நாளை தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் கரோனா பரவல் அதிகரிக்க கூடாது என்பதற்காக பல நடவடிக்கைகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு பணிகளுக்காக முகக்கவசம், உடல் கவச உடை, கிருமிநாசினி,உடல் வெப்ப பரிசோதனை கருவி உள்ளிட்டவற்றை வாங்க சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு ரூ.54 கோடி விடுவித்துள்ளார்.
கரோனா பாதிப்புள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், உடல் வெப்ப நிலை அதிகமுள்ளவர்கள் நாளை மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், அதனை மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா பாதிப்புள்ளவர்கள் வாக்களிக்க தனி ஏற்பாடு; மாநகராட்சி தேர்தல் அலுவலர் பிரகாஷ்