கெட் விலையை நிர்ணயிக்கவுள்ளது" எனத் தெரிவித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பு

திருட்டு விசிடியை ஒழிப்பது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "திருட்டு விசிடியை ஒழிக்க அரசால் மட்டும் முடியாது. திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய மூன்று துறையினரும் ஒத்துழைத்தால்தான் அரசால் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் திரையரங்கில் படத்தை வெளியிடும்போதுதான் திருட்டு விசிடி வெளிவருகிறது" என்றார்.

இதையும் படிங்க : 'இப்படிப் பேசினால் எப்படி நான் வேலை செய்ய முடியும்' - வருத்தப்பட்ட வசந்தகுமார் எம்.பி.

இணையதளத்தில் திரையரங்க டிக்கெட் விற்பனையை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உள் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, வணிகவரித் துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த செயலர்கள், செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநர், நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், "தர்பார் திரைப்படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவும். ஆன்லைன் மூலம் அரசே டிக்கெட் விற்பனை செய்யும் விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. விரைவில் விலை நிர்ணயிக்கப்படும். பண்டிகை காலங்களில் சிறப்புக் காட்சிகளுக்கும் அரசே டிக்கெட் விலையை நிர்ணயிக்கவுள்ளது" எனத் தெரிவித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பு

திருட்டு விசிடியை ஒழிப்பது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "திருட்டு விசிடியை ஒழிக்க அரசால் மட்டும் முடியாது. திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய மூன்று துறையினரும் ஒத்துழைத்தால்தான் அரசால் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் திரையரங்கில் படத்தை வெளியிடும்போதுதான் திருட்டு விசிடி வெளிவருகிறது" என்றார்.

இதையும் படிங்க : 'இப்படிப் பேசினால் எப்படி நான் வேலை செய்ய முடியும்' - வருத்தப்பட்ட வசந்தகுமார் எம்.பி.

Intro:Body: செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் இணையதளத்தில் திரையரங்க டிக்கெட் விற்பனையை முறைப்படுற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்,

தர்பார் திரைப்படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவும் என தெரிவித்த அமைச்சர், ஆன்லைன் மூலம் அரசே டிக்கெட் விற்பனை செய்யும் விவகாரத்தில் முடிவு எடப்பட்டுள்ளதாகவும், விரைவில் விலை நிர்ணயிக்கப்படும் எனவும், பண்டிகை காலங்களில் சிறப்பு காட்சிகளுக்கும் அரசே டிக்கெட் விலையை நிர்ணயிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருட்டு வி.சி.டி.யை ஒழிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திருட்டு விசிடியை ஒழிக்க அரசால் மட்டும் முடியாது எனவும், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மூன்று துறையினரும் ஒத்துழைத்தால் தான் அரசால் கட்டுப்படுத்த முடியும் எனவும் திரையரங்கில் படத்தை வெளியிடும் போது தான் திருட்டு விசிடி வெளி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.