ETV Bharat / state

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் 19 புதிய அறிவிப்புகள்!

author img

By

Published : Apr 12, 2023, 8:18 PM IST

பதிவு பெற்ற சுய உதவிக் குழுக்களுக்கு கிராமங்களில் குடிசைத் தொழில் செய்ய ஏதுவாக பூமிதான நிலங்கள் வீட்டு மனைகளாக வழங்கப்படும் என்பது உள்பட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் 19 புதிய அறிவிப்புகள்!
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் 19 புதிய அறிவிப்புகள்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று (ஏப்ரல் 12) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், இத்துறையின் சார்பில் 19 புதிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டுள்ளார். அவை,

  1. பேரிடர் முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் தொடர் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி, புதிய TN-Alert கைபேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி 12.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
  2. மயிலாடுதுறை மாவட்டம் திருமைலாடி மற்றும் முதலைமேடு ஆகிய கிராமங்களில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்கப்படும்.
  3. பேரிடர் காலங்களில் தடையற்ற தொலைத் தொடர்பை உறுதிபடுத்தும் வகையில், 31 மாவட்டங்களில் தற்போதுள்ள அனலாக் VFH ரிப்பீட்டர்கள் 7.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் ரிப்பீட்டர்களாக மேம்படுத்தப்படும்.
  4. வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில், இடது கரை 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்தப்படும்.
  5. தமிழ்நாட்டில் புதியதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  6. நில அளவை மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான இ-சேவைகள் குறித்த தகவல்களை அளிக்கும் பொறுப்பு, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்கத்தில் தொலைபேசி அழைப்பு மையம் நிறுவப்படும்.
  7. இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிவதற்கு புதிய செயலி உருவாக்கப்படும்.
  8. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி வட்டங்களில் உள்ள மூன்று கிராமங்களில் மனை வாடகை விதிக்கப்பட்டு, பட்டா வழங்கப்படாமல் உள்ள பகுதி மக்களுக்கு இரயத்துவாரி மனை பட்டா வழங்கப்படும்.
  9. ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம் மற்றும் நகரம் வார்டு C, D மற்றும் E-இல் சர்க்கார் புறம்போக்கு நத்தம் நிலத்தில், 70 ஆண்டுகளுக்கு மேலாக தார்சு வீடு அல்லது ஓட்டு வீடு கட்டி குடியிருந்து அனுபவம் செய்து வரும் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
  10. கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் புஞ்சை புகழூர் வடக்கு கிராமம் பகுதியில் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் மக்களுக்கு, நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்கப்படும். இதனால் சுமார் ஆயிரத்து 705 குடும்பங்கள் பயன் அடையும்.
  11. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் திருபுவனம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நத்தம் நிலத்தில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு மனை பட்டா வழங்கப்படும். இதனால் சுமார் 200 குடும்பங்கள் பயனடையும்.
  12. திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வட்டம் வெங்களாபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் நிலங்கள், கிராமம் மற்றும் நகர்ப்புற வருவாய் ஆவணங்களில் சேர்க்கப்படாமல் இருந்து வந்த நிலையில், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை தீர்வு காணும் வகையில், நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு இணைய வழி வீட்டு மனை பட்டா வழங்கப்படும். இதனால் சுமார் 250 குடும்பங்கள் பயனடையும்.
  13. தருமபுரி மாவட்டம் மற்றும் வட்டம் அல்லி கிராமத்தில் நில இழப்பு செய்து, ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா 2020ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஊரக வளர்ச்சித் துறை அல்லது வீட்டு வசதித் துறையுடன் இணைந்து வீட்டு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பயனாளிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்கப்படும்.
  14. ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை மற்றும் கீழ் பவானி நீர் பாசனத் திட்டங்களின் பேரில் திட்ட நிபந்தனை பட்டா பெற்றவர்களுக்கு, தற்போது திட்ட நிபந்தனை தளர்வு செய்து அயன் பட்டா வழங்கப்படும்.
  15. தமிழ்நாடு நிலச் சீர்திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள குடும்பம் என்ற வரையறையில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை அளிக்கும் பொருட்டு, திருமணம் ஆகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும்.
  16. பதிவு பெற்ற சுய உதவிக் குழுக்களுக்கு, கிராமங்களில் குடிசைத் தொழில் செய்ய ஏதுவாக பூமிதான நிலங்கள் வீட்டு மனைகளாக வழங்கப்படும்.
  17. நகர்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களை அறியாமல் கிரையம் பெற்றவர் திட்டத்தின் கீழ், வரன்முறை செய்யும் தீர்வு நாள் நீட்டிக்கப்படும்.
  18. நலிந்தோர் நிவாரண உதவித் திட்டம் மற்றும் விபத்து நிவாரண உதவித் திட்டம் தொடர்பான சேவைகள் இணைய வழியில் வழங்கப்படும்.
  19. வருவாய்த் துறையில் வழங்கப்படும் இதர 25 வகையான சான்றிதழ் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும்.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று (ஏப்ரல் 12) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், இத்துறையின் சார்பில் 19 புதிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டுள்ளார். அவை,

