ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆலோசனை - சென்னை மாநகராட்சி தனித்தொகுதி விவகாரம்

சென்னை: டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடுமா? என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

k.balakrishnan
author img

By

Published : Nov 19, 2019, 7:31 PM IST

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்ட நிகழ்வின்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கே.பாலகிருஷ்ணன், " டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதற்குள் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்குமா? 13 ஆம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக மத்திய கல்வி நிறுவனமான ஐஐடியில் இந்த இரண்டரை ஆண்டுகளில் ஐந்து மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

மாணவி தற்கொலை குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை விசாரணை நத்தியதாகவோ சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்ததாகவோ தகவல் ஏதுமில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனம் என்பதால் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க தயங்குகிறதோ என்கிற கேள்வி எழுகிறது. சம்பந்தந்தப்பட்ட பேராசிரியர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.

பட்டியலின மக்களின் கோரிக்கை நியாயமானது

கமலின் அரசியல் அணுகுமுறை வேறு. ரஜினியின் அணுகுமுறை வேறு. இவர்கள் இருவரும் எந்த அடிப்படையில் ஒரு அணியில் இணைந்து செயல்படுவார்கள் என்பது பெரிய குழப்பத்தை தருகிறது. சினிமாவிலிருந்து யாராவது வந்தால் பின்னாடியே போகின்ற அளவுக்கு அரசியல் பார்வையற்றவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒருமித்த கருத்துடன் பாஜக -அதிமுக. கூட்டணியை முறியடிப்போம். மாநகராட்சி, நகராட்சி மேயர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. திருமாவளவன் கோரிக்கையில் நியாமில்லை என்று கூறிவிட முடியாது" என்று தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்ட நிகழ்வின்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கே.பாலகிருஷ்ணன், " டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதற்குள் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்குமா? 13 ஆம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக மத்திய கல்வி நிறுவனமான ஐஐடியில் இந்த இரண்டரை ஆண்டுகளில் ஐந்து மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

மாணவி தற்கொலை குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை விசாரணை நத்தியதாகவோ சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்ததாகவோ தகவல் ஏதுமில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனம் என்பதால் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க தயங்குகிறதோ என்கிற கேள்வி எழுகிறது. சம்பந்தந்தப்பட்ட பேராசிரியர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.

பட்டியலின மக்களின் கோரிக்கை நியாயமானது

கமலின் அரசியல் அணுகுமுறை வேறு. ரஜினியின் அணுகுமுறை வேறு. இவர்கள் இருவரும் எந்த அடிப்படையில் ஒரு அணியில் இணைந்து செயல்படுவார்கள் என்பது பெரிய குழப்பத்தை தருகிறது. சினிமாவிலிருந்து யாராவது வந்தால் பின்னாடியே போகின்ற அளவுக்கு அரசியல் பார்வையற்றவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒருமித்த கருத்துடன் பாஜக -அதிமுக. கூட்டணியை முறியடிப்போம். மாநகராட்சி, நகராட்சி மேயர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. திருமாவளவன் கோரிக்கையில் நியாமில்லை என்று கூறிவிட முடியாது" என்று தெரிவித்தார்.

Intro:Body:உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பாலகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு கூட்டம் இஸ்ரீறு நடபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நட்டில் நீண்ட காலமாக நடைபெறாமலிருக்கும் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வற்புறுத்தவது குறித்தும் அதை நடத்த மறுக்கும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

வருகின்ற டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதற்குள் இவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை ஏடுப்பார்களா 13 ஆம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

மூன்று ஆண்டு காலமாக தேரேதலை நடத்தாமலிருக்கும் அ.தி.மு.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புகு கட்டுப்பட்டு தேரேதலை நடத்துவார்களா என்ற சந்தேகம் இருக்கிறது.

