ETV Bharat / state

நமது அம்மா படித்தால் பொது அறிவு வளரும் - ஜெயக்குமார் - நமது அம்மா படித்தால் பொது அறிவு வளரும்

முரசொலி பற்றி ரஜினி தவறாக கூறவில்லை என்றும் நமது அம்மாவை படியுங்கள் பொது அறிவு வளரும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

minister jeyakkumar
minister jeyakkumar
author img

By

Published : Jan 17, 2020, 4:53 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை தமிழ்நாடு மக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எம்ஜிஆர் தற்போதும் ஒவ்வொரு அதிமுக தொண்டர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். அவர் புகழ் என்றும் ஓங்கி நிற்கும். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் அதிமுக அரசு பாதுகாத்து வருகிறது. திமுக அரசியல் செய்வதற்கு ஏதுமில்லை என்பதால் இதை கையில் எடுத்து சிறுபான்மையினர் பாதுகாவலர் போன்று நாடகமாடுகிறது.

சிறுபான்மையினருக்கு பாதிப்பு என்றால் அதிமுக எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு தோள் கொடுப்போம். ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் விவசாயிகள் அச்சம் கொள்ள வேண்டாம்" என தெரிவித்தார்.

நமது அம்மாவை படிக்க சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார்

ஜல்லிக்கட்டில் காளை மிதித்து மற்றொரு காளையின் உரிமையாளர் உயிரிழப்பு

மேலும், முரசொலி பற்றி ரஜினி பேசியதில் தவறு ஏதும் இல்லை. அதிமுக அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா எல்லோரும் விரும்பும் பத்திரிக்கை, பொது அறிவு வளரும் எல்லோரும் படியுங்கள் என நகைச்சுவை உணர்வுடன் கூறினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை தமிழ்நாடு மக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எம்ஜிஆர் தற்போதும் ஒவ்வொரு அதிமுக தொண்டர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். அவர் புகழ் என்றும் ஓங்கி நிற்கும். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் அதிமுக அரசு பாதுகாத்து வருகிறது. திமுக அரசியல் செய்வதற்கு ஏதுமில்லை என்பதால் இதை கையில் எடுத்து சிறுபான்மையினர் பாதுகாவலர் போன்று நாடகமாடுகிறது.

சிறுபான்மையினருக்கு பாதிப்பு என்றால் அதிமுக எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு தோள் கொடுப்போம். ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் விவசாயிகள் அச்சம் கொள்ள வேண்டாம்" என தெரிவித்தார்.

நமது அம்மாவை படிக்க சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார்

ஜல்லிக்கட்டில் காளை மிதித்து மற்றொரு காளையின் உரிமையாளர் உயிரிழப்பு

மேலும், முரசொலி பற்றி ரஜினி பேசியதில் தவறு ஏதும் இல்லை. அதிமுக அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா எல்லோரும் விரும்பும் பத்திரிக்கை, பொது அறிவு வளரும் எல்லோரும் படியுங்கள் என நகைச்சுவை உணர்வுடன் கூறினார்.

Intro:


Body:Visuals


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.