ETV Bharat / state

இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு - சிபிஐ அறிவிப்பு

சென்னை: திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி ஆதரவு தெரிவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

author img

By

Published : Apr 13, 2019, 6:59 PM IST

இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு - சிபிஐ அறிவிப்பு

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில்,


"தமிழகத்தில் காலியாக இருந்த திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும் மே 19 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்த நான்கு தொகுதிகள் உட்பட ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவிக்கிறது. இந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். இந்த தொகுதிகளின் வாக்காளர்கள், இவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில்,


"தமிழகத்தில் காலியாக இருந்த திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும் மே 19 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்த நான்கு தொகுதிகள் உட்பட ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவிக்கிறது. இந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். இந்த தொகுதிகளின் வாக்காளர்கள், இவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

"தமிழகத்தில் காலியாக இருந்த திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதி இடைத்தேர்தலை 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுடன் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது. இந்த நான்கு தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை அறிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இத்தொகுதிகளுக்கான தேர்தல், மே 19 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகும்.

                இந்த நான்கு தொகுதிகள் உட்படஏற்கனவே அறிவிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்குஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவிக்கிறது.

                 இந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும்.

                இந்த தொகுதிகளின் வாக்காளர்கள்இவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திட வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது" என்று அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.