தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, தேர்தல் ஆணையம் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றது. அதன் தொடர்ச்சியாக, தாம்பரம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாம்பரம் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
இதையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் சரிப்பார்க்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு செலுத்தும் மையமான வள்ளுவர் குருகுலம் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சரிசெய்யப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உரிய பாதுகாப்புடன் அறையில் பூட்டி சீல் வைத்தனர்.
துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் அரசியல் கட்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதனை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீர்த்து வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று மற்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க:வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!