  1. பேரிடர் முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் தொடர் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி, புதிய TN-Alert கைபேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி 12.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
  2. மயிலாடுதுறை மாவட்டம் திருமைலாடி மற்றும் முதலைமேடு ஆகிய கிராமங்களில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்கப்படும்.
  3. பேரிடர் காலங்களில் தடையற்ற தொலைத் தொடர்பை உறுதிபடுத்தும் வகையில், 31 மாவட்டங்களில் தற்போதுள்ள அனலாக் VFH ரிப்பீட்டர்கள் 7.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் ரிப்பீட்டர்களாக மேம்படுத்தப்படும்.
  4. வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில், இடது கரை 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்தப்படும்.
  5. தமிழ்நாட்டில் புதியதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  6. நில அளவை மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான இ-சேவைகள் குறித்த தகவல்களை அளிக்கும் பொறுப்பு, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்கத்தில் தொலைபேசி அழைப்பு மையம் நிறுவப்படும்.
  7. இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிவதற்கு புதிய செயலி உருவாக்கப்படும்.
  8. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி வட்டங்களில் உள்ள மூன்று கிராமங்களில் மனை வாடகை விதிக்கப்பட்டு, பட்டா வழங்கப்படாமல் உள்ள பகுதி மக்களுக்கு இரயத்துவாரி மனை பட்டா வழங்கப்படும்.
  9. ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம் மற்றும் நகரம் வார்டு C, D மற்றும் E-இல் சர்க்கார் புறம்போக்கு நத்தம் நிலத்தில், 70 ஆண்டுகளுக்கு மேலாக தார்சு வீடு அல்லது ஓட்டு வீடு கட்டி குடியிருந்து அனுபவம் செய்து வரும் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
  10. கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் புஞ்சை புகழூர் வடக்கு கிராமம் பகுதியில் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் மக்களுக்கு, நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்கப்படும். இதனால் சுமார் ஆயிரத்து 705 குடும்பங்கள் பயன் அடையும்.
  11. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் திருபுவனம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நத்தம் நிலத்தில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு மனை பட்டா வழங்கப்படும். இதனால் சுமார் 200 குடும்பங்கள் பயனடையும்.
  12. திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வட்டம் வெங்களாபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் நிலங்கள், கிராமம் மற்றும் நகர்ப்புற வருவாய் ஆவணங்களில் சேர்க்கப்படாமல் இருந்து வந்த நிலையில், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை தீர்வு காணும் வகையில், நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு இணைய வழி வீட்டு மனை பட்டா வழங்கப்படும். இதனால் சுமார் 250 குடும்பங்கள் பயனடையும்.
  13. தருமபுரி மாவட்டம் மற்றும் வட்டம் அல்லி கிராமத்தில் நில இழப்பு செய்து, ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா 2020ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஊரக வளர்ச்சித் துறை அல்லது வீட்டு வசதித் துறையுடன் இணைந்து வீட்டு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பயனாளிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்கப்படும்.
  14. ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை மற்றும் கீழ் பவானி நீர் பாசனத் திட்டங்களின் பேரில் திட்ட நிபந்தனை பட்டா பெற்றவர்களுக்கு, தற்போது திட்ட நிபந்தனை தளர்வு செய்து அயன் பட்டா வழங்கப்படும்.
  15. தமிழ்நாடு நிலச் சீர்திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள குடும்பம் என்ற வரையறையில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை அளிக்கும் பொருட்டு, திருமணம் ஆகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும்.
  16. பதிவு பெற்ற சுய உதவிக் குழுக்களுக்கு, கிராமங்களில் குடிசைத் தொழில் செய்ய ஏதுவாக பூமிதான நிலங்கள் வீட்டு மனைகளாக வழங்கப்படும்.
  17. நகர்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களை அறியாமல் கிரையம் பெற்றவர் திட்டத்தின் கீழ், வரன்முறை செய்யும் தீர்வு நாள் நீட்டிக்கப்படும்.
  18. நலிந்தோர் நிவாரண உதவித் திட்டம் மற்றும் விபத்து நிவாரண உதவித் திட்டம் தொடர்பான சேவைகள் இணைய வழியில் வழங்கப்படும்.
  19. வருவாய்த் துறையில் வழங்கப்படும் இதர 25 வகையான சான்றிதழ் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும்.

இதையும் படிங்க: கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் 22 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.