ETV Bharat / state

ஊரடங்கு மீறல்: ரூ.9 கோடியை நெருங்கும் அபராதத் தொகை

author img

By

Published : May 29, 2020, 11:52 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 66 நாள்களில் ஊரடங்கை மீறியதாக ஐந்து லட்சத்து 47 ஆயிரத்து 649 பேர் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்துக் காவலர்
போக்குவரத்துக் காவலர்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது.

தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளபோதும், சாலைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, பிற நேரங்களில் வீடுகளில் இருக்கும்படி பொதுமக்களிடம் அரசு அறிவுறுத்திவருகிறது.

இதில், ஊரடங்கு தொடங்கியது முதலே விதிகளை மீறுபவர்களைக் கண்காணித்து, வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களைப் பறிமுதல்செய்தும் காவல் துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த 66 நாள்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, மொத்தம் ஐந்து லட்சத்து 47 ஆயிரத்து 649 பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு லட்சத்து 30 ஆயிரத்து 206 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக இதுவரை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரிடமும் மொத்தம் எட்டு கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 104 ரூபாய் போக்குவரத்து காவல் துறையினரால் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பிரபல நாளிதழ் ஊழியர்கள் 39 பேருக்கு கரோனா!

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது.

தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளபோதும், சாலைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, பிற நேரங்களில் வீடுகளில் இருக்கும்படி பொதுமக்களிடம் அரசு அறிவுறுத்திவருகிறது.

இதில், ஊரடங்கு தொடங்கியது முதலே விதிகளை மீறுபவர்களைக் கண்காணித்து, வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களைப் பறிமுதல்செய்தும் காவல் துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த 66 நாள்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, மொத்தம் ஐந்து லட்சத்து 47 ஆயிரத்து 649 பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு லட்சத்து 30 ஆயிரத்து 206 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக இதுவரை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரிடமும் மொத்தம் எட்டு கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 104 ரூபாய் போக்குவரத்து காவல் துறையினரால் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பிரபல நாளிதழ் ஊழியர்கள் 39 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.