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது.
கல் வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக மத்திய கல்வி நிறுவனமான ஐஐடி யில் கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் ஐந்து மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த 9 ஆம் தேதி பாத்திமா தற்கொலை செய்து கொண்டால் ஆனால் இன்றுவரை தமிழக அரசு உருப்படியான விசாரணை நத்தியதாகவும் சம்பந்தப்பட்டவகளை கைது செய்ததாகவும் எந்தவித முகாந்திரமும் இல்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனம் என்பதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தயங்குகிறதோ என்கிற கேள்வி எழுகிறது. சம்பந்தந்தப்பட்ட பேராசிரியர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகிறது. இன்னும் அந்த மூன்று பேராசிரியர்களை அழைத்து விசாரிப்பதாகவும் தெரியவில்லை.

எனவே பாத்திமா லத்தீப்பின் மர்மமான மரணத்திற்கு தமிழக அரசு வாய் திறந்து பதில் கூற வேண்டும் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்து வழக்கு நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் அதையொட்டி பல்வேறு இயக்கங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.

தமிழ்நாட்டில் வீட்டுமனை பிரச்னை என்பது மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. கோயில் நிலங்களில் தலைமுறை தலைமுறையாக கூடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை எதிர்த்து இந்து முன்னணி வழக்கு பதிவு செய்துள்ளது. கோயில் நிலங்களில் வசிப்பவரர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வருகின்ற 26, 27 ஆகிய தேதிகளில் இயக்கங்கள் நடத்தப்படும்.

அதேபோல் தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தானடித்த மூப்பாக பல செயல்களை செய்து வருகின்றனர். திருவள்ளுவருக்கு காவி உடுத்தி பட்டை விபூதி பூசுவது என்று அவரை அவமானப்படுத்தி வருகின்றனர். பி.ஜே.பி யிலே திருவள்ளுவரை சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்துத்துவ சக்திகளை எதிர்த்து அனைவரையும் ஒருங்கிணைத்து போராடுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

கமலின் அரசியல் அணுகுமுறை வேறு. ரஜினியின் அணுகுமுறை வேறு. இவர்கள் இருவரும் எந்த அடிப்படையில் ஒரு அணியில் இணைந்து செயல்படுவார்கள் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. சினிமாவிலிருந்து யாராவது வந்தால் பின்னாடியே போகின்ற அளவுக்கு அரசியல் பார்வை அற்றவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். மக்களவை தேர்தலில் பா.ஜ.க வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றுதான் ரஜினிகாந்த் உள்பட பலர் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் மீறிதான் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தனர். எனவே நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக தான் மக்கள் வாக்களிப்பார்கள். இடையில் வருபவர்கள் போகின்றவர்கள் வெற்றி பாதிக்க வைத்து விடுவார்கள் என்று நாங்கள் கருதவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தேர்தலை சந்தித்தோம் எனவே உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளிலும் பா.ஜ.க அ.திமு.க. கூட்டணியை முறையடிக்க வேண்டும். அதற்கு தி.மு.க. வுடன் இணைந்து செயல்படுவதுதான் ஒரே வழி என்கிற விதத்தில் நாங்கள் ஆலோசிக்க உள்ளோம்.

மாநகராட்சி, நகராட்சி மேயர்களுக்கான இடஒதுக்கீட்டை அ.தி.மு.க அரசு அறிவிக்காமல் அமைதிகாத்து வருகிறது. அதை உடனடடியாக அறிவிக்க வேண்டும். எப்படி இருந்தாலும் சென்னையோ அல்லது வேறு மாநகராட்சிக்கோ இடஒதுக்கீடு அளித்து தலித்துகளுக்கு வழங்கத்தான் வேண்டும். எனவே திருமாவளவன் கோரிக்கையில் நியாமில்லை என்று கூறிவிட முடியாது" என்று தெரிவித்தார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி முதல்வரானது அதிசயம்தான் என்ற ரஜினியின் பேச்சு குறித்து கேட்டதற்கு, அதற்கு நான் விளக்கம் சொல்ல முடியாது என்று பாலகிருஷ்ணன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.