ETV Bharat / state

மரியாதையாக அமமுகவில் இணைந்துவிடு -மிரட்டல் விடுத்த முன்னாள் கவுன்சிலர்

author img

By

Published : Sep 24, 2019, 8:32 PM IST

சென்னை: கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

pettion for police station

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சுகுமார். இவர் அமமுக கட்சியில் இணைந்து வேளச்சேரியின் முன்னாள் கவுன்சிலர் சரவணனுடன் இணைந்து அமமுக கட்சிப்பணிகளை செய்துவந்தார். சில நாட்களுக்கு முன்பு இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இதனிடையே, நேற்று( செப்-23) குருநானக் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சுகுமார் கலந்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த, வேளச்சேரி முன்னாள் கவுன்சிலர் சரவணன், செல்போன் வாயிலாக சுகுமாரிடம், தனக்கு எதிரான கட்சியில் பணியாற்றக்கூடாது மரியாதையாக அமமுகவில் இணைந்துவிடு என்று மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் தாயார்
பாதிக்கப்பட்டவரின் தாயார்

இதற்கு சுகுமார் மறுப்பு தெரிவித்ததால், தனது மகனை ஆட்களை வைத்து தாக்கியதாக சுகுமாரின் தாயார் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், முன்னாள் கவுன்சிலர் சரவணன் செல்போனில் சுகுமாரை மிரட்டிய ஆடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளார்.

ஆட்கள் வைத்து தாக்கப்பட்ட சுகுமார் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சுகுமார். இவர் அமமுக கட்சியில் இணைந்து வேளச்சேரியின் முன்னாள் கவுன்சிலர் சரவணனுடன் இணைந்து அமமுக கட்சிப்பணிகளை செய்துவந்தார். சில நாட்களுக்கு முன்பு இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இதனிடையே, நேற்று( செப்-23) குருநானக் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சுகுமார் கலந்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த, வேளச்சேரி முன்னாள் கவுன்சிலர் சரவணன், செல்போன் வாயிலாக சுகுமாரிடம், தனக்கு எதிரான கட்சியில் பணியாற்றக்கூடாது மரியாதையாக அமமுகவில் இணைந்துவிடு என்று மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் தாயார்
பாதிக்கப்பட்டவரின் தாயார்

இதற்கு சுகுமார் மறுப்பு தெரிவித்ததால், தனது மகனை ஆட்களை வைத்து தாக்கியதாக சுகுமாரின் தாயார் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், முன்னாள் கவுன்சிலர் சரவணன் செல்போனில் சுகுமாரை மிரட்டிய ஆடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளார்.

ஆட்கள் வைத்து தாக்கப்பட்ட சுகுமார் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்ததால் வேளச்சேரி முன்னாள் கவுன்சிலர் தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபரின் தாயார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சுகுமார். டிடிவி தினகரன் கட்சியான அமமுகவில் முன்னாள் வேளச்சேரி மாமன்ற உறுப்பினர் சரவணன் என்பவருடன் சேர்ந்து கட்சியில் அவரோடு வேலை பார்த்து வந்துள்ளார். அவரிடம் வேலை செய்ய பிடிக்காததால் அதிமுக வேளச்சேரி பகுதி செயலாளர் மூர்த்தி என்பவர் கீழ் அதிமுகவில் இணைந்து பணியாற்றத் துவங்கியுள்ளார். நேற்று வேளச்சேரி குருநானக் கல்லூரியில் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சியில் சுகுமார் பங்கு பெற்றதை பார்த்த, அ மு மு க வைச் சேர்ந்த முன்னாள் வேளச்சேரி கவுன்சிலர் சரவணன் செல்போனில் சுகுமாரை மிரட்டியுள்ளார். தனக்கு ஆகாதவர்களுடன் சேரக் கூடாது எனவும் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார். சுகுமார் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆட்களை வைத்து சரமாரியாக தாக்கியதாக சுகுமாரின் தாய் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வேளச்சேரி முன்னாள் கவுன்சிலர் சரவணன் மிரட்டிய ஆடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளார். சுகுமார் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.