ETV Bharat / state

சென்னையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று: அச்சத்தில் மக்கள்

சென்னை: ராயபுரம் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

author img

By

Published : Apr 18, 2020, 4:48 PM IST

Updated : Apr 18, 2020, 5:17 PM IST

corona
corona

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. நேற்று வரை சென்னையில் 228 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனா தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மண்டல வாரியாக, கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் குறித்த தகவலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவலின்படி நேற்று ஒரே நாளில் ராயபுரத்தில் மட்டும் 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

  • ராயபுரம் - 73 பேர்
  • திரு.வி.க நகர் - 33 பேர்
  • கோடம்பாக்கம் - 26 பேர்
  • அண்ணா நகர் - 24 பேர்
  • தண்டையார்பேட்டை - 20 பேர்
  • தேனாம்பேட்டை - 19 பேர்
  • அடையார் மற்றும் பெருங்குடி - 7 பேர்
  • வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் - 5 பேர்
  • ஆலந்தூர் மற்றும் மாதவரம் - 3 பேர்
  • சோழிங்கநல்லூர் - 2 பேர்

இதையும் படிங்க: மே 3ஆம் தேதிக்குள் கரோனா கட்டுக்குள் வரும் - எஸ்.பி. வேலுமணி

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. நேற்று வரை சென்னையில் 228 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனா தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மண்டல வாரியாக, கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் குறித்த தகவலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவலின்படி நேற்று ஒரே நாளில் ராயபுரத்தில் மட்டும் 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

  • ராயபுரம் - 73 பேர்
  • திரு.வி.க நகர் - 33 பேர்
  • கோடம்பாக்கம் - 26 பேர்
  • அண்ணா நகர் - 24 பேர்
  • தண்டையார்பேட்டை - 20 பேர்
  • தேனாம்பேட்டை - 19 பேர்
  • அடையார் மற்றும் பெருங்குடி - 7 பேர்
  • வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் - 5 பேர்
  • ஆலந்தூர் மற்றும் மாதவரம் - 3 பேர்
  • சோழிங்கநல்லூர் - 2 பேர்

இதையும் படிங்க: மே 3ஆம் தேதிக்குள் கரோனா கட்டுக்குள் வரும் - எஸ்.பி. வேலுமணி

Last Updated : Apr 18, 2020, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.