ETV Bharat / state

இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை

author img

By

Published : Jul 30, 2020, 10:03 PM IST

சென்னை: திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி மனு அளித்தனர்.

directors-bharathiraja-s-a-chandrasekhar-met-the-chief-minister
directors-bharathiraja-s-a-chandrasekhar-met-the-chief-minister

கரோனா வைரஸ் பரவல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் அலுவலகத்தில் அவரைத் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அதன்பின் அவர்கள் திரைப்பட படப்பிடிப்பு நடத்திட அனுமதி கோரி மனு அளித்தனர். அதற்கு முன்னதாக அவர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் அலுவலகத்தில் அவரைத் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அதன்பின் அவர்கள் திரைப்பட படப்பிடிப்பு நடத்திட அனுமதி கோரி மனு அளித்தனர். அதற்கு முன்னதாக அவர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொதுப் போக்குவரத்து தடை நீடிப்பு; மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.