ETV Bharat / state

டிஎஸ்பி முதல் உளவுத்துறை ஐஜி வரை... யார் இந்த ஈஸ்வரமூர்த்தி?

சென்னை: தமிழ்நாடு உளவுத்துறையின் ஐஜியாக சென்னை நகர மத்தியக் குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையராக இருந்த ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈஸ்வரமூர்த்தி
ஈஸ்வரமூர்த்தி
author img

By

Published : May 31, 2020, 12:46 AM IST

தமிழ்நாடு உளவுத்துறை ஐஜியாக சத்தியமூர்த்தி ஐபிஎஸ் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றதால், அந்த இடத்தில் யாரை நியமிப்பது என்று தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வந்தது. உளவுத்துறை ஐஜி பதவி, ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவதால், அதில் அனுபவம் மிக்க அதிகாரிகள்தான் நியமிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் உளவுத்துறை புதிய ஐஜியாக தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் பிரபாகர் பிறப்பித்தார். அந்த உத்தரவில், ‘‘சென்னை நகர மத்தியக் குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, தமிழக உளவுப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுப்பிரிவின் கூடுதல் டிஜிபி பதவியும் காலியாக இருப்பதால் அந்த பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார். மேலும் சென்னை நகர மத்தியக் குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் பதவியும் கூடுதல் பொறுப்பாக இவருக்கு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவரான ஈஸ்வரமூர்த்தி, உளவுத்துறையில் அதிக அனுபவம் வாய்ந்தவர். எம்ஏ முதுகலைப்பட்டம் பெற்றவரான இவர், 1998ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியாவார். இவர் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தமிழக காவல் பணியில் சேர்ந்தவர்.

எஸ்பிசிஐடி (மாநில உளவுத்துறை) சிறப்பு பிரிவில் எஸ்பி, தமிழக போலீஸ் லஞ்சஒழிப்புப்பிரிவு, சென்னை காவல் துறை நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் திறம்பட பணியாற்றியவர்.

மத்திய அரசு பணியான சிபிஐயில் எஸ்பியாக ஐந்து ஆண்டுகளும், டிஐஜியாக இரண்டு ஆண்டுகளும் பதவி வகித்தவர். அதன் பின்னர் தமிழக காவல் பணிக்கு திரும்பிய ஈஸ்வரமூர்த்தி, மாநில உள்நாட்டுப் பாதுகாப்பு டிஐஜியாக இரண்டு ஆண்டுகளும், அதன் பின்னர் ஐஜியாக பதவி உயர்ந்து அதே பிரிவில் மூன்று ஆண்டுகளும் பணிபுரிந்து உளவுத்துறையில் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றார். அதனையடுத்து கடந்த ஆண்டு ஜுலை மாதம் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் ஊடுருவல் விவகாரம் தலைதுாக்கியதையடுத்து அவரை மீண்டும் மாநில உள்நாட்டு பாதுகாப்புப்பிரிவு பொறுப்பு ஐஜியாக தமிழக அரசு நியமித்தது. உளவுத்துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த இவரை, உளவுத்துறை ஐஜியாக பணியமர்த்தப்பட்டுள்ளது மூத்த காவல் அதிகாரிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு உளவுத்துறை ஐஜியாக சத்தியமூர்த்தி ஐபிஎஸ் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றதால், அந்த இடத்தில் யாரை நியமிப்பது என்று தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வந்தது. உளவுத்துறை ஐஜி பதவி, ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவதால், அதில் அனுபவம் மிக்க அதிகாரிகள்தான் நியமிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் உளவுத்துறை புதிய ஐஜியாக தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் பிரபாகர் பிறப்பித்தார். அந்த உத்தரவில், ‘‘சென்னை நகர மத்தியக் குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, தமிழக உளவுப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுப்பிரிவின் கூடுதல் டிஜிபி பதவியும் காலியாக இருப்பதால் அந்த பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார். மேலும் சென்னை நகர மத்தியக் குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் பதவியும் கூடுதல் பொறுப்பாக இவருக்கு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவரான ஈஸ்வரமூர்த்தி, உளவுத்துறையில் அதிக அனுபவம் வாய்ந்தவர். எம்ஏ முதுகலைப்பட்டம் பெற்றவரான இவர், 1998ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியாவார். இவர் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தமிழக காவல் பணியில் சேர்ந்தவர்.

எஸ்பிசிஐடி (மாநில உளவுத்துறை) சிறப்பு பிரிவில் எஸ்பி, தமிழக போலீஸ் லஞ்சஒழிப்புப்பிரிவு, சென்னை காவல் துறை நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் திறம்பட பணியாற்றியவர்.

மத்திய அரசு பணியான சிபிஐயில் எஸ்பியாக ஐந்து ஆண்டுகளும், டிஐஜியாக இரண்டு ஆண்டுகளும் பதவி வகித்தவர். அதன் பின்னர் தமிழக காவல் பணிக்கு திரும்பிய ஈஸ்வரமூர்த்தி, மாநில உள்நாட்டுப் பாதுகாப்பு டிஐஜியாக இரண்டு ஆண்டுகளும், அதன் பின்னர் ஐஜியாக பதவி உயர்ந்து அதே பிரிவில் மூன்று ஆண்டுகளும் பணிபுரிந்து உளவுத்துறையில் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றார். அதனையடுத்து கடந்த ஆண்டு ஜுலை மாதம் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் ஊடுருவல் விவகாரம் தலைதுாக்கியதையடுத்து அவரை மீண்டும் மாநில உள்நாட்டு பாதுகாப்புப்பிரிவு பொறுப்பு ஐஜியாக தமிழக அரசு நியமித்தது. உளவுத்துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த இவரை, உளவுத்துறை ஐஜியாக பணியமர்த்தப்பட்டுள்ளது மூத்த காவல் அதிகாரிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.