ETV Bharat / state

காதல் விவகாரம்: பாட்டில்களால் தாக்கிக்கொண்ட சிறார் உட்பட எட்டு பேர் கைது..!

author img

By

Published : Aug 8, 2022, 4:22 PM IST

தாம்பரம் அருகே காதல் விவகாரத்தினால் பாட்டில்களால் தாக்கிக்கொண்ட சிறார் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் அருகே காதல் விவகாரம்: பாட்டில்களால் தாக்கிகொண்ட சிறார் உட்பட எட்டு பேர் கைது..!
தாம்பரம் அருகே காதல் விவகாரம்: பாட்டில்களால் தாக்கிகொண்ட சிறார் உட்பட எட்டு பேர் கைது..!

சென்னை: மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனியைச்சேர்ந்தவர் சக்தி கணேஷ் (வயது-19). இவர் தாம்பரம் ஒத்தவாடை தெருவைச்சேர்ந்த 17-வயது இளம்பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், இளம்பெண்ணின் சித்தப்பா வேலு மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து,சக்தி கணேஷை 10 நாட்களுக்கு முன்பு கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் சக்தி கணேஷ், மேற்கு தாம்பரம் திருநீர்மலை சுடுகாடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வேலுவின் மகன் விக்னேஷ் (வயது-21) மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இளம்பெண்ணை காதலிக்கக்கூடாது என அவரை எச்சரித்து, மீறி காதலித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர்.

இதையடுத்து சக்தி கணேஷ் தனது நண்பர்களான அருண்குமார் (வயது-19); கரண் குமார்(வயது -23) மற்றும் 17-வயதுடைய சிறுவர்கள் இருவருடன் சேர்ந்து, வேலுவின் வீட்டிற்குச்சென்றுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பிற்கும் இடையே கைகலப்பாக மாறியது. அதில் சக்தி கணேஷ் மற்றும் இளம்பெண் தரப்பில் ஒருவரையொருவர் மாறி மாறி கற்களாலும் பாட்டில்களாலும் தாக்கிக்கொண்டனர்.

இந்தச்சம்பவம் குறித்து தகவலறிந்து தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்ற நிலையில், போலீசார் மீதும் பாட்டில்கள் வீசப்பட்டன. எனினும் மோதலில் போலீசாருக்கு காயம் ஏற்படாத நிலையில் சக்தி கணேஷ் மற்றும் இளம்பெண்ணின் தந்தை ஆகியாருக்கு காயம் ஏற்பட்டது.

இந்தச்சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ் (23), வேலு (51), சக்தி கணேஷ்(18),அருண்(19), கரண் குமார்(23), சஞ்சய் (20) மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவர், 16 வயதுடைய சிறுவன் உட்பட எட்டு பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இரண்டு சிறுவர்களை சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைத்து மற்றும் ஆறு பேரை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாகியுள்ள, விக்னேஷின் நண்பர்களைத்தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஒகேனக்கலில் ஆர்பரிக்கும் நீர் - பரிசல் இயக்க 30ஆவது நாளாக நீடிக்கும் தடை

சென்னை: மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனியைச்சேர்ந்தவர் சக்தி கணேஷ் (வயது-19). இவர் தாம்பரம் ஒத்தவாடை தெருவைச்சேர்ந்த 17-வயது இளம்பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், இளம்பெண்ணின் சித்தப்பா வேலு மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து,சக்தி கணேஷை 10 நாட்களுக்கு முன்பு கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் சக்தி கணேஷ், மேற்கு தாம்பரம் திருநீர்மலை சுடுகாடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வேலுவின் மகன் விக்னேஷ் (வயது-21) மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இளம்பெண்ணை காதலிக்கக்கூடாது என அவரை எச்சரித்து, மீறி காதலித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர்.

இதையடுத்து சக்தி கணேஷ் தனது நண்பர்களான அருண்குமார் (வயது-19); கரண் குமார்(வயது -23) மற்றும் 17-வயதுடைய சிறுவர்கள் இருவருடன் சேர்ந்து, வேலுவின் வீட்டிற்குச்சென்றுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பிற்கும் இடையே கைகலப்பாக மாறியது. அதில் சக்தி கணேஷ் மற்றும் இளம்பெண் தரப்பில் ஒருவரையொருவர் மாறி மாறி கற்களாலும் பாட்டில்களாலும் தாக்கிக்கொண்டனர்.

இந்தச்சம்பவம் குறித்து தகவலறிந்து தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்ற நிலையில், போலீசார் மீதும் பாட்டில்கள் வீசப்பட்டன. எனினும் மோதலில் போலீசாருக்கு காயம் ஏற்படாத நிலையில் சக்தி கணேஷ் மற்றும் இளம்பெண்ணின் தந்தை ஆகியாருக்கு காயம் ஏற்பட்டது.

இந்தச்சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ் (23), வேலு (51), சக்தி கணேஷ்(18),அருண்(19), கரண் குமார்(23), சஞ்சய் (20) மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவர், 16 வயதுடைய சிறுவன் உட்பட எட்டு பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இரண்டு சிறுவர்களை சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைத்து மற்றும் ஆறு பேரை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாகியுள்ள, விக்னேஷின் நண்பர்களைத்தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஒகேனக்கலில் ஆர்பரிக்கும் நீர் - பரிசல் இயக்க 30ஆவது நாளாக நீடிக்கும் தடை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.