ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் முதல் பரப்புரையை தொடங்கிய திமுக! - திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு

சென்னை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஆவடி அடுத்த நெமிலிச்சேரியில் இன்று தொடங்கியது.

dmk mla krishnasamy
dmk mla krishnasamy
author img

By

Published : Dec 18, 2019, 1:29 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் நெமிலிச்சேரியில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் தேசிங்கு, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் கே.சுரேஷ் குமார், நெமிலிச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தமிழ்ச்செல்வி, ஆகியோரை ஆதரித்து பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி இன்று தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார்.

சென்னையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுகவினர்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி, "தமிழ்நாட்டில் முதன்முதலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி நல்லாட்சி செய்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் அதிமுக அரசுக்கு சரியான பாடத்தை புகட்ட நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கிராமங்களிலும் ஊராட்சி மன்றத் தலைவர் ஒன்றியக் குழு உறுப்பினர் மாவட்டக் குழு உறுப்பினர் ஒன்றிய சேர்மன் போன்ற பதவிகளை அநேகமாக அதிக இடங்களில் திமுக தான் கைப்பற்றும். முதன்முதலாக வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கியுள்ளோம். மூன்று ஆண்டுகாலம் உள்ளாட்சியில் ஊழல் செய்த அரசுக்கு எதிராக திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் உள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: கோவையில் குழந்தைகளை விற்கும் கும்பல் கைது!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் நெமிலிச்சேரியில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் தேசிங்கு, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் கே.சுரேஷ் குமார், நெமிலிச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தமிழ்ச்செல்வி, ஆகியோரை ஆதரித்து பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி இன்று தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார்.

சென்னையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுகவினர்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி, "தமிழ்நாட்டில் முதன்முதலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி நல்லாட்சி செய்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் அதிமுக அரசுக்கு சரியான பாடத்தை புகட்ட நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கிராமங்களிலும் ஊராட்சி மன்றத் தலைவர் ஒன்றியக் குழு உறுப்பினர் மாவட்டக் குழு உறுப்பினர் ஒன்றிய சேர்மன் போன்ற பதவிகளை அநேகமாக அதிக இடங்களில் திமுக தான் கைப்பற்றும். முதன்முதலாக வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கியுள்ளோம். மூன்று ஆண்டுகாலம் உள்ளாட்சியில் ஊழல் செய்த அரசுக்கு எதிராக திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் உள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: கோவையில் குழந்தைகளை விற்கும் கும்பல் கைது!

Intro:மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஆவடி அடுத்த நெமிலிச்சேரியில் தொடங்கியதுBody:மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஆவடி அடுத்த நெமிலிச்சேரியில் தொடங்கியது.

இந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நெமிலிச்சேரி ஊராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில்
மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் தேசிங்கு அவர்களும்,
ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் கே.சுரேஷ் குமார்,
நெமிலிச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தமிழ்ச்செல்வி, ஆகியோரை ஆதரித்து பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி
இன்று முதல் வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.

இவர்கள் கட்சி கொடி ஏந்தி வேனில் வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.அப்போது பொதுமக்கள் இவர்களுக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.




பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி அவர்கள் கூறுகையில்,


தமிழ்நாட்டில் முதன்முதலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி நல்லாட்சி நடத்தியவர் திமுக தலைவர் கலைஞர்.

மூன்றாண்டு காலங்கள் உள்ளாட்சியில் எந்தவித நல்ல காரியங்களும் செய்யாமல் ஊழல் செய்தீர்கள் கூடிய விரைவில் அதிமுக அரசுக்கு சரியான பாடத்தை புகட்ட என்று நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கிராமங்களிலும் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஒன்றிய சேர்மன் போன்ற பதவிகளை அனேகமாக அதிக இடங்களில் 80 சதவிகித திமுக தான் கைப்பற்றும்.

1991ல் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித் தேர்தல் நடத்த வில்லை அதிமுக அரசு 2016-ல் ஆட்சிக்கு வந்தபோதும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் ஏமாற்றி வருவதை நன்றாக அறிவீர்கள்.

இப்பொழுது கூட இன்றைக்கு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இங்கு இருக்கக்கூடிய தேசிங்கு அவர்களும் என்னுடைய வலது புறம் இருக்க கூடிய சுரேஷ்குமார் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் இந்த பகுதியில் போட்டியிடுகிறார்கள்.

வாக்கு சேர்ப்பதற்காக முதன்முதலாக வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கி இருக்கிறோம் இப்போது ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரிக்கும் போது குண்டும் குழியுமாக உள்ள சாலையை கடந்து சென்று வாக்கு சேகரிக்கின்றோம்.

மக்கள் வெறுத்துப் போய் நீங்கள் எப்போது வெற்றிபெற்று வருவீர்கள் இந்த பிரச்சனை எல்லாம் தீர்த்து வைப்பதற்கு மூன்றாண்டு காலம் யாரும் எங்களை திரும்பி பார்த்து கேட்கவில்லையே கேட்பாரற்று நாதியற்று கடந்தோம்.

எனவே எங்களுடைய ஆதரவு என்றைக்கும் உதயசூரியனுக்கு தான்.

மூன்று ஆண்டுகாலம் உள்ளாட்சியில் ஊழல் செய்த அரசுக்கு எதிராக திமுக விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.