ETV Bharat / state

மாநில அரசைக் கண்டித்து விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்!

author img

By

Published : Oct 21, 2019, 1:06 PM IST

சென்னை: விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யாமல் இருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, சேப்பாக்கத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

farmers-protest-in-chepauk

உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை மதித்து அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கோரி அய்யாகண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை சேப்பாக்கம் அருகே அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு, "விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் மாநில அரசு அதனை செயல்படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.

மேலும், "கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலையைக் கொடுக்க அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. போராட்டங்களில் ஈடுபடும் எங்களை காவல்துறையினர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுகின்றனர்" என்றார்.

கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திருச்சி வீரப்பூரைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் மயக்கமடைந்ததால், அவரை காவல் துறை வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

போராட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி

இதையும் படிங்க: 'வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வளப்படுத்துங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!

உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை மதித்து அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கோரி அய்யாகண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை சேப்பாக்கம் அருகே அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு, "விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் மாநில அரசு அதனை செயல்படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.

மேலும், "கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலையைக் கொடுக்க அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. போராட்டங்களில் ஈடுபடும் எங்களை காவல்துறையினர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுகின்றனர்" என்றார்.

கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திருச்சி வீரப்பூரைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் மயக்கமடைந்ததால், அவரை காவல் துறை வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

போராட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி

இதையும் படிங்க: 'வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வளப்படுத்துங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 21.10.19

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாத மாநில அரசை கண்டித்து அய்யாகண்ணு தலைமையில் சேப்பாக்கம் அருகே அரை நிர்வாணப் போராட்டம்...

விவசாயிகளுக்கு விவசாய கடன்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி அய்யாகண்ணு தலைமையில் சேப்பாக்கத்தில் அரை நிறுவாணப் போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது பேட்டியளித்த அய்யாகண்ணு, விவசாயக் கடன்களை தள்ளுபய் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அதனை செயல்படுத்தாமல் மாநில அரசு தாமதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலையை கொடுக்க மறுக்கிறது அரசு.. போராட்டங்களில் ஈடுபட்டால் காவல்துறையினர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகின்றனர். எங்கள் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றார்..

போராட்டத்தில் ஈடுபாடிருந்த திருச்சி வீரப்பூரை செர்ந்த விவசாயி ராமலிங்கம் மயக்கமடைந்ததால் காவல்துறை ஜீப்பில் காவல்துறையினர் மருத்துவம்னைக்கு அழைத்துச் சென்றனர். சென்னையில் மழை பெய்துவரும் நிலையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

tn_che_01_farmers_protest_demanding_agriculture_subsidy_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.