சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 372 என குறைந்துள்ளது.
மேலும் புதிதாக 7 ஆயிரத்து 817 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை ஜுன் 20ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 66ஆயிரத்து 862 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 7 ஆயிரத்து 814 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கும் என 7 ஆயிரத்து 817 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 3 லட்சத்து 57ஆயிரத்து 700 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 24 லட்சத்து 22ஆயிரத்து 497 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.
இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 69 ஆயிரத்து 372 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 17 ஆயிரத்து 43 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 21 ஆயிரத்து 928 என உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் 76 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 106 நோயாளிகளும் என 182 நோயாளிகள் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்து உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கோயம்புத்தூரில் 904 நபர்களுக்கும் ஈரோட்டில் 870 நபர்களுக்கும் சேலத்தில் 517 நபர்களுக்கும் திருப்பூரில் 477 நபர்களுக்கும் சென்னையில் 455 நோயாளிகளும் என அதிக அளவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை மாட்டம்: 5,29,211
கோயம்புத்தூர் மாவட்டம்: 2,12,493
செங்கல்பட்டு மாவட்டம்: 1,54,118
திருவள்ளூர் மாவட்டம்: 1,09,491
சேலம் மாவட்டம்: 83,815
திருப்பூர் மாவட்டம்: 78,724
ஈரோடு மாவட்டம்: 83,658
மதுரை மாவட்டம்: 71,299
காஞ்சிபுரம் மாவட்டம்: 69,331
திருச்சிராப்பள்ளி மாவட்டம்: 67,139
தஞ்சாவூர் மாவட்டம்: 60,777
கன்னியாகுமரி மாவட்டம்: 57,944
கடலூர் மாவட்டம்: 56,539
தூத்துக்குடி மாவட்டம்: 53,564
திருநெல்வேலி மாவட்டம்: 47,071
திருவண்ணாமலை மாவட்டம்: 47,700
வேலூர் மாவட்டம்: 46,290
விருதுநகர் மாவட்டம்: 43,753
தேனி மாவட்டம்: 41,706
விழுப்புரம் மாவட்டம்: 41,632
நாமக்கல் மாவட்டம்: 42,414
ராணிப்பேட்டை மாவட்டம்: 39,987
கிருஷ்ணகிரி மாவட்டம்: 38,559
நாகப்பட்டினம் மாவட்டம்: 37,094
திருவாரூர் மாவட்டம்: 36,073
திண்டுக்கல் மாவட்டம்: 31,066
புதுக்கோட்டை மாவட்டம்: 26,192
திருப்பத்தூர் மாவட்டம்: 27,116
தென்காசி மாவட்டம்: 26,228
நீலகிரி மாவட்டம்: 27,158
கள்ளக்குறிச்சி மாவட்டம்: 25,843
தர்மபுரி மாவட்டம்: 23,423
கரூர் மாவட்டம்: 21,387
ராமநாதபுரம் மாவட்டம்: 19,309
சிவகங்கை மாவட்டம்: 16,922
அரியலூர் மாவட்டம்: 14209
பெரம்பலூர் மாவட்டம்: 10,754
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 1,005
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1,075
ரயில் மூலம் வந்தவர்கள்: 428