கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 38 நாள்களில் தமிழ்நாடு காவல் துறை 3,47,304 வழக்குகளை பதிவு செய்து, தடையை மீறியதாக 3,75,596 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது. 3,17,027 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3,64,60,219 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:மகளுக்காக மருத்துவச் சீட்டை முறைகேடாகப் பெற்ற கிரண்பேடி! - அடுக்கடுக்காக புகார் கூறும் அமைச்சர்