ETV Bharat / state

கரோனா அச்சுறுத்தல்: முதலமைச்சர் பழனிசாமி உரை!

author img

By

Published : Mar 25, 2020, 3:59 PM IST

Updated : Mar 25, 2020, 8:26 PM IST

Palanisamy
Palanisamy

15:57 March 25

கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

கரோனா வைரஸ் நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இதனிடையே, கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களிடையே தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாள்களுக்கு நாடு முடக்கப்படுவதாக அறிவித்தார். அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நோய் கண்டறிதல் மையங்களை அமைப்பது, மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்றவற்றுக்காக 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

15:57 March 25

கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

கரோனா வைரஸ் நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இதனிடையே, கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களிடையே தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாள்களுக்கு நாடு முடக்கப்படுவதாக அறிவித்தார். அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நோய் கண்டறிதல் மையங்களை அமைப்பது, மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்றவற்றுக்காக 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Last Updated : Mar 25, 2020, